நம் வாழ்க்கைக்கு மிக முக்கியமான மற்றொன்று எளிமையாக இருப்பது. "எளிமை" என்ற வார்த்தைக்கு நிறைய பேர் அர்த்தம் தெரியாமல் தவறாக புரிந்து கொண்டு செயல்படுகிறார்கள். எளிமை என்பது என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம். நம்மிடம் இருப்பதை அனுபவிப்பது அல்லது இல்லாததை நினைத்து வருந்தம் அடையம் இருப்பது. அது தான் எளிமை ஆகும். ஒரு உதாரணத்திற்கு உன்னிடம் 10 பவுன் தங்க செயின், ஒரு கார் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். அதை அனுபவிப்பதில் தப்பில்லை. அது உன்னுடையது. அதை தாராளமாக அனுபவிக்கலாம். அதை அனுபவிக்காமல் எந்த நகையும் போட பிடிக்காது, காரில் போக கூட பிடிக்காது என்று சொல்லி எளிமையாக வாழ்வது என்று எண்ணி தவறு செய்கிறார்கள். ஆனால் அவருக்கு வேறு ஏதாவது ஒரு பொருள் மீது ஆசை இருக்கும் அதையே பிடித்துக் கொண்டு இருப்பார்கள். இல்லாததையே நினைத்து வருத்தம் அடைவதால், இருப்பதையும் அனுபவிக்காமல் தவற விட்டு விடுகிறோம். அதனால் இருப்பதை அனுபவியுங்கள்.
எளிமை என்பது ஆடை, ஆபரணங்களில் அல்ல, மனம் சம்மந்தப்பட்டது. உனது பேச்சில் உனது எளிமை தெரிந்து விடும். அதாவது உண்மை தான் எளிமை. மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே மறைக்காமல் பேசுவது தான் எளிமையாகும். ஒரு உதாரணத்திற்கு ஒருவருக்கு சொத்தின் மீது ஆசை இருக்கும். ஆனால் வெளியே சொல்லும் போது "எனக்கு எந்த ஆசையும் கிடையாது" என்று கூறுவார். உள்ளே தோன்றுவது ஒன்று, வெளியே சொல்வது ஒன்று. இது அவரையே அவர் ஏமாற்றிக் கொள்கிறார் என்று அர்த்தம். அதனால் எளிமையாக வாழ கற்றுக் கொண்டால் இறைவன் உங்கள் பக்கம்.
நன்றி,
அன்புடன்,
ஈஸ்வரி
No comments:
Post a Comment