பணம் தேவைக்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும் என்று கூறி இருந்தேன். சில பேர் பணத்தை உபயோகிப்பதே கிடையாது. அதுவும் தவறுதான். அதாவது "கருமி" தனம் இருப்பது மிகவும் கஷ்டத்தை கொடுக்கும். நான் சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டு வந்தேன். "பணத்தோட அருமை எனக்கு தான் தெரியும்" என்று சொல்லி நிறைய வீட்டில் பணத்தை செலவு செய்வதே கிடையாது. பணத்தை சேர்த்து வைப்பதால் அனுபவித்த சுகம் இருக்காது. பணம் சம்பாதிப்பதே நமது தேவைகளுக்காகத் தான். அதை சரிவர உபயோகிக்க வேண்டும்.
நமது தேவைகளுக்காக செலவு செய்வது தவறில்லை. இன்று அனுபவிக்க வில்லை என்றால் நாளை ஏமாற்றத்தை தரும். போகும் போது எதையும் எடுத்துச்செல்லப்போவதில்லை. எல்லாவற்றையும் விட்டுவிட்டுத்தான் செல்லப்போகிறோம். அதனால் அனுபவிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். பணத்தை அனுபவிக்க கற்றுக்கொண்டால், அதன் மேல் இருக்கும் ஈர்ப்பு குறைந்துவிடும். அதனால் மன அமைதி கிடைத்துவிடும்.
முதலில் நாம் நம் பணத்தை அனுபவிக்க தயங்கினால், தானம் செய்யும் எண்ணம் எங்கிருந்து வரும்?
எனவே தானும் அனுபவித்து பிறருக்கும் கொடுத்து உதவுவோம்.
நன்றி,
அன்புடன்,
ஈஸ்வரி
No comments:
Post a Comment