Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Sunday 30 December 2012


புத்தாண்டு நல்வாழ்த்துகள்:


அனைத்து வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆண்டு இனிய ஆண்டாக இருக்க இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்.

அனைவரும் நோயின்றி நலமுடன் வாழ என் வாழ்த்துக்கள்.



நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி


அக்குபஞ்சரில் மாதவிடாய் பிரச்சனை -எளிதாக தீர்க்கும் பிரச்சனையே:


இனறு பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை பெரிய பிரச்சனையாக உள்ளது. மாதம் ஒரு முறை சரியாக போகவில்லை என்றால் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம், எதனால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

1. Heomoglobin Count குறைவாக இருக்கலாம்.
2. கருமுட்டை வளர்ச்சி குறைபாடு இருக்கலாம்
3. இரத்தம் குறைவாக இருக்கலாம் (Anemic Problem)
4. Thyrod Problem இருக்கலாம்
5. Iron சத்து குறைவாக இருக்கலாம்
6. Tension அதிகமாக இருந்தால்

இது போன்ற பிரச்சனைகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் அவர்களுக்கு மாதவிடாய் கோளாறு ஏற்படும். அதை எளிதாக சரி செய்து விடலாம் அக்குபஞ்சரில்.

Anemic Problem இருப்பவர்கள் (கருப்பு உலர்ந்த திராட்சை அதாவது கருப்பு கிஸ்மிஸ் பழம்) தினமும் 5-7 பழம் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்த உற்பத்தி ஆகிவிடும்.  முதலில் சுறுசுறுப்பு இல்லாமல் சோர்வாக இருந்தவர்கள், பலம் பெற்று விடுவர். நிறைய கீரை வகைகள், மாதுளம் பழம் சேர்த்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் Iron சத்து கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் Estrogen உற்பத்தி பெறவேண்டுமானால் Calcium சத்து தேவைப்படும். அதனால் பேரிச்சம் பழம் சேர்த்துக் கொண்டால் calcium குறைபாடு சரி செய்து விடும்.

மாதம் மாதம் சரியாக கழிவுகள் வெளியேறவில்லை என்றால் பல பிரச்சனைகள் ஏற்படும். உடம்பு உப்புசம் ஏற்பட்டு உடல் பெருத்து காணப்படும். அந்த கழிவுகள் உள்ளே தங்கிவிட்டால் என்ன செய்ய என்று தெரியாமல் முகத்தில் கரும்புள்ளியாக தோன்றிவிடும். முக அழகே கெட்டுவிடும். Tension அதிகமாக இருக்கும். அதனால் கழிவுகள் வெளியேற உடனே நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். திருமணத்திற்கு முன் இருந்தால் உடனே சரி செய்து விடுங்கள், இல்லை என்றால் பின் கருத்தரிக்க இதுவும் ஒரு தடையாக இருக்கும். அக்குபஞ்சரில் இதற்கு மிக அருமையான புள்ளிகள் உள்ளன. எந்த ஒரு side effect  கிடையாது. சில பேருக்கு இந்த மாதவிடாய் வந்தாலே பிடிக்காது என்பார்கள். அப்படி சொல்லாதீர்கள். இது ஒரு மிக அற்புதமான விஷயம். இது நடைபெறுவதால் தான் மிக அழகான குழந்தை நமக்கு கிடைக்கிறது. வயது வந்தவுடன் அதை ஒரு விழாவாகவும் கொண்டாடுகிறார்கள். சரியாக கழிவுகள் வெளியேறாவிட்டால் அதுதான் கட்டிகளாக மாறிவிடும். பின்பு நமக்குத்தான் பிரச்சனை ஏற்படும். எனவே எல்லோரும் நான் சொன்ன Tips ஐ கடைபிடியுங்கள். மாதவிடாய் என்பது ஒரு பெரிய பிரச்சனையே கிடையாது.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Friday 28 December 2012


அன்பு:


அன்பு பற்றி சில விஷயங்களை உங்களிடம் சொல்ல விருப்பப்படுகிறேன். இன்றைய கால கட்டங்களில் அன்பு என்றால் என்ன? என்பது தெரியாமல், அறியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

அன்பு என்பது உள்ளிருந்து வெளிப்படுவதாகும். அன்புக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. அன்பு என்பது நேசிப்பதாகும். குறுகிய மனம் இருக்காது. பரந்து விரிந்து காணப்படும். சுயநலம் இருக்காது. அன்பு உள்ளவர்கள் பிறருக்காக எதையும் செய்வார்கள். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாதது தான் அன்பு ஆகும். அன்பு உள்ளவர்களுக்கு கொடுக்க மட்டும் தான் தெரியும். வாங்கத் தெரியாது.

அன்பு உள்ளவர்களிடம் காதல் மலரும். காதல் தெய்வீகமானது.

அன்புக்கு கோபப்படத் தெரியும். தவறு செய்யும் போது கண்டிக்கவும் தெரியும். அன்பு உள்ளவர்கள் மற்றவரை மனம் அறிந்து நடந்து கொள்வார்கள். பிறருடைய உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள். அன்பு உள்ளவர்கள் என்றும் திருப்தியாக இருப்பார்கள்.

ஆனால் இன்று அப்படி இல்லை. Condition போட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு விஷயம் சொன்னால் அப்படியே கேட்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு பெயர் அன்பு அல்ல அடிமையாகும். அன்பு உள்ளவர்கள் எப்பொழுதும் சுதந்திரம் அளிப்பவர்கள்.

அன்பு உள்ளவர்கள் எப்போழுதும் விட்டுக் கொடுக்கும் மனம் படைத்தவர்கள் ஆவர். ஆனால் அதை சரியாக பயன்படுத்த தெரியாதவர்கள் அவர்களை இழந்து விடுவார்கள்.

எந்த ஒரு உறவாக இருந்தாலும் சரி. உதாரணத்திற்கு அப்பா, பையன் அல்லது அக்கா, தங்கை போன்ற எந்த ஒரு உறவாக இருந்தாலும் சரி அவர்களை சுயநலத்திற்காக பயன்படுத்தாமல், அதாவது என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் பெறுவதற்காக மட்டும் பயன்படுத்தினால் நீண்ட நாள் உறவு நீடிக்காது என்பது உண்மை. அன்பு என்பது எல்லோரிடமும் காட்டப்படுவது ஆகும். குறுகிய மனம் படைத்தவர்கள் மட்டும் தான் தனக்கு பிடித்தவர்கள் மீது மட்டும் அன்பு வைத்திருப்பார்கள். நன்றாக சொல்ல வேண்டும் என்றால் அதற்கு பெயர் அன்பு அல்ல பற்று ஆகும். அன்பு ஒரு துளி கூடிவிட்டால் அது பற்றாக் மாறிவிடும். எனவே எல்லோரும் பற்றை அகற்றிவிட்டு, அன்பாக இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள் ஆகும்

அன்புக்கு இதற்கு மேல் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Thursday 27 December 2012


இத படிங்க முதல்ல ....


இன்று எத்தனை பேருக்கு சுகப்பிரசவம் ஆகிறது? நினைத்தாலே கஷ்டமாக உள்ளது. டாக்டர் கிட்ட check-up-க்கு சென்றால் உடம்பு கொஞ்சம் மோசமான நிலையில் இருக்கிறது. கொஞ்சம் Rest எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது தான் தாமதம் உடனே கடைபிடிப்பார்கள். 10 மாதமும் complete rest தான். பின்பு, எப்படி சுகப்பிரசவம் ஏற்படும்?. முதல் மூன்று மாதம் சிரமமான வேலை செய்ய வேண்டாம் என்று தான் கூறி இருப்பார்கள். அதை இவர்கள் காரணம் காட்டி வேலையே செய்வதில்லை. டாக்டர் தான் சொன்னாங்கன்னு சொல்லி சாதித்து கொள்வது. சோம்பேறிகள் தான் வேலை செய்ய பயந்து கொண்டு இப்படி இருக்க வேண்டும். அந்த காலத்தில் வீட்டிலேயே சுக பிரசவம் ஆகிவிடும். 10 குழந்தைகள் பெற்று எடுத்து இருக்கிறார்கள். ஆனால் இன்று வேலை செய்ய பயந்து கொண்டு 10 மாதமும் Rest எடுப்பார்கள். கண்டிப்பாக சுகபிரசவம் ஆவதற்கு வாய்ப்புகள் குறைவு தான். கடினமானதை தூக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது தவறில்லை. ஆனால் கர்பினிகள் சுத்தமாக எந்த வேலையுமே செய்யாமல் இருக்காதீர்கள். சுகப்பிரசவம் வலிக்கும் என்று எண்ணி நிறைய பேர் ஆபரேசன் செய்து கொள்கிறார்கள். தயவு செய்து ஆபரேசன் செய்து கொள்ள கூடாது என்பது எனது வேண்டுகோள் ஆகும்.

கருத்தறித்தவுடன் நமக்கே தெரியும். உடம்பு மிகவும் சோர்வாக இருந்தால் சிறிது Rest எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி குனிந்து நிமிர்ந்து வேலை செய்தால் தான் நல்லது. Evening தினமும் walking போக வேண்டும்.

சுக பிரசவம் ஆகிவிட்டால் மூன்று நாட்கள் கழித்து நாம் நன்றாக இயங்க முடியும். சீக்கிரம் உடம்பு தேறிவிடும். ஆனால் ஆபரேசன் செய்து கொண்டால் புண் ஆர நாட்கள் ஆகும். முன்பு போல் Normal ஆக இருக்க முடியாது. பல பிரச்சனைகள் ஏற்படும். டாக்டர்கள் சில நல்ல விஷயங்களை உங்களுக்காக சொன்னால் அதை தவறாக உபயோகம் செய்யாதீர்கள். தயவு செய்து வேலைகளை செய்தால் தான் குழந்தை பிறக்கும் போது மிகவும் வலியில்லாமல் எளிதாக பெற்று விடலாம்.

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Wednesday 26 December 2012


எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ?


நமது உறுப்புகள் ஒவ்வொன்றும் நமக்கு கிடைத்த பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு  தயவு செய்து அக்கறை காட்டுங்கள். சிறியதாக இருக்கும் போதே சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். பெரிதாக வலி கூடிய பின்பு உறுப்பை வெட்டி எடுத்துவிடுவது இன்று சாதாரணமாக மாறிவிட்டது. அதை நினைக்கும் போது எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. எந்த எந்த உறுப்பு எங்கே இருக்க வேண்டுமோ அந்த அந்த உறுப்பு அங்கே கட்டாயமாக இருக்க வேண்டும். ஒரு உறுப்பை எடுத்த பின்பு பல பிரச்சனைகள் சந்திக்க வேண்டியிருக்கும். நமது உறுப்புகளில் கத்தி படவே கூடாது. அதை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் வீடு மற்றும் நகை இது போன்ற விஷயங்களுக்கு முக்கியதுவம் கொடுக்கிறோம்.

அதற்காக ஓடி ஓடி உழைக்கிறோம். உடம்பை கூட பேணி காப்பதில்லை. அப்படி ஓடி வீடு, நகை சேர்த்து விடுவோம். ஆனால்
அதை அனுபவிக்க நாம் இருக்க வேண்டும் அல்லவா? அதனால் சற்று சிந்தியுங்கள். எதற்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும் என்று யோசியுங்கள். நாம் நன்றாக இருந்தால் கடைசி வரை நிம்மதியாக இருக்கலாம். அதனால் நமது ஒவ்வொரு உறுப்புகளும் தான் "தங்கம்" போன்றவை அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

ஒரு பைக்கிள் பிரேக் இல்லை என்றால், அதாவது பிரேக்கை மட்டும் எடுத்து விட்டால் நாம் எப்படி சிக்கலில் மாட்டிக் கொண்டு முழிபோமோ, அது போல தான் நமது உறுப்புகள் எதுவானாலும், அதை எடுத்து விட்டார்கள் என்றால், நாம் மிகப்பெரிய சிரமத்தை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே உறுப்புகளுக்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Wednesday 19 December 2012


அக்குபஞ்சரில் அவசர கால சிகிச்சை:


அக்குபஞ்சர் வருமுன் காக்கும் வைத்தியம் என்று பார்த்தோம். அது மட்டும் அல்லாமல் மற்றும் ஒரு சிறப்பு அம்சம் உள்ளது. என்னவென்றால் அவசரகால சிகிக்சையும் அளிக்க முடியும். திடீரென்று Heart-ல் ஒரு பிரச்சனை என்று வைத்துக் கொள்வோம். அதாவது ஒரு படபடப்பு, நெஞ்சு வலி ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். Hospital போகும் வரை அவர்களுக்கு  ஒரு Relief கொடுக்க முடியும். அக்கு புள்ளிகள் இருதய சக்தி ஓட்டப்பாதையில் Toutch Healing கொடுக்கும் போது அவர்கள் Hospital போகும் வரை பாதுகாக்க முடியும் என்பது மிகப்பெரிய உண்மையாகும். என்னுடைய Experience ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு நாள் சென்னையில் Local A/C Bus-ல் சென்று கொண்டு இருந்தேன். அப்பொழுது எனக்கு எதிரே ஒரு family நின்று கொண்டு வந்தது. அதில் அப்பா, அம்மா, ஒரு பையன். அந்த பையனுக்கு 9 வயது இருக்கும். திடீரென்று அந்த பையனை அவனுடைய அப்பா திட்டிக்கொண்டே வந்தார். முகத்தில் ஒரு பயம் தெரிந்தது மற்றும் பதட்டம் தெரிந்தது. அவன் அப்பா அந்த பையனிடம் எப்படியாவது பொறுத்துக்கொள் என்று கூறிக்கொண்டே வந்தார். உடனே நான் சென்று என்ன பிரச்சனை? என்று கேட்டேன். உடனே அவர் சொன்னார், பையனுக்கு வாந்தி வருகிறதாம் என்றார். மேலும் என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் கூறினார். ஏனென்றால் A/c Bus-ல் ஜன்னல்கள், கதவுகள் எல்லாம் complete close-ஆக இருந்தது. அவருக்கு என்ன செய்ய என்று தெரியாமல் பையனை பொறுத்துக் கொள் என்று கூறிக் கொண்டே வந்தார்.

வாந்தியை Control பன்ன முடியுமா என்ன? உடனே நான் ஒரு அக்கு புள்ளியை சொல்லி Touch Healing செய்ய சொன்னேன். ஒரே ஒரு புள்ளி தான். ஒரே புள்ளியில் தூக்கம் மற்றும் வாந்தியின்மை சரி செய்ய முடியும். நான் அந்த புள்ளியை சொன்னவுடன் அவர் நான் யார் என்பதை தெரிந்து கொள்ள கூட யோசிக்காமல் நேரடியாக உடனே புள்ளியை தொட ஆரம்பித்துவிட்டார். எவ்வளவு டென்சனாக இருந்திருப்பார். அந்த புள்ளியை அவர் அமுக்கி கொண்டே வந்தார்.

அப்பொழுது தான் அந்த அதிசயம் நடந்தது. என்ன நடந்தது தெரியுமா? அந்த பையன் நின்றவாரே அவங்க அப்பாவை அணைத்தவாரே அவர்கள் இடம் வரும்வரை தூங்கிவிட்டான். இடம் வந்தவுடன் இறங்கும் போது பையனின் தந்தை நன்றி சொல்லி இறங்கினார். இவ்வளவு பெரிய டென்சனிலில் இருந்து அவருக்கு விடுதலை தந்ததை நினைத்து சந்தோஷம் அடைந்தேன்.

இது ஒரு சின்ன உதாரணம் தான். ஆனால் எவ்வளவு பெரிய விஷயத்தையும் அக்கு புள்ளிகளால் அவசர சிகிச்சை செய்ய முடியும் என்பது தான் உண்மை.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Monday 17 December 2012

எந்த நோயும் உங்களை நெருங்க பயப்படும்:


நோய் வந்த பின் என்ன செய்யலாம்? என்பதற்கு நிறைய மருத்துவ ஆலோசனைகள் கிடைக்கும். ஆனால் என்னுடைய நோக்கம் அது அல்ல. எப்படி நோய்கள் வராமல் தடுப்பது என்பது மட்டுமே. இது  இதுவரை யாருமே சொல்லாதது.

நமது உறுப்புகளை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்துக் கொண்டாலே எந்த ஒரு நோயும் வரவே வராது. அதுவும் கல்லீரல் மிகவும் குளிர்ச்சியாக வைத்துக்கொண்டால் சர்க்கரை நோய் மற்றும் மஞ்சள் காமாலை இது போன்ற பல நோய்கள் உருவாகாமல் தடுக்க முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும்.?

நாம் பல அருவிகளில் குளித்து இருப்போம். குளித்துவிட்டு வந்தவுடன் பார்த்தால் நமது கண்கள் மிகவும் சிவந்து காணப்படும். எவ்வளவுக்கு எவ்வளவு கண்கள் சிவக்கின்றதோ அவ்வளவு உஷ்ணம் நமது உடம்பில் இருக்கின்றது என்று அர்த்தம். ஆனால் அப்படி அருவிகளில் குளிப்பதால் அந்த உஷ்ணம் வெளியேறிவிடும். உறுப்புகளும் நன்றாக இயங்க துவங்கிவிடும். அதனால் தான் குளித்துவிட்டு வந்தவுடன் நன்றாக பசி எடுக்கும். அருவிகளில் குளிக்கும் போது என்ன நடக்கிறது என்றால், நமது கண்கள் வழியாக குளிர்ச்சி உள்ளே செல்லும் மற்றும் வாயை திறக்கும் போது நாக்கிலும் தண்ணீர் படும்.  இந்த இரண்டும் நனையும் போது நேரடியாக நீரின் குளிர்ச்சி கல்லீரல் சென்றடையும். 

இதனால் கண் நோய் மற்றும் கண் பார்வை போன்ற கோளாறுகள் குணமாகும். Beauty Parlor ல் வெள்ளரிக்காயை வட்டத்துண்டுகளாக்கி கண்கள் மேல் வைப்பார்கள். இதனால் கண் குளிர்ச்சியடையும்.

இதில் இருந்து என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கண் மற்றும் நாக்கு தண்ணீரில் நனைய வேண்டும் என்பது தான். இதை என்றோ ஒரு நாள் மட்டும் செய்யாமல் தினமும் நமது கடமைகளில் ஒன்றாக சேர்த்துக் கொண்டால் போதும் உடல் உறுப்புகள் குளிச்சியாகிவிடும்.

இதை எப்படி வீட்டில் செய்யலாம். Shower Bath -ல் தினமும் குளிக்கலாம். வேறு எப்படி செய்யலாம் என்று நீங்களும் சிறிது யோசியுங்கள். ஆனால் கண்கள் தண்ணீரில் நனைய வேண்டும் என்பது முக்கியம். ஒரு நாளைக்கு அரை மணி நேரம் கண்கள் மற்றும் நாக்கு நனையப்பட வேண்டும்.

நீச்சல் தெரிந்தவர்கள் நீச்சல் அடிக்கலாம். நீங்கள் இதை தினமும் செய்து வந்தால் நிச்சயமாக பல மாற்றம் ஏற்படும்  என்பது உண்மை. எனவே எல்லோரும் உறுப்புகள் குளிச்சியடைய இன்றே கடமையை செய்ய ஆரம்பியுங்கள். எல்லோருடைய உறுப்புகளும் குளிச்சியடைய வேண்டும், எந்த நோயும் இல்லாமல் வாழ வேண்டும் என்பது என் விருப்பம் ஆகும்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Sunday 16 December 2012


உங்கள் உள்ளங்கைகளில் அக்குபஞ்சர்:


அக்குபஞ்சருக்கு திரும்ப வருவோம். தியானம் என்ற அருமையான விஷயத்தை பேசியவுடன் வாசகர்கள் கொஞ்சம் பயந்து விட்டார்கள். தியானம் செய்யுங்கள் என்று சொல்கிறார்களே என்று கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நல்ல விஷயம் எல்லோருக்கும் சென்று அடைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆகும். அதனால் எல்லா பதிவுகளையும் தவறாமல் படியுங்கள், பயன் அடையுங்கள்.

கால் பாதத்தில் அக்கு புள்ளிகள் இருந்தது போல் உள்ளங்கைகளிலும் அக்கு புள்ளிகள் அமைந்துள்ளது. கால் பாதங்களில் எந்த உறுப்புகளுடன் தொடர்பு இருந்ததோ அதே போல் உள்ளங்கையிலும் எல்லா உறுப்புகளுக்கும் தொடர்பு உள்ளது. அதனால் நேரம் கிடைக்கும் போது, அந்த நேரததை வீணாடிக்காமல் உள்ளங்கையை நீவி விடலாமே ! பல உறுப்புகள் வேலை செய்யும்.


இதற்கு என்று தனியாக வேலை செய்ய  யாருக்கெல்லாம் தேவைப்படும் தெரியுமா? பாத்திரம் தேய்க்க பயப்படுபவர்களுக்கு! என்னங்க பாத்திரம் தேய்பதற்க்கும் அக்குபஞ்சருக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. சம்பந்தம் இருக்கிறது. பாத்திரம் தேய்க்கும் போது பல உறுப்புகளில் வேலை நடக்கும். ஆனால் பாத்திரம் தேய்த்தால் கை தேய்ந்துவிடும்  என்று எண்ணி வேலை செய்வதில்லை. அதில் இவ்வளவு அருமையான விஷயம் அமைந்துள்ளது. உடனே ஆண்கள் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? முடிந்தால் நீங்களும் செய்யலாம் இல்லை என்றால் உள்ளங்கைக்கு வேலை கொடுங்கள். வண்டி ஓட்டும் போது உங்களுக்கு உள்ளங்கை வேலை நடக்கும். இதில் பல நன்மைகள் நடக்கும்.
இதில் என்ன பெரிய விஷயம் தெரியுமா? வீட்டு வேலைக்கு ஆள் வைத்திருப்பவர்களுக்கு பெரிய நஷ்டம் !  வீட்டு வேலை செய்யும் வேலைகாரிக்குத்தான் Bonus! பாத்திரம் தேய்த்து , பல உறுப்புகள் நன்றாக இயங்க துவங்கிவிடும் மற்றும் மாத சம்பளம் வேறு! என்ன அதிஷ்டம்! அதனால் வேலைக்கு ஆள் வைப்பதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்! அதிஷ்டத்தை பெறுங்கள்.


வாசகர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். கொஞ்சம் எனக்கு ஊக்க மருந்து கொடுங்கள், அதாங்க உங்கள் விமர்சனங்களை பின்னூட்டம் இடுங்கள். அதுதான்  மேலும் எனக்கு எழுதுவதற்க்கு  தூண்டுகோலாக இருக்கும்.  உங்கள் விமர்சனங்கள் எனக்கு boost up கொடுக்கும்.


நன்றி,

அன்புடன்,

ஈஸ்வரி


Thursday 13 December 2012


புதிய திருப்பம் ஏற்படட்டும் !


தியானம் செய்யுங்கள் என்று சொல்லி விட்டீர்கள். அதை செய்ய நேரம் இல்லை என்று கூறாதீர்கள். ஏன் என்றால் அது மிகப் பெரிய பொய். ஏனென்றால் ஏற்கனவே நாம் எல்லோரும் நமக்கே தெரியாமல் தியானம் செய்து கொண்டு தான் இருக்கிறோம். அதுவே நமக்கு தெரியவில்லை.

தியானம் என்றால் என்ன? ஒரு இடத்தில் அமைதியாக அமர்வது அல்ல. அப்பொழுது தான் நிறைய குழப்பங்கள் வரும். "மனம் ஒருமனப்படும்" எல்லாமே தியானம் ஆகும். நமக்கு பிடித்த விஷயங்கள் ஏதாவது ஒன்றை நாம் மனம் லயித்து செய்து கொண்டு இருப்போம். அது எது என்று மட்டும் கண்டுபிடியுங்கள். அதை தினமும் செய்தாலே போதும் "கர்ம வினை" அழியும்.

ஒரு உதாரணத்திற்கு "பாட்டு படிப்பது" நமக்கு பிடித்த விஷயமாக இருக்கும். அதை படிக்கும் போது சுற்றி இருப்பவர்களை மறந்து விடுவோம். மனம் லயித்து விடும். இதுவே தியானம் ஆகும். இது போல் ஒவ்வொருவருக்கும் ஒன்று பிடிக்கும். அது எது என்று கண்டு பிடியுங்கள். உங்களை நீங்களே திரும்பி பாருங்கள். மற்றவர்களை பார்ப்பதை தவிருங்கள்.  "மன அமைதி" கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும்.

நான் சொன்ன எல்லா விஷயங்களை படித்து விட்டு, "பரவாயில்லை இவுங்க நன்றாக சொல்லுறாங்க" என்று பேசுவதை விட்டுவிட்டு கடைபிடியுங்கள்! புதிய திருப்பம் ஏற்படும் உங்கள் வாழ்வில்!

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி


Tuesday 11 December 2012


இறைவனின் பிரமாண்டம் : (பகுதி -2)


கடவுள் என்ன தேவையோ அதையெல்லாம் முன்பே அறிந்து அனைத்தையும் அளித்துள்ளார். ஆனால் அதையெல்லாம் குழப்பம் செய்து தவறாக வாழ்ந்துவிட்டு பின்பு எல்லம் வல்ல இறைவனை திட்டுகிறோம். ஆனால் நமக்கு என்னவெல்லாம் தந்தார் என்பதை இறைவனின் பிரம்மாண்டம் என்ற தலைப்பில் ஏற்கனவே தந்துள்ளேன். படிக்காதவர்கள் படித்துவிட்டு வரவும்.

வேறு என்ன அற்புதம் செய்துள்ளார்? உடம்புக்கு மட்டும் அல்லாமல் மனதுக்கும் நிறைய தந்துள்ளார். ஆம், நாம் பல பிறவிகளில் நிறைய பாவங்களை சேர்த்து வைத்திருப்போம். அதை இந்த பிறவியில் கஷ்டங்களாக அனுபவித்துக்கொண்டே இருந்தால் என்ன செய்வது? இதற்கு வழிதான் என்ன?

அவ்வளவுதான் நீங்கள் எல்லா கஷ்டங்களையும் அனுபவித்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை என்று உங்களை கை விட்டு விட வில்லை. அதற்காக ஒரு வழியும் வகுத்து தந்துள்ளார்.  அந்த வழிதான் "தியானம்" என்ற மிக அற்புதமான ஒன்று. உங்கள் பாவங்கள் அனைத்தும் அழித்துவிடும். "தியானம்" என்பது மன அமைதியாகும்.

அதனால் உடம்புக்கு தேவையானதையும், மனதுக்கு தேவையானதையும் இறைவன் அளித்துள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த இரண்டையும் நன்றாக உபயோகிப்பது யார் கையில் இருக்கிறது? நம் கையில் தான்! எல்லா பிரச்சனைக்கும் வழி தந்துள்ளார். எல்லா சக்தியும் நமக்குள்ளே இருக்கிறது என்பதுதான் உண்மை. எனவே இறைவன் தந்த பரிசை உபயோகிக்க கற்றுக்கொண்டாலே போதும் வாழ்க்கையில் ஜெயித்துவிடலாம்.

இறைவனிடம் போய் கேட்கும் அளவிற்கு அவர் எந்த குறையும் நமக்கு வைக்கவில்லை.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Monday 10 December 2012

நாமே நமது நோய்களைப் பற்றி அறிந்து கொள்வது எப்படி?



நாமே நமது நோய்களைப் பற்றி அறிந்து கொள்வது எப்படி என்பதை பற்றி கூற இருக்கிறேன். உடம்பில் ஏதேனும் வலி தோன்றினால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டுமா? அல்லது சிறிய நோய் தானா? என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு உதாரணத்திற்கு காய்ச்சல் ஒரு நாள் மட்டும் வந்தால் அது சிறிய நோய் தான். ஆனால் அதுவே ஒரு வாரம் வரை விடாமல் தொடர்ந்து இருந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்குபஞ்சரில் 2 sittings போட்டால் போதும் காய்ச்சல் ஓடிப்போய்விடும். வாயுத்தொந்தரவு இருந்தால் அவர்களுக்கு முதுகு வலி மற்றும் ஏதாவது ஒரு இடத்தில் பிடித்துக் கொள்ளும். அதுவும் வலி ஏற்படும். அதற்காக பயந்து கொண்டு இருக்கத் தேவையில்லை. வாயு தொந்தரவு இருந்தால் நெஞ்சு கூட வலிப்பது போல் இருக்கும். ஆனால் அது நெஞ்சுவலி கிடையாது. அது போல் நாமே நம்மை புரிந்து கொள்ள சின்ன டிப்ஸ் தரப்போகிறேன்.

1.வயிற்றில் இடது பக்கம் தொடர்ந்து பல நாட்கள் வலித்தால் வயிறு, சிறுகுடல், மண்ணீரல் அல்லது கர்ப்பபை பிரச்சனை என்று அறிந்து கொள்ளலாம். 

2.வயிற்றில் வலது பக்கம் தொடர்ந்து பல நாட்கள் வலித்தால் கல்லீரல், பித்தப்பை, பெருங்குடல் போன்ற பிரச்சனை என்று அறிந்து கொள்ளலாம். 

3.அது போல் மார்பு பகுதியில் இடது பக்கம் வலித்தால் இருதயமும், வலது பக்கம் வலித்தால் நுரையீரல் பிரச்சனை என்று அறிந்து கொள்ளலாம்.

4.அடிவயிற்றில் வலி மற்றும் பின் பக்க வலி என்றால் சிறுநீரகத்தில் பிரச்சனை என்று அறிந்து கொள்ளலாம். 

5.பின்பக்க முதுகில் நடுவில் மேலிருந்து கீழ் வரை வலித்தால் spinal card பிரச்சனை என்று அறிந்து கொள்ளலாம்.

இதை ஏன் கூறுகிறேன் என்றால் ஒரு வாரத்திற்கு மேல் வலி இருந்தால் நிச்சயமாக அது பெரிய பிரச்சனை தான். உடனே மருத்துவரிடம் அனுகவும். தாமதம் செய்ய செய்ய நமக்குததான் கஷ்டம்.

Simple -ஆக சொல்ல வேண்டும் என்றால், எந்த இடத்தில் கை வைத்தால் அதிகமாக வலிக்கிறதோ. அந்த இடத்தில் என்ன உறுப்பு இருக்கிறதோ, அந்த உறுப்பில் தான் பிரச்சனை இருக்கும் என்பதை நாமே தெரிந்து கொள்ள முடியும்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் சின்ன பிரச்சனையை கூட பெரியதாக சொல்லி விடுகிறார்கள். உடனே பயந்து விடுகிறோம். அதனால் பணம் நிறைய விரயம் ஆகிவிடும். நேரமும் வீணாகிவிடும். அதனால் எல்லோரும் சற்று நம் உடம்புடன் இணைந்து இருந்தால் நாமே அறிந்து கொள்ள முடியும் என்பதில் ஐயம் இல்லை. உடம்பில் நிறைய வலி இருந்தும் சிலர் மருத்துவரிடம் அணுகுவது இல்லை. அதுவும் தவறாகும். எப்பொழுது அணுக வேண்டும். அணுக கூடாது என்ற விழிப்புணர்வு வர வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

சாதாரண நோய்களுக்கு சில நேரங்களில் பல Test எடுத்துப் பார்ப்போம். கடைசியில் ஒன்றும் இல்லை என்பார்கள். இதனால் எவ்வளவு செலவு மற்றும் மன அழுத்தம் கூட. ஆனால் உண்மையில் நாள் பட்ட வியாதியாக இருக்கும். அதை அலட்சியமாக விட்டு விட்டு பின் வருந்துவது. இது இரண்டுமே தவறு தான். அதனால் யோசித்து செயல்படுங்கள்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Sunday 9 December 2012

எந்த மருத்துவத்திலும் இல்லாத ஒன்று .....


அக்குபஞ்சர் சிகிச்சையில் நோய் மட்டும் குணமாக்கப்படுவதில்லை. மிகமிக முக்கியமான ஒன்று அக்குபஞ்சரில் அதிகம் அமைந்துள்ளது. மற்ற எந்த மருத்துவத்திலும் இல்லாத ஒன்று இந்த அக்குபஞ்சரில் அமைந்துள்ளது. அதை கூறுவதற்க்கு முன் சில விஷயங்களை சொல்லிவிட்டு வருகிறேன்.

நோய் வருமுன் காக்க வேண்டும் என்று சிலர் பாதுகாக்கின்றோம். அதையும் தாண்டி சில நோய்கள் வந்துவிடுகின்றன. அதுவும் சரி ஏற்றுக்கொள்ளக் கூடியதே, ஏன்னென்றால் இது இயற்கையான சில விஷயங்கள் ஆகும். ஆனால், பிறக்கும் குழந்தைகளுக்கு கூட பிறக்கும் போதே நோய்களுடன் பிறக்கின்றன. சில நோய்கள் நமக்கே தெரியாமல் நம்மை கஷ்டப்படுத்துகிறது ஏன்? என்ன காரணம்? எந்த தவறும் செய்யாத பிறந்த குழந்தைக்கு ஏன் இந்த தண்டனை? இது எல்லோருக்கும் இருக்கும் கேள்வி ஆகும்

அது தான் "கர்மவினை" ஆகும்.  அது என்ன கர்மவினை?. கர்மவினை என்றால் பல பிறவிகளில் செய்த பாவங்கள் தான் இந்த பிறவிகளில் கஷ்டங்களாக வெளிப்படுகின்றன. அதை யாரலும் தடுக்க முடியாது. ஆனால் கர்மவினை முடிந்தவுடன் தானாகவே அதற்கான விடைகள் கிடைத்து நோய்கள் சரியாகிவிடும். அதுவரை நம்மை படுத்திவிடும்.

(பல பிறவிகளில் செய்த பாவங்கள் தான் இந்த பிறவிகளில் கஷ்டங்களாக வெளிப்படுமா? அது எப்படி? என்று கேட்பவர்கள் பின்னூட்டம் இடுங்கள் விடை தருகிறேன். ஏனென்றால் அது பற்றி பேச ஆரம்பித்தால் அதற்க்காக தனி Blog- எழுதவேண்டும்.) 

இந்த கர்மவினைக்கும் அக்குபஞ்சருக்கும் என்ன சம்பந்தம் என்றால், முழுமையாக தீர்வு அக்குபஞ்சரில் மட்டும் தான் இருக்கின்றன்.  

அது என்ன தீர்வு என்றால் கர்மவினையை அழிக்கும் புள்ளிகள் நம் அக்குபஞ்சரில் மட்டும் தான் உள்ளன.

கர்மவினைக்கான புள்ளிகளை போட்டுவிடும் போது பல பிறவிகளில் நாம் செய்த பாவங்கள் அழியும் என்பது மிக மிக உண்மையான விஷயம் ஆகும். பல நாட்கள் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்கள் கூட இந்த இடத்தில் ஊசிகளை போட்டு விட்டால், Depression குறைந்து தூக்கிவிடுவார்கள் மற்றும் நோய்களும் சரியாகிவிடும்.

இது எந்த மருத்துவத்திலும் கிடையாது. இந்த புள்ளிகளை கைகளால் தொடக்கூடாது. ஊசிகள் மட்டும் போட்டுக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து ஒருவாரம் போட்டால் நிறைய வித்தியாசம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே இந்த மருத்துவத்துறை எனக்கு கிடைக்கக கூட நாம் பல பிறவிகளில் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்ள பெருமைபடுகிறேன். இதை படிக்கும் ஒவ்வொருவருமே புண்ணியம் செய்தவர்கள் தான்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Thursday 6 December 2012


அன்புடைய வாசகர்களுக்கு,

உங்களின் மேலான ஆதரவிற்க்கு எனது பனிவான நன்றிகள்.

இந்த குறுகிய நாளில் இவ்வளவு வாசகர்கள் கிடைத்துள்ளார்கள் என்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள். இன்னும் நிறைய விஷயங்கள் வர இருக்கின்றன.

மூன்று நாட்கள் நான் வெளியூர் செல்ல இருப்பதால் அடுத்த பதிவு வரும் திங்கட்கிழமை வெளிவரும்.


நன்றி,


அன்புடன்,
ஈஸ்வரி


விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை:


நோய் உருவாகுவதைப் பற்றி பார்த்தோம். அதில் சில காரணங்கள் கூறி இருந்தேன். அதில் இன்னொரு முக்கியமான காரணம் என்னவென்றால் "மன அழுத்தம்" ஆகும். நாம் எல்லோரும் சந்தோசமாக வாழ வேண்டும் என்று தான் நினைக்கிறோம். அதையும் தாண்டி "Stress"  மற்றும்  "Depression" வந்து விடுகிறது. எதனால் உருவாகிறது? அடிப்படை காரணம் என்னவென்றால் "ஆசை" .

1."ஆசையே அழிவுக்கு காரணம்" என்று ஒருவரியில் படித்திருப்போம். ஆனால் அந்த மிகப்பெரிய விஷயத்தை ஒருவரியில் படித்து தெரிந்து வைத்திருக்கிறோம்.

2."பிறரை சார்ந்து வாழ்வது" இந்த இரண்டும் தான் நம்மை கவலை பட செய்கிறது. பிறர்  நம்மை பற்றி என்ன கூறுகிறார் என்பது நம்முடைய மிகுந்த ஆர்வம் ஆகும். இது இயற்கை எல்லோருக்கும் இருக்கக்கூடியதே.

ஆசை என்று எடுத்துக் கொண்டால் அவர் அவருடைய ஆசை நியாமான ஆசை என்று தான் கூறுவர். ஆசைக்காகத்தான் நாம் பிறவியை எடுத்து இருக்கிறோம். நியாயம் எது அநியாயம் எது என்று எப்படி உணர்ந்து கொள்வது? மிக எளிமையாக கூறி விடுகிறேன்,

 *  ஆசை என்பது முடிந்தவரை பிறருக்கு துன்பம் தராத ஆசையாக இருந்தால் மட்டும் போதும். நான் நன்றாக படிக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இது போன்ற ஆசைகள் பிறருக்கு நன்மை, நமக்கும் நன்மையே ஏற்படுத்தும். நமக்கு பிடித்த ஆசை மற்றவருக்கு பிடிக்காமல் இருக்கும். அது துன்பத்தை ஏற்படுத்தும்.  அப்படி ஏற்படும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாது.  உதாரணத்திற்க்கு பெற்றோர்கள் தம் மகன் டாக்டர் ஆக வேண்டும் என்று நினைப்பதும் மகனின் கனவு பெரிய ஓவியராக வரவேண்டும் என்று நினைப்பதும். பின் பையன் ஓவியரான பின் பெற்றோருக்கு பிடிகாமல் போவது நடை முறையில் நாம் பார்க்கும் விஷயங்கள். தம் ஆசைகாக பிடிக்காத விஷயத்தை தினிப்பது இருவருக்கும் துன்பமே. பெற்றோருக்கும் துன்பம், மகனுக்கும் துன்பம். இதுவே கவலையாக மாறி depression ஆக மாறிவிடும். இது போல் தான் எல்லா ஆசைகளும் துன்பத்திற்க்கு காரணமாகிறது.

* இந்த நேரங்களில் தான் முக்கியமான ஒன்று தேவை. அது என்னவென்றால் "விட்டுக்கொடுப்பது" "யார் பக்கம் உண்மை அதிகம் இருக்கிறதோ" அவர்களுக்கு அந்த ஆசையை விட்டு கொடுத்துவிட்டால் பிரச்சனை வராது.

பிறர் சொல்லும் வார்த்தைகளை வைத்து தான் நாம் வாழ்கிறோம். ஒரு முடிவு எடுப்பதற்க்குள் பல குழப்பங்கள் ஏற்படும். பிறர் நம்மை பற்றி சொல்லும் கருத்துக்கு முக்கியதுவம் கொடுக்க தேவையில்லை. நம்மைபற்றி நமக்கு தெரியும் போது பிறர் சொல்லும் கருத்தை உள்வாங்க தேவையில்லை.

ஆசை மற்றும் பிறர் கருத்துக்கு முக்கியதுவம் கொடுப்பதை நிறுத்திவிட்டால் எந்த ஒரு "Stress"  மற்றும்  "Depression" ஏற்படாது. நாம் மனதை அமைதியாக வைத்துக் கொண்டால் தான் உடம்பு நன்றாக இருக்கும். எனவே எல்லோரும் விட்டுக் கொடுத்து வாழ கற்றுக் கொண்டால் போதும் இனி வாழ்க்கை சூப்பராக இருக்கும்.

                "விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை. 
                  கெட்டுப்போபவர் விட்டுக்கொடுப்பதில்லை"


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Wednesday 5 December 2012

காக்க காக்க வரும் முன் காக்க !



அக்குபஞ்சர் என்பது வரும்முன் காக்கும் வைத்தியம் ஆகும். நமது உடலில் நோய் முற்றி பெரிய வியாதியாக மாறும் வரை நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம். அந்த விழிப்புணர்வை கொண்டு வரவேண்டும். இறைவன் நமக்கு ஒரு நோய் ஆரம்பம் ஏற்படும் போது சில அறிகுறிகள் தெரியும் படி படைத்துள்ளார். நாம் அதை உதாசீனப்படுத்திவிடுகிறோம். பின்பு முற்றாமல் என்ன செய்யும்?

"நேற்று வரைக்கும் நன்றாக இருந்தார் திடீரென்று Heart Attack வந்திருச்சு" என்பார்கள். திடீரென்று சர்க்கரை நோய் வந்துவிட்டது என்று பலர் கூறுவார்கள். அது எல்லாம் உண்மையல்ல, அறியாமையால் கூறுவது ஆகும். இறைவன் Heart-யை மிக பத்திரமாக இருப்பதற்கு மூன்று உறை தாண்டிய பின்பு படைத்துள்ளார். அதை தாண்டி சென்று Heart Attack ஆகிறது என்றால் நாம் எவ்வளவு கவனக்குறைவாக இருந்திருக்க வேண்டும். அதனால் நம்மிடம் இருக்கும் தவறை மாற்றி கொண்டாலே போதும். பல நோய்களில் இருந்து வெளியே வந்துவிடலாம்.

நன்றாக தெரிந்து கொள்ளுங்கள், உடம்பின் உள்ளே பிரச்சனை என்றால் வெளியே தெரியப்படும் வலியாகவோ, அரிப்பாகவோ, தடிப்பாகவோ அல்லது வாந்தி போன்ற எந்த ஒரு அறிகுறியாவது தோன்றும். அதை வைத்து தெரிந்து கொண்டு நாம் உடனே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். தயவு செய்து உடம்புக்கு அக்கரை காட்டுங்கள். ஏன் என்றால் நம்முடைய " ஆத்மாவை" தாங்கி பிடித்துக் கொண்டு இருப்பது இந்த உடம்பு தான். நாமே நம் உடம்பை மதிக்கவில்லை என்றால் பிறர் எப்படி நம்மை மதிப்பார்கள். ஏன் சொல்கிறேன் என்றால் உடம்பு நன்றாக இருந்தால் தான் Public நம்மை மதிக்கும் ஏதாவது பெரிய நோய் வந்துவிட்டால் யாரும் அருகில் கூட வரமாட்டார்கள். எந்த உதவியும் செய்ய மாட்டார்கள்.

எடுத்துக்காட்டாக ஒருவர் சாதாரண சளியால் அதிகமாக இருமுகிறார் என்றால்,  அனைவரும் அவர் அருகில் செல்ல யோசிப்பர். ஏதாவது நோய் கிருமிகள் நம்மை தாக்கிவிடும் என பயப்படுவர். ஆனால் வெளியில் சொல்ல மாட்டார்கள். ஒரு சாதாரண சளி மற்றும் இருமலுக்கே இப்படி என்றால், பெரிய பெரிய நோய்களுக்கு எப்படி மக்களிடம் Response இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

அதனால் நம் உடம்பை கெடுத்துக் கொண்டு பிறருக்கு எந்த சிரம்மத்தையும் கொடுக்காதீர்கள். அதனால் "வரும் முன் காக்க" கற்றுக் கொள்ளுங்கள்.  


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Tuesday 4 December 2012

உங்கள் நோயை வேறுடன் பிடுங்க வேண்டுமா?



அக்குபஞ்சர் treatment எவ்வளவு நாள் எடுத்துக்கொள்ள வேண்டும்? என்ற சந்தேகம் எழும். அதைப்பற்றி கூற இருக்கிறேன். நம் வியாதியின் அளவை பொறுத்து தான் சொல்லமுடியும். சின்ன பிரச்சனை என்றால் 3 sittings -ல் சரி செய்யலாம். பெரிய பெரிய பிரச்சனை என்றால் சில நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். பல வருடம்  நாள்பட்ட நோயாக இருந்தால் அதற்கு ஏற்றால் போல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இது என்ன ஒரு பெரிய விஷயம் என்றால் அக்குபஞ்சர் Needle போட்டுக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டும் அல்லாமல் வேறுடன் உள் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யும். அதாவது திரும்ப திரும்ப வராது என்பது உறுதி. மாத்திரை அதிகம் எடுத்துக்கொண்டால் நமது எதிர்ப்பு சக்தி குறைந்து விடும் என்பது மிக மிக முக்கியமான உண்மையாகும். அதனால் தயவு செய்து விழிப்புண்ர்வு ஏற்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆகும்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Sunday 2 December 2012

ஆச்சரியமான உண்மை?





அக்குபஞ்சர் சிகிச்சையின் மகிமை பற்றி கூற இருக்கிறேன். அக்குபஞ்சர் நீடில் போட்டால் எப்படி நோய்கள் சரியாகின்றன ? என்ற சந்தேகங்கள் நிறைய பேருக்கு உண்டு. அதை பற்றிய சந்தேகங்களை சரி செய்ய கடமை பட்டுள்ளேன்.

ஒரு உதாரணத்திற்க்கு இருமல் என்று வைத்துக்கொள்வோம். அதற்கான சக்தி ஒட்டப்பாதையில் நாம் நீடில் போடுவோம். அது சரியாகிவிடுகிறது எப்படி? அந்த சக்தி ஓட்டப்பாதையில் தடை ஏற்பட்டு இருக்கும். அந்த தடையை மட்டும் தான் நாம் எடுத்து விடுகிறோம். மீதமுள்ள வேலையை உடம்பு தானே பார்த்துக் கொள்ளும். மீண்டும் சொல்கிறேன், உடம்பிற்க்கு தன்னைதானே சரி செய்து கொள்ளும் சக்தி  உள்ளதால் நாம் வெறும் தூண்டுகோளாக இருந்து நீடில் மட்டும் போட்டால் போதும்,  மீதியை அதுவே பார்த்துக் கொள்ளும்.

நம் உடம்பை எவ்வளவு சக்தி உள்ளதாக கடவுள் படைத்துள்ளார். நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. நம் தெளிவு என்னவென்றால், நம் உடம்பு தானே வேலையை செய்து கொள்ளும் என்ற உண்மையை புரிந்து கொண்டால் போதும். Allopathy Treatment  கூட மாத்திரையை கொடுப்பது மட்டும் தான் Doctor வேலை. மீதி வேலையை செய்வது யார்?  நம் உடலில் உள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் தான். நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நமக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் என்று தான் கூறுவேன். அதை தயவு செய்து கெடுத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் வெளியில் கிடைக்கும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆனால் உடம்பின் உள் உறுப்புக்கு முக்கியத்துவம் தருவதில்லை.

வேலை செய்யும் போது கையில் கத்திபட்டு இரத்தம் வந்துவிடுகிறது. கையை கிழித்துக் கொள்வோம். இது ஒரு சாதாரண விஷயம். ஆனால் நன்றாக கவனியுங்கள். முக்கியமான ஒன்றை கூறப்போகிறேன். கையில் கிழித்த இடத்தில் சிலர் கொஞ்சம் மருந்து போடுவர் மற்றும் சிலர் ஒன்றுமே போட மாட்டார்கள். ஆனால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து பாத்தால் அந்த புண் ஆறியிருக்கும். அந்த வெட்டுப்பட்ட இடம் மூடியிருக்கும். அதை நாம் கவனித்து இருக்க மாட்டோம். இனி மேல் கவனியுங்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் உடம்பிற்க்கு தன்னை தானே சரி செய்து கொள்ளும் ஆற்றல் உண்டு என்பது மிகப்பெரிய உண்மையாகும்.

"என்னைப் பொறுத்த வரையில் உடல் உறுப்புகள் தான் டாக்டர் என்று சொல்வேன்" வெளியில் இருக்கக்கூடிய நாம் வெறும் தூண்டுகோள்கள் அவ்வளவு தான்.

எல்லோருக்கும் வரும் சந்தேகம். அக்குபஞ்சர் நீடில் உள்ளே ஏதோ மருந்து அடைத்து வைத்துள்ளார்கள், அதனால் தான் நோய் சரியாகிறது என்பது.  ஆனால் அக்குபஞ்சர் நீடிலில் எந்த ஒரு மருந்தும் கிடையாது. ஆனால் மிக அற்புதமாக வேலை செய்யும். அதனால் இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. எந்த ஒரு side effect இல்லாமல் மற்றும் வலியும் இல்லாமல் நோய் குணமாகும் நல்ல ஒரு இறை மருத்துவம் ஆகும்

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

படம் : நன்றி கூகுள்

Thursday 29 November 2012


ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் !  ஆனால் ...


நாம் சாப்பிடும் உணவு வகைகளில் கூட பல சந்தேகங்கள் எழுகின்றன. என்ன சந்தேகம் எழுகின்றன ? இதை சாப்பிடலாமா? இதை சாப்பிட கூடாதா ? என்று பல சந்தேகங்கள் எழும். இதை சாப்பிட்டால் அலர்ஜி. வாழைக்காய் சாப்பிட்டால் வாயு தொந்தரவு. உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாயு தொந்தரவு. கத்தரிக்காய் சாப்பிட்டால் அரிப்பு ஏற்படுகிறது என்று எல்லாம் சிலர் அறியாமையால் சாப்பிடாமல் விட்டுவிடுகின்றனர். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. கடவுள் படைப்பில் எல்லா வகையான உணவு வகைகளும் மிக சத்துள்ள பொருட்கள் ஆகும்.

நாம் நம் உடம்பில் ஏறகனவே சில பிரச்சனைகளுடன் இருப்பதால் அதை சாப்பிடும் போது அதை ஏற்க மறுக்கும். ஓர் உதாரணத்திற்கு என்னவென்றால், வாழைக்காய் எடுத்துக்கொள்வோம், வாயு தொந்தரவு என்று நினைத்து சாப்பிடாமல் இருப்பார்கள். ஆனால் ஏற்கனவே வயிறு ஜீரண சக்தி இல்லாமல் இருப்பதால் இந்த வாழைக்காய் மேலும் சேர்க்கும் போது அது வாயு தொந்தரவு போல் தெரியும். அதனால் வயிற்றில் ஜீரண சக்தி சரியாக நடைபெற்றால் எல்லாவிதமான உணவு வகைகளையும் எடுத்துக்கொள்ளலாம். பொறுமையாக மென்று சாப்பிட்டாலே போதும் எதற்கும் பயப்படத்தேவையில்லை.

சிலர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இனிப்பே சாப்பிடாமல் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள். அறியாமையால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் கசப்பை அதிகமாக சேர்த்துக் கொள்வார்கள்.  சர்க்கரை நோய் உள்ளவர்கள் கசப்பை மட்டும் அதிகமாக சேர்க்கத் தேவையில்லை. அறுசுவை உணவுகளையும் சமமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கேட்பார்கள் நாங்கள் இனிப்பை சாப்பிடலாமா என்று தாராளமாக சாப்பிடலாம். அதாவது உங்கள் நாக்கு உங்களுடன் பேசும். இது மிகப்பெரிய உண்மை. நமக்கு என்ன தேவையோ அது நாக்கு சொல்லும். அப்பொழுது அந்த சுவையை மட்டும் கொடுத்தால் போதும், ஒன்றுமே செய்யாது. உங்கள் நாக்கு தான் உங்களுடன் இருக்கும் டாக்டர்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பை கொஞ்சம் கூட சேர்க்காமல் விட்டுவிட்டால் சர்க்கரை குறைந்தாலும் மயக்கம் வந்துவிடும். அதனால் இனிப்பை நாக்கு கேட்கும் போது சிறிது எடுத்துக்கொள்ளலாம். அதற்காக ஒரேடியாக உட்காந்து உட்காந்து ஒரு கிலோ அல்வாயை சாப்பிடீர்கள் என்றால் தூக்கிவிடும். தூக்கிவிடும் என்றால் என்னவென்று சர்க்கரை நோயாளிகளுக்கு தெரியும். இப்ப தலைப்பை ஒரு தடவை படியுங்கள். அதனால் தான் தலைபிலேயே ஒரு "ஆனால்" போட்டுள்ளேன்.

பொதுவாக எல்லோரும் எல்லா உணவுகளையும் சாப்பிடலாம் ஆனால் எல்லாம் ஒரு லிமிட்டில் சாப்பிடுங்கள். என்ன சொல்ல வருகிறேன் என்றால், "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்ற பழமொழிக்கு ஏற்ப எல்லாம் சுவையும் கலந்து எடுத்துக்கொள்ளுங்கள். சமமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

அதனால் கடவுள் படைப்பில் உள்ள அனைத்து உணவு வகைகளும் மிகவும் அற்புதமானவை ஆகும். எல்லோரும் எதையும் ஒதுக்காமல் சாப்பிட்டு இன்புறுக !


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Tuesday 27 November 2012

கருவிழி பற்றி ஓர் ஆய்வு:



கண்ணின் கருவிழியை பகுப்பாய்வு செய்வதே இரிடோலஜி (Iridiology) ஆகும். கண்ணின் கருவிழியில் தோன்றக்கூடிய நிறம், குறியீடுகள் அமைப்பு மற்றும் இவற்றில் தோன்றும் மாறுபாடுகளைக் கொண்டு நம் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி பல மதிப்புமிக்க தகவல்களை அறிந்து கொள்ளலாம், அதாவது நோயை பற்றி அறியலாம்.

கண்ணின் கருவிழியில் இருந்து நாம் தகவல்களை விரைவாகவும், வலி இல்லாமலும் செலவின்றியும் எளிதாக பெறமுடியும். சிறிய பூத கண்ணாடியை கொண்டு கண்டறியலாம். ஐரிஸ் (Iris) என்று அழைக்கப்படும் கருவிழியானது கண்ணிற்கு தனித்தன்மையுள்ள நிறத்தை அளிக்கிறது.

கண்ணின் கருவிழியை கொண்டு தீவிர நிலை (acute), நாள்பட்ட நிலை (chronic), மீளா நிலை (Degenerative) இந்த மூன்று நிலையில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ளலாம்.

தீவிர நிலை (acute)          - நோயின் தொடக்க நிலை
நாள்பட்ட நிலை (chronic) - நாள்பட்ட நோய்
மீளா நிலை (Degenerative) - நோய் முற்றிய நிலை

எந்த ஒரு செலவும் இல்லாமல உடனே அறிந்து கொள்ள கண்ணின் கருவிழி மிகவும் உபயகரமாக உள்ளது. கருவிழியைப் பார்த்து உடலில் எந்த உறுப்பில் பிரச்சனையாக இருக்கிறது என்பதை கண்டு கொள்ள முடியும். ஆனால் குறிப்பிட்டு இந்த நோய் தான் ஏற்பட்டு இருக்கிறது என்பதை கூற முடியாது.

உதாரணத்திற்கு கருப்பையில் பிரச்சனை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். ஆனால் கருப்பையில் கட்டி இருக்கிறதா? பெரியதாக இருக்கிறதா? அல்லது சிறியதாக இருக்கிறதா? அல்லது வேறு எதாவது பிரச்சனை இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள முடியாது. இது தான் என்பதை உறுதியாக கூறமுடியாது.

ஆனால் கருப்பையில் தான் பிரச்சனை என்பதனை நன்றாக அறிந்து கொள்ள முடியும். இது போல் உறுப்புகளின் பிரச்சனைகளை கண்ணின் கருவிழியில் தெரிந்து கொள்ள முடியும்.

Scan,  X-Ray மற்றும் Laproscopy இது போன்ற Test எல்லாம் எடுக்கத்தேவையில்லை. கருவிழியை வைத்து எந்த உறுப்பில் பிரச்சனை என்று தெரிந்து கொண்டு அதனுடைய சக்தி ஓட்டப்பாதையில் அக்குபக்ஞசர் முறையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோய்களை சரி செய்ய முடியும்.

கண்ணின் வெள்ளை விழியை பார்த்து குறிப்பிடும் வைத்தியம் அல்ல. இது முழுக்க முழுக்க கண்ணின் கருவிழியை மட்டுமே பார்த்து ஆராய்வதாகும்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Monday 26 November 2012


நமக்கே தெரியாமல் நாம் செய்யும் அற்புதங்கள்.


நான் இந்த பதிவில் உங்களுக்கு மிகப்பெரிய உண்மையை சொல்லப்போகிறேன். என்னவென்றால் நம் உடம்பில் எல்லா இடங்களிலும் அக்கு புள்ளிகள் அமைந்துள்ளன. அதுவே நமக்குத் தெரியாது. கடவுள் தினமும் ஒரு முறையாவது அக்கு புள்ளிகளை தொட வேண்டும் என்று நினைத்து மிக அற்புதமாக அமைத்து கொடுத்துள்ளார். அது எப்படி தெரியுமா? நாம் தினமும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவது மற்றும் காலை நீராடல் செய்வதும் தான்.

அதெப்படி பல் துலக்குவதற்கும், காலை நீராடல் செய்வதற்கும்- அக்கு புள்ளிகளுக்கும் என்ன சம்பந்தம்? என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. நாம் குளிக்கும் போது உடம்பில் அனைத்து இடங்களையும் நமக்கே தெரியாமல் தேய்த்து குளிக்கும் போது அக்கு புள்ளிகள் மிக அற்புதமாக வேலை செய்ய துவங்குகின்றன. அதனால் தான் காலை எழுத்தவுடன் பல் துலக்குதல், குளித்தல் என்று நம் முன்னோர்கள் வழி நடத்தி சென்றார்கள். நாம் அதை தொடர்கிறோம்.

நாம் எல்லோரும் வழக்கமாக நினைப்பது சோப்பு போட்டு குளித்தவுடனும், தண்ணீர் உடலில் பட்டவுடனும் நாம் சுறுசுறுப்பு ஆகிவிட்டோம் என்று. ஆனால் அது மட்டுமல்ல அதையும் தாண்டி உடம்பை தேய்த்து குளிக்கும் போது அக்கு புள்ளிகள் வேலை செய்வது தான் மிகப்பெரிய உண்மையாகும். அதனால் தான் எவ்வளவு சோம்பேறித்தனம் இருந்தாலும் குளித்தவுடன் சுறுசுறுப்பு ஆகிவிடுகிறோம். பல் தேய்க்கும் போது ஈறுகளிலும் அக்கு புள்ளிகள் இருக்கின்றன. அதனால் தான் காலையில் அந்த இரண்டையுமே முதல் கடமையாக வைத்துள்ளார்கள். இவைகளை நாம் கடமை என்று செய்துகொண்டு இருக்கின்றோம். ஆனால் அது கடமை அல்ல நமக்கே தெரியாமல் நாம் செய்யும் அற்புதங்கள்.

அதனால் உடம்பில் சோம்பேறித்தனம் இருந்தால் இரண்டு தடவை குளியுங்கள், உற்சாகம் பெறுவீர்கள் மற்றும் உடம்பின் பல உறுப்புகள் மிக அற்புதமாக வேலை செய்யும்.

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி


ஒரே கல்லில் இரண்டு மாங்காய்:


நாம் நம் உடம்பை சரியாக பார்த்துக் கொள்ளாதலால் சில நோய்கள் உருவாகின்றன. சில நோய்கள் வெளிப்புறத்தில் இருந்தும் உருவாகின்றன. தொற்றுகளால் சில நோய்கள் உருவாகின்றன. அதில் வெளிப்புற காரணங்களில் உருவாகும் நோய்களில் காய்ச்சல் தான் அதிகம். எப்படி? எதனால் உருவாகின்றன?. கொசு தொல்லையால் தான் உருவாகின்றன. பொதுவாக நாம் கொசுவை ஒழிப்பதற்க்கு பலவகைகளில் முயற்சி செய்கிறோம். ஆனால் நான் ஒரு சின்ன டிப்ஸ் உங்களுக்கு தரப்போகிறேன். அதை கடைபிடித்தால் கொசுக்களை விரட்டிவிடலாம் மற்றும் எந்த ஒரு side effect- ம் கிடையாது.

அது என்னவென்றால் நாம் எரிந்த கரியின் அனலை எடுத்தும் கொண்டு அதில் கொஞ்சம் மூலிகை இழையான வேப்ப இலையை அதில் போட்டால் போதும், சில நிமிடங்களில் அதில் இருந்து கசப்பு கலந்த புகை வெளியேறும். அந்த புகையின் தாக்கத்திற்க்கு பயந்து கொசுக்கள் வெளியேறிவிடும். இதை செய்யும் போது சன்னல்கள் திறந்து வைத்து விட்டு செய்யுங்கள். அப்பொழுது தான் அது வெளியேறும். நமக்கும் அந்த புகையின் சுவாசம் உடம்புக்கு நல்லது. கொசு வெளியேறிய பின்பும் சன்னல்கள் மூட தேவையில்லை.  "ஒரே கல்லில் இரண்டு மாங்காய்". கொசு இல்லை என்றால் பாதி நோய் வராமல் தடுத்துவிடலாம். இதை உடனே முயற்சி செய்யுங்கள். நல்ல பலனை அடையுங்கள்

எரிந்த கரியின் அனலை தயார் செய்ய எளிமையான வழி:

கம்யூட்டர் சாம்பிராணி இரண்டு அல்லது மூன்றை எடுத்துக்கொண்டு,  அதை எரிய வைத்த பின்பு வரும் அனலில் வேப்ப இலைகளை போடவும்.

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Saturday 24 November 2012

செலவும் கிடையாது- பலனும் உண்டு: நடைப்பயிற்சியின் நன்மைகள்:



நடைப்பயிற்சி என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இதைபற்றி என்ன கூற போகிறேன் என்று பார்க்கிறீர்களா? ஆம். அதில் நிறைய உண்மைகள் பொதிந்து உள்ளன. பொதுவாக உடம்பில் தேவையில்லாத கொழுப்பு அதிகம் ஆகும் போது மருத்துவர் கூறுவது சிறிது நடைபயிற்சி செய்யுங்கள் எல்லாம் சரியாகிவிடும் என்பார்கள். மற்றும் சில நோய்களுக்கும் சேர்த்து நடக்க சொல்வார்கள். எதற்கெல்லாம் சொல்வார்கள் என்றால் மிகை அழுத்தம், நீரழிவு நோய், உடல் பருமன் போன்ற பலவற்றிக்காக நடக்க சொல்வார்கள். ஏன் சொல்கிறார்கள்? எப்படி சரியாகிறது? சிலருக்கு சரியாகுவது இல்லை? ஏன்? . இதைபற்றி பார்க்கலாம்.

பிரதிபலிப்பு முறை (Reflexology) என்பது ஒரு "மாற்று மருத்துவ முறையாக" அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.  பிரதிபலிப்பு முறை என்பது கைகளிலும், கால்களிலும் உள்ள உடல் உறுப்புகளை பிரதிபலிப்பு பகுதிகளை கட்டை விரல்களால் அழுத்தி நீவி விட்டு சிகிச்சை அளிக்கும் முறையாகும். பிரதிபலிப்பு முறை நோய்களை தீர்ப்பது மட்டும் அல்லாமல் "வருமுன் காக்கும்" தடுப்பு முறையாகவும் பயன்பட்டு வருகிறது.

நம் உடலில் உள்ள பல உறுப்புகளின் தொகுப்பு "மண்டலம்" எனறு அழைக்கப்படுகிறது. ஒரு மண்டலத்தில் உள்ளடங்கும் பல உறுப்புகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும் இருக்கின்றன. நரம்பு  மண்டலத்தில் உள்ள அனைத்தும் கால் பாதத்தில் சென்றடைகின்றன. நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் கால் பாதத்திற்க்கும் தொடர்பு உடையவை. எனவே தான் நாம் நடக்கும் போது பல நோய்கள் சரியாகின்றன,

நடக்கும் போது நாம் போசாமல் நடக்க வேண்டும். பின்பு கைகளை நன்றாக வீசி நடக்க வேண்டும் என்று எல்லாம் செய்கிறோம். ஆனால் முக்கியமான ஒன்றை மட்டும் செய்யாமல் விட்டுவிடுவதால் தான் சிலருக்கு Result இல்லாமல் போய்விடுகிறது.

இனிதான் ஒரு ரகசியத்தை சொல்ல போகிறேன். நடக்கும் போது காலில் செருப்பு மற்றும் Shoe இல்லாமல் நடக்க வேண்டும். அதாவது வெறும் காலுடன் நடக்க வேண்டும் அப்பொழுது தான் கால் பாதம் தரையில் பட்டு நமக்கே தெரியாமல் pressure செய்யபட்டு உறுப்புகள் Activate ஆகிவிடும். இப்படி செய்தால் நிச்சயமாக நல்ல பலன்கள் கிடைக்கும். உடனே சந்தேகம் வரும் அப்பொழுது காலில் கல், மண் பட்டு கால் சேதம் ஆகிவிடுமே? என்று கேட்பீர்கள். அதாவது Park போன்ற இடங்களுக்கு சென்று நடந்தால், அந்த நடைபாதையில் (speicfied place for walk) நடக்கும் போது மட்டும் காலணிகளை அகற்றி நடக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் வீட்டின் முன்னாடி இடம் இருந்தால் சிமென்ட் தரையில் நடக்கலாம். ஆனால் பாதயாத்திரை செல்லபவர்கள் காலில் எதுவும் போடாமல் தான் நடப்பார்கள். அவர்கள் பாதயாத்திரை முடித்து வந்தவுடன் நல்ல பலன்கள் இருக்கும். உடம்பு மற்றும் மனம் இரண்டுமே நன்றாக இயங்க துவங்கிவிடும்.

நடைப்பயிற்சியினால் என்ன நோய்கள் சரியாகின்றன என்பதைப்பற்றி பார்க்கலாம்.

1. தோள்பட்டை
2. காது
3. கண்
4. தைராய்டு
5. சைனஸ்
6. நுரையீரல்
7. வயிறு
8. கல்லீரல்
9. பித்தப்பை
10.கணையம்
11.குடல் நோய்
12.சிறுநீரகம்
13.அட்ரினல் சுரப்பி
14.இடுப்பு தசைகள்
15.இடுப்பு தொடை நரம்பு
16.முழங்கால்
17.இடுப்பு வலி
18.அண்டகம்
19.விந்தகம்
20.கருப்பை
21.விதைப்பை
22.தோல் மண்டலம்
23.நிணநீர்
23.கருப்பை குழாய்

இவை அனைத்தும் நடைப்பயிற்சி செய்தால் சரியாகின்றன என்பது மிகமிக உண்மையான விஷயம் ஆகும். எதற்க்காக அணைத்து நோயும் சொல்லியிருக்கிறேன் என்றால் இதன் முக்கியத்துவம் தெரிந்தால் தான் எல்லோரும் நடைபயிற்சி செய்வீர்கள் என்று தான் கூறிகின்றேன். எனவே நடைபயிற்சியின் முக்கியத்துவம் தெரிந்து எல்லோரும் தினமும் அரைமணி நேரமாவது நடக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆகும்.

ஒரு உதாரணத்திறக்கு காலில் மூட்டுவலி மற்றும் தசைவலி என்று வைத்துக்கொள்ளுங்கள். நாம் என்ன செய்வோம் தைலம் எடுத்துக் கொண்டு அந்த குறிப்பிட்ட இடத்தில் மசாஜ் செய்து விடுவோம். அது சரியாகிவிடும். தோலில் உள்ள சிறுசிறு துழைகள் வழியாக தைலம் செல்லும் மற்றும் நாம் செய்யும் மசாஜ்ஜும் சேர்ந்து வேலை செய்யும். எனவே நோய்கள் சரியாகினறன்.

பெரிய பெரிய spa, malls, massage centre -களில் மசாஜ் செய்து கொள்வதால் உடம்பு சுறுசுறுப்பு மற்றும் வலி நிவாரணம் கிடைக்கின்றன. ஆனால் எல்லாராலும் அதிக பணம் கொடுத்து மசாஜ் செய்து கொள்ள இயலாது. எனவே மேலே குறிப்பிட்டுள்ளபடி நடந்து கொண்டால். செலவும் கிடையாது- பலனும் உண்டு.

டிப்ஸ்:

நடக்க முடியாதவர்கள், கால்களை நாமே கைகளால் பாதத்தில் அழுத்தம் கொடுத்தால் போதும் நோய்கள் சரியாகும்.

Wednesday 21 November 2012

அதிரும் உண்மைகள் - இறைவனின் பிரமாண்டம் :



உடம்பு தன்னை தானே சரி செய்து கொள்ளும் ஆற்றல் உடையது என்பது நாம் அறிந்து கொள்ளவேண்டிய ரகசியம் ஆகும்.

நம் உடம்பில் உள்ள உறுப்புகளைப் படைத்த இறைவன் மிகவும் பிரமாண்டமானவர். நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவ்வளவு அதிசயம் மற்றும் கொடை வள்ளல் என்றே கூற வேண்டும். அது என்ன என்பதைப் பற்றி பார்ப்போம். ஐந்து புலன்கள் என்ன என்று பார்ப்போம்.

1.கண்
2.மூக்கு
3.காது
4.வாய்
5.உணர்வு

என்ன அற்புதம் இந்த ஐந்தும் நமக்கு கிடைத்தது நினைத்து மகிழ வேண்டும்.

கண்களால் எத்தனை விதமான சுகங்களை அனுபவிக்கிறோம் மற்றும் மீதமுள்ள நான்கும் அப்படித்தான். பகலில் கண்களால் பார்ப்பது மட்டும் அல்லாமல் இரவும் நம்மால் பார்க்க முடிகிறது. அதற்கும் ஒருவகையான் "Melotonin" என்ற ஹார்மோன் சுரப்பால் தான் பார்க்க முடிகிறது. அது மட்டும் அல்லாமல் "அகத்தின் அழகு முகத்தில்  தெரிந்துவிடும்" என்பார்கள். அத்தனை சக்தி கண்களுக்கு உண்டு. கவலை படும் போது கண்களில் நீர் வருகிறது. அதில் கெட்ட நீர் வெளியேறுகிறது. அதிலும் ஒரு வகை அற்புதம் உண்டு. நாம் அழுவதால் கூட ஒரு  நல்ல விஷயம் நடக்கிறது.

"காது" எடுத்துக் கொண்டால் உடலின் பல நோய்களுக்கு அதற்கான நிவாரண புள்ளிகளான உடல் பிரதிபலிப்பு புள்ளிகள் காதில் உள்ளன. காதில் எல்லா நரம்பு மண்டல தொடர்பு உள்ளது. மூளையில் உள்ள கபால நரம்பு, உதர நரம்பு ஆகியவை உள்ளன. அதனால் காது கேட்பதற்க்கு மட்டும் இல்லாமல் பல நன்மைகள் உள்ளன. அதனால் தான் விநாயகப் பெருமானுக்கு "தோப்புக்கரணம்" போடும் போது உடம்பு பல வேலைகள் செய்யும். மிகவும் நல்ல பலனைத் தரும்.

"நாக்கு" எடுத்துக் கொண்டால், மிகவும் அற்புதமானது. எல்லா சுவைகளையும் அறிய முடிகிறது. சுவை என்று ஒன்று இல்லை என்றால் நாம் சாப்பிட முடியாது. எல்லா சுவையும் அறியும் சக்தி நாக்குக்கு உண்டு. அதை நமக்கு கொடுத்துள்ளார். வயதானவுடன் எல்லா உறுப்புகளும் வலு இலக்க ஆரம்பிக்கும் போது நாக்கு சுவை குறைந்து விடுவதால் தான் சாப்பிட முடியாது. உணவு குறைந்துவிடும். எதை சாப்பிட்டாலும் ஒன்றும் Taste தெரியவில்லை என்பார்கள். எனவே நாக்கின் அற்புதம் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

"மூக்கு" என்று எடுத்துக் கொண்டால் சுவாசம் செய்வதற்க்கு மற்றும் நுகர்தல் என்பதற்கு பயன்படுகிறது. இரண்டுமே மிக முக்கியமான ஒன்று. மணத்தை(smell) அறிந்து கொள்வதற்க்கு எவ்வளவு எளிதாக உள்ளது. காற்றை சுவாசம் செய்வதால் தான் நாம் உயிரோடு இருக்கிறோம். எவ்வளவு பெரிய பிரமாண்டம்.

"உணர்வு"  என்பது மிகவும் அற்புதமான ஒன்று. எல்லா விஷயங்களுக்கும் உணர்வு மிகவும் தேவை. கவலை, இன்பம் போன்ற நிகழ்வுகள் எல்லாமே உணர்வுகள் தான் காரணம். "எந்திரன்" படத்தில் போல உணர்வு இல்லை என்றால் எப்படி இருக்கும் என்பதை "சூப்பர் ஸ்டார் ரஜினி" சார் நமக்கு அழகாக நடித்து காட்டி இருப்பார். எனவே சொல்லத் தேவையில்லை. எல்லா விதமான feelings உணர்வு மூலம் வெளிப்படுமாறு கடவுள் நமக்கு அளித்துள்ளார்.

இதையெல்லாம் ஒரு நாள் நாம் அமைதியாக உட்கார்ந்து நினைத்துப் பார்த்தால் நமது கவலை பாதி குறைந்து விடும். மூளை என்பது மிக முக்கியமான வேலைகளை செய்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் எத்தனை கவசம் அளித்துள்ளார். குறைந்தது மூன்று கவசம் அளித்த பிறகு தான் உறுப்பு உள்ளே இருக்குமாறு அமைத்துள்ளார். உதாரணத்திற்க்கு இருதயம் எடுத்துக் கொண்டால்  Myocardium, Pericardium மற்றும் Endocardium என்று மூன்று உறைக்கு பிறகே இருதயம் இயங்குமாறு அளித்துள்ளார்.

ஒரு னிதன் காலையில் இருந்து இரவு வரை உழைத்துக் கொண்டு மட்டும் இருந்தால் அவனுக்கு ஓய்வு தேவை என்று "தூக்கம்"  என்ற மிகப்பெரிய விஷயத்தை நமக்கு அளித்துள்ளார். கற்பனை செய்து பாருங்கள், தூக்கம் என்று ஒன்று இல்லாமல் வேலை செய்து கொண்டு இருந்தால் எப்படி இருக்கும்? நினைக்கவே மிகவும் பயமாக இருக்கிறது. எவ்வளவு பெரிய அற்புதம். நிறைய விஷயங்கள் ஒன்று கெட்டுவிட்டால் இன்னொன்று வைத்து கொள்ளட்டும் என்று நிறைய கொடுத்துள்ளார். கண்கள் இரண்டு, காது இரண்டு, கைகள் மற்றும் கால்கள், சிறுநீரகம் இரண்டு, மூக்கின் துவாரம் இரண்டு, Fallopian Tube இரண்டு.  இப்படி எத்தனை அதிசய படைப்புகள் நமக்கு கொடுத்துள்ளார்.

எல்லாவற்றிக்கும் மேல் ஆண், பெண் கலப்பினால் ஒரு படைப்பே உருவாக்குமாறு படைத்து உள்ளார். குழந்தை செல்வம் கிடைக்குமாறு செய்து இருக்கிறார். நினைத்து பார்க்கவே மிகவும் அதிசயம். இருக்கும் போது மனிதனை மதிக்கிறார்கள், இறந்த பிறகும் ம்னிதனுக்கு மட்டும் தான் சில சடங்கு சம்பிரதாயங்கள் செய்கிறார்கள். அதுவும் மிகப்பெரிய கொடை என்று தான் கூற வேண்டும். மிருங்கள் மற்றும் வேறு பிராணிகள் எதுவும் இறந்துவிட்டால் யாரும் அழுவதுவும் இல்லை அதற்கு எந்த சடங்கும் செய்வதில்லை. மனிதனுக்கு மட்டும் தான் இந்த சிறப்பு.

அது போல் எந்த ஒரு நோய் வருவதற்க்கு முன்பும், நமக்கு எதோ வகையில் symptons தெரியும்படி கடவுள் படைத்துள்ளார். எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் திடீர் என்று நோய் வந்து விட்டால் எவ்வளவு ஒரு சிரமம். கொஞ்சம் யோசித்து பாருங்கள்.  

"கடவுள் நமக்கு கொடுத்ததை வைத்து, நாம் எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுத்து விடுகிறோம்" என்று முன்பே தெரிந்த அவர் நோய்க்கான மருந்தையும் சேர்த்து படைத்துள்ளார். எத்தனை விதமான மூலிகைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள்  நமக்கு படைக்கப்பட்டு இருக்கிறது. அதை கொண்டு சரி செய்து வாழட்டும் என்று அருள் செய்கிறார். அதனால் நாம் நோய் பார்த்து பயப்படத்தேவையில்லை. எல்லா அற்புதங்களும் நமக்கு அளித்துள்ளார். மிகவும் பிரம்மாண்டமானவர். மிகவும் அறிவுமயமானவர் அவர் ஒருவரே.

எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம் "எனவே இறைவனுக்கு முடிந்தால் தினமும் ஒருமுறை நன்றி சொல்லுங்கள்" யாரும் அவரை திட்டாதீர்கள்.

இத்தனை பிரமாண்டமான படைப்புகள் படைத்துவிட்டு அமைதியாக இருக்கிறார். ஆனால் நாம் எல்லாம் "என்னால் தான் நடக்கிறது" என்று வாழ்கிறோம்.

எனவே அனைவரும் எளிமையாக வாழ்வோம், நிம்மதியாக இருப்போம் என்பது மட்டுமே என்னுடைய விருப்பம்.

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி 

Monday 19 November 2012


ஆசை, அலட்சியப்படுத்துதல் தான் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:

இந்த இரண்டு காரணத்தின் அடிப்படையில் தான் நோய்கள் உருவாகின்றன.

ஆசை:

நாம் நம் நாக்கை கட்டுப்படுத்த முடியாமல் இதை சாப்பிட வேண்டும், இதை சாப்பிட கூடாது என்று எதையும் யோசிக்காமல் சாப்பிடுவது. நமக்கு என்ன எல்லாம் பிடிக்குமோ அதையெல்லாம் சாப்பிடுவது. நமக்கு எது எல்லாம் பிடிக்காதோ அதை எல்லாம் சாப்பிடாமல் இருப்பது. உதாரணத்திற்க்கு மது அருந்துவது, சிகரெட் புகைப்பது கெடுதி என்று தெரிந்தும் அதை எனக்கு பிடிக்கும் ஏதோ ஒரு போதை இருக்கிறது என்று ஆசைக்காக செய்வது. "கசப்பு" உடம்புக்கு தேவை ஆனால் அதை நாம் உணவில் எடுத்துக் கொள்வதே கிடையாது. ஏனென்றால் அது எனக்கு பிடிக்காது என்று கூறிவிடுவது. இது போல் நாம் அறியாமல் செய்யும் தவறுகளால் தான் நோய்கள் உருவாகுவதற்கு நாமே காரணம் ஆகிவிடுகிறோம்.

எந்த ஒரு பொருளாக இருந்தாலும் சரி அதை அதிகம் சாப்பிடக் கூடாது. "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதனால் ஆசைக்காக எதையும் சாப்பிடாமல் ஆயுளுக்காக சாப்பிடுங்கள். "பசிக்காக சாப்பிடுங்கள் - ருசிக்காக சாப்பிடாதீர்கள்"  உதாரணத்திற்க்கு 5 இட்லி தான் சாப்பிட முடியும் என்றால் அதனோடு நிறுத்திக் கொண்டுவிட்டால் எந்த பிரச்சனையும் கிடையாது. ருசியாக இருக்கிறது என்பதற்காக இன்னும் 4 இட்லி சேர்த்து சாப்பிடுவது தான் தவறு. தயவு செய்து யாருக்காவது மேலே குறிப்பிட்ட பழக்கவழக்கங்கள் இருந்தால் அதை விட்டு விடுங்கள். ஆசைக்காக சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொண்டு நோய் உருவாவதற்க்கு நாமே ஏற்படுத்திக் கொடுக்காமல் நல்ல உணவுகளை எடுத்துக் கொண்டு உடம்பை பேணிக் காப்போம்.

அலட்சியப்படுத்துதல்:

நம் உடம்புக்கு என்ன தேவைப்படுகிறது  என்பதை உடம்பே நமக்கு சொல்லிவிடும். நம் உடம்பு நம்முடன் பேசும், ஆனால் நாம் அதை கவனிக்ககூட நேரம் இல்லாமல் அதை நாம் அலட்சியப்படுத்தி விடுகிறோம்.

1.நமக்கு பசிக்கும் போது சாப்பிடுவது கிடையாது, பிறகு சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று இருந்துவிடுவது.

2.நமக்கு தண்ணீர் தாகம் எடுக்கும் போது தண்ணீர் குடிக்காமல் இருப்பது, இது போன்ற சில விஷயங்கள் செய்வதால் தான் நோய்கள் உருவாகின்றன.

3.Urine - வரும் போது உடனே வெளியேற்ற வேண்டும். ஆனால் பிறகு வெளியேற்றிக் கொள்ளலாம் என்று இருந்து விடுவது. இது போன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது.

அதனால் ஆசை,  அலட்சியப்படுத்தல் இரண்டையும் சரி செய்து கொண்டாலே போதும் பல நோய்கள் நம்மை விட்டு ஓடிவிடும், நோய்கள் வரவே வராது.

உணவின் அளவு எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர் அவர் உடம்பிற்க்கு ஏற்ப எடுத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு வேலை செய்கிறோமோ அவ்வளவு உணவு எடுத்துக்கொள்ளலாம். நாம் சாப்பிடும் போது நம் வயிறு நிறைந்தவுடன் ஏப்பம் வரும். ஏப்பம் வந்தவுடன் உணவை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏப்பம் தான் நம் வயிறு நிரம்பியதற்கான அறிகுறி ஆகும்.

சிகரெட் மற்றும் மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு பலவிதமான நோய்கள் ஏற்படும். ஏன் உயிரே போய்விடும். மீண்டும் மீண்டும் கூறுகிறேன் தவறான பழக்கங்கள் இருந்தால் விட்டுவிடுங்கள்.

"எவ்வளவுக்கு எவ்வளவு ருசித்து குடித்தீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவுக்கு வலித்து, துடித்து தான் உயிர் போகும்"

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Sunday 18 November 2012

அக்குபஞ்சரில் தீரும் நோய்கள்:



மேலே ஐந்து மூலகத்தைப் பற்றி பார்த்தோம். அக்குபஞ்சரில் எதை எல்லாம் சரி செய்ய முடியும் என்ற சந்தேகம் எழும். அதை பற்றி கூற இருக்கிறேன்.

1. எல்லா விதமான வலிகளை போக்கவல்லது .

2. நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனை மற்றும் மனம் சம்மந்தப்பட்ட பிரச்சனை சரி செய்ய முடியும்.

3. காய்ச்சல், சளி, சைன்ஸ் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் மிகுந்த இரத்த அழுத்தம் சரி செய்ய முடியும்.

4. நீரழிவு நோய் மற்றும் கண் பிரச்சனை சரி செய்ய முடியும்.

5. தூக்கமின்மை மற்றும் கர்பப்பை கோளாறு, சிறு நீரக கோளாறு, மஞ்சள் காமாலை, ஊது காமாலை சரி செய்ய முடியும்.

6. உடம்பில் எந்த ஒரு பிரச்சனையும் சரி செய்ய முடியும்.

அக்குபஞ்சரில் சரி செய்ய முடியாதவை:


திடீர் என்று ஏற்படும் விபத்துக்களில் ஏற்படும் இரத்த காயம் அதாவது தலை மண்டை ஓடு உடைந்து விடுவது மற்றும் கை கால் எலும்பு முறிவு போன்ற அவசர சிகிச்சை மற்றும் ஒன்றும் செய்ய முடியாது. இதை தவிர்த்து மற்ற எந்த ஒரு நோய்களையும் சரி செய்ய முடியும்.

அக்குபஞ்சரின் நன்மைகள்:

அக்குபஞ்சரில் சிகிச்சை எடுத்துக் கொள்வதால் எந்த ஒரு side effect -டும் கிடையாது. குறைந்த நேரத்தில் அதிக பலன் கிடைக்கும். Needle போட்டுக் கொண்டு அமர்ந்து டி.வி பார்க்கலாம் மற்றும் புத்தகங்கள் படிக்கலாம் எந்த ஒரு சிரமமும் கிடையாது. மிகுந்த வலியும் கிடையாது. எந்த ஒரு வலியும் அக்குபஞ்சரில் ஒரு sittings எடுத்துக் கொண்டால் போதும் வலி பறந்து போய்விடும், அதிக செலவும் கிடையாது. எந்த ஒரு மருந்தும் கிடையாது. ஆனால் வெறும் ஊசியில் சரியாகிவிடுகிறது என்பது வியக்கதக்க விஷயம் ஆகும். ஏனென்றால் இது ஒரு இறை மருத்துவம் ஆகும். குறைந்தது 5 முதல் 7 வரை ஊசிகள் போடலாம். நன்றாக வேலை செய்யும். வேலை செய்வதை நாமே உணரலாம். இதையே ஊசி இல்லாமல் கையில் pressure கொடுப்பதை "Accu Pressure" என்று அழைக்கிறோம். அதுவும் சிறப்பாக கேட்கும் ஆனால் நாமே செய்து கொள்வதை விட பிறர் நமக்கு pressure கொடுக்கும் போது இன்னும் நன்றாக கேட்கும்.

எனவே அக்குபஞ்சரில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் எல்லா விதமான நன்மைகளை அடையலாம்.

அக்குபஞ்சர் உருவான விதம்:


ஒரு அரசர் மரத்தடியில் தூங்கி கொண்டு இருக்கும் போது திடீர் என்று ஒரு அம்பு அவரை வந்து தாக்கியது. உடனே காவலாளிகள் அம்பு வந்த இடம் நோக்கி திரும்பி பார்த்தார்கள். அவனை பிடித்து வந்து சிறையில் வைக்க என்னுகையில் அரசர் அவனை பாராட்டினர். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏனென்றால் அவருக்கு நீண்ட நாட்களாக தலைவலியால் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கையில் இவனது அம்பு வந்து பட்டவுடன் தலைவலி போன இடம் தெரியவில்லை.

மகாபாரத்தில் பீஷ்மர் அம்பு படுக்கையில் இருந்த போது அவருடைய உடலில் குறிப்பிட்ட சில இடங்களில் சிறு ஊசிகளால் குத்தி வைத்து அவரது வலி உணர இயலாதவாறு செய்து ஒரு நல்ல நாளில் அவரது உயிர் பிரியுமாறு செய்தார்கள் என்று வரலாறு கூறுகிறது.

இதிலிருந்து தொன்று தொட்டு நமது மண்ணில் இந்த மருத்துவ முறை இருந்து இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Friday 16 November 2012

திருவண்ணாமலை கிரிவலம் செல்லுங்கள்:






ஈஸ்வரனின் நெருப்பு ஸ்தலம் திருவண்ணாமலையில் நடைபெறும்  கிரிவல சிறப்பு பற்றி சொல்வதற்க்கு முன், நெருப்பு மூலகம் பற்றி பார்ப்போம்.

நெருப்பு மூலகம் என்பது அக்குபஞ்சரில் நான்கு உறுப்புகளைக் கொண்டது.

1. உதரவிதானம்  - Tripple Warmer
2. இருதய உறை -  Pericardium
3. இருதயம்         -  Heart
4. சிறுகுடல்         - Small Intestine

இந்த நான்கும் தான் நெருப்பு சக்திக்கு உரியதாகும். இந்த நான்கில் ஏதேனும் குறைபாடு ஏற்படுமானால் "நாக்கில்" தெரிந்து விடும். அதாவது  வெளிப்புற உறுப்பு நாக்கு ஆகும். உடலின் வெப்ப சக்தி சரியாக இயங்க வேணடும். இதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் நாக்கில் தெரிந்துவிடும். இந்த உறுப்பிற்கான சுவை "கசப்பு" ஆகும்.

நாம் சாப்பிடும் உணவு வாய்வழியாக சென்று பிறகு தொண்டையை அடைந்து பிறகு உணவுக்குழாய் வழியாக சென்று இரைப்பையை அடைகிறது. பின்பு அங்கிருந்து சிறுகுடலுக்கு செல்கிறது. சிறுகுடலில் என்ன வேலை நடக்கிறது என்று பார்க்கலாமா?. பொதுவாக செரிமான வேலைகள் இரைப்பையில் தொடங்கினாலும் இது சிறுகுடல் பகுதியில் தான் முழுமை பெறுகிறது. உணவிலிருந்து மனித வாழ்க்கைக்கு தேவையான சத்துக்கள் உறிஞ்சப்படுகின்றன.

கீழே குறிப்பிட்டுள்ள இம்மூன்றும் இரைப்பையையும், பெருங்குடலையும் இணைக்கிறது.

1. அசையா பகுதி  - Duodenum
2. அசையும் பகுதி - Jejunam
3. இலியம் - Iieum

குடலில் உட்சுவற்றில் மெல்லிய கைவிரல்கள் போன்ற குடலுறிஞ்சிகள் (Villi) அமைந்துள்ளன. இவை தான் உணவிலுள்ள சத்துக்களை உட்கிரகிக்கின்றன. இது தான் உணவின் செரிமானத்தை முழுமையாக்கும். பிறகு பெருங்குடல் சென்று மீதமுள்ள சத்துக்களை எடுத்துக் கொள்ளும். பின்பு (Caecum) சீக்கம், ஏறுகுடல் (Ascending colon) , குறுக்குக் குடல் (Transverse colon) , இறங்கு குடல் (Decending colon), சிக்மாய்ட் (sigmoid), மலக்குடல் (Rectum),  மலவாய் (Anus) என உட்பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. இவ்வாறு நாம் உண்ட உணவு இவ்வளவு வேலை நடக்கிறது. இவ்வளவு வேலைக்கு பின்பு நமக்கு இரத்த உற்பத்தி ஆகிறது.

இந்த இரத்தம் எவ்வாறு இருதயம் மூலம் வேலை செய்கிறது என்பதை பற்றி பார்க்கலாம். இந்த இரத்தம் தான் உடலின் வெப்ப நிலையை சீராக வைத்திருக்க உதவி செய்கிறது.

இரத்த ஓட்டம்:

நம் உடலில் இரத்த சுற்று ஓட்டங்கள் பல உள்ளன. எல்லா உறுப்புகளிலிருந்தும் அசுத்த இரத்தம் (கார்பன் - டை -ஆக்ஸைடு கலந்த இரத்தம்) இதயத்தில் வலது எட்ரியத்திற்கு வந்து, வலது வெண்டிரிக்களுக்கு மூவிதழ் வால்வு (Tricuspid valve) வழியாக செல்கிறது. அசுத்த இரத்தம் (கார்பன் - டை -ஆக்ஸைடு கலந்த இரத்தம்) வலது வெண்டிரிக்கலிருந்து நுரையீரலுக்கு சென்று நுரையீரல் தமனி மூலம் சென்று அங்கு கார்பன் - டை -ஆக்ஸைடு வெளியேற்றப்பட்டு ஆக்சிஜனை எடுத்துக் கொள்கிறது. இதனால் அசுத்த இரத்தம் சுத்த இரத்தமாகிறது. பின்னர் நுரையீரலிருந்து நுரையீரலின் சிரை மூலம் சுத்த இரத்தம் இடது எட்ரியத்திற்கு வருகிறது. இங்கிருந்து சுத்த இரத்தம் இடது வெண்டிரிக்களுக்கு பம்ப் செய்து அனுப்பப்படுகிறது. இடது வெண்டிரிக்களிலிருந்து சுத்த இரத்தம் உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது.

சரியாக உணவு செரிமானம் நடந்து நல்ல இரத்தம் கிடைத்தால் தான் மேற்கண்ட இந்த வேலைகள் எல்லாம் நடக்கும். உடம்பு சுறுசுறுப்பாக இயங்கும். இருதய  உறை இருதயத்திற்க்கு மேலே பாதுகாப்பு உறையாக அமைந்துள்ளது. அதான் சொல்லுவார்கள் "இரத்தம் இருக்கும் வரை இவர் பேசுவான்" என்று கூறுவார்கள். இரத்தம் இல்லை என்றால் உடல் உக்ஷ்ணம் குறைந்து விடும். உதாரணத்திற்க்கு இரத்த சோகை உள்ளவர்களை பார்த்தால், உடல் சோர்வு, பசியின்மை, வயிறு உப்புசம், நடந்தால் மூச்சு வாங்குதல், தூக்கமின்மை, முகத்தில் நிறமாற்றம் போன்ற பல அறிகுறிகளை உண்டாக்கலாம். காய்ச்சல் வந்து விட்டால் உடல் உக்ஷ்ணம் அதிகம் ஆகும் போது இரத்தம் ஓட்டத்தடை ஏற்படும். கால்களுக்கு சரியாக இரத்தம் செல்லாது. அப்போது கால்களை தொட்டுப்பார்த்தால் "ஜில்" என்று இருக்கும். எந்த இடத்தில் எல்லாம் இரத்தம் சரியாக செல்லவில்லையோ அந்த இடத்தில் எல்லாம் "ஜில்" என்று இருக்கும். எனவே இரத்தம் மிகவும் முக்கியமான ஒன்று. மேலே குறிப்பிட்டது போல என்ன நோய்கள் ஏற்படும் என்பதை பற்றி கூறுகிறேன்.

1. இருதய வலி
2. பசியின்மை
3. ஒற்றை தலைவலி
4. தூக்கமின்மை
5. அஜீரணம்
6. காய்ச்சல்
7. மலச்சிக்கல்
8. ஞாபக மறதி

என்வே இந்த இரத்த ஓட்டம் நன்றாக இயங்க வேண்டும் ஆனால் உழைக்க வேணடும். உடம்புக்கு தேவையான உடற்பயிற்சி மற்றும் உணவு உண்ணும் முறை இதை கடைபிடித்தால் நெருப்பு மூலகத்தை நன்றாக வைத்துக் கொள்ள முடியும்.

வீட்டில் இருக்கும் வேலைகளை செய்தாலே போதும். ஒரு வேலையும் செய்யாமல் சாப்பிட்டுவிட்டு T.V பார்த்து பொழுது கழிப்பது, Two Wheeler or Car -ல் Shopping போவது. இதை மட்டுமே சில பேர் செய்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் பின்னாடி உடம்புக்கு எல்லா நோய்களும் வந்துவிடும். இதை குறை சொல்வதற்க்காக சொல்லவில்லை. இனி மேல் இந்த தவறை செய்யாமல் திரித்திக் கொள்ளுங்கள். இதற்கு இன்னொரு வழி சொல்கிறேன்.

இரத்த ஓட்டம் குறையும் போது தூக்கமின்மை பிரச்சனை வரும்.  தூக்கமின்மை பிரச்சனை வரும் போது மன எண்ண ஓட்டங்கள் அதிகம் வரும். அதனால் மனப்பிரச்சனை வரும். இதற்கு ஒரு நல்ல விஷயம் சொல்கிறேன். "திருவண்ணாமலை" சென்று கிரிவலம் சென்று வந்தால் பல நோய்கள் சரியாகிவிடும். எப்படியென்றால் நடக்கும் போது உடல் உறுப்புகள் அனைத்தும் வேலை செய்யும். சுரக்காத சுரப்பிகளும் சுரந்துவிடும். அதனால் உடம்புக்கு தேவையான உஷ்ணம் கிடைத்துவிடும். அதனால் இரவு படுத்ததும் தூக்கம் வந்து விடும். எண்ணங்களும் குறைந்துவிடும். அதனால் தான் "கிரிவலம்" என்று ஒன்று நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் மனம் அமைதிக்கு திருவண்ணாமலை செல்கிறார்கள். திருவண்ணாமலையாரும் "நெருப்புக்கு" உரியவர் ஆகும். எனவே நடைபயிற்சி மற்றும் உணவு முறை சரி செய்து எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம் ஆகும்.

பதிவு நீளமாக இருந்தாலும், இடையில் பிரித்து இரண்டு பகுதியாக போட்டால், படிக்கும் போது சுவாரசியம் குறையும் என்ற காரணத்தினால் ஓரே பதிவாக வெளியிடுகிறேன்.

உங்களின் மேலான விமர்சனங்களை எனக்கு தெரியப்படுத்தவும். உங்களது சந்தேகங்களையும், கேள்விகளையும் பின்னூட்டம் இடவும்.

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Thursday 15 November 2012

பக்தி என்றால் என்ன ? - பகுதி -2



நேற்றைய பதிவின் தொடர்ச்சி ..

அப்ப இதெல்லாம் பக்தி கிடையாதா ? என்று கேட்டால். இல்லை என்று கூற மாட்டேன். அது வழிபாடு மட்டுமே. ஆனால் உண்மை என்பது கடவுள் மிகவும் பிரமாண்டமானவர். அவரிடம் உண்மையான அன்பு காட்டினால் போதும் எல்லாம் கிடைத்துவிடும். பக்தி என்றால் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

1. நம்பிக்கை
2.அன்பு
3.உண்மை
4.ஒழுக்கம்
5.உதவி
6.கடமை
7.சிரிப்பு
8.அமைதி

இதில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும் . கடவுள் உங்கள் பக்கம் தான். கடவுளுக்கு வேண்டியதை எல்லாம் செய்து விட்டு, இவர் இதை செய்வாரா? செய்ய மாட்டாரா ? என்ற எதிர்பார்ப்பு உடன் இருந்தால் எப்படி கிடைக்கும். ஒருவர் கஷ்டத்தில் இருக்கும் போது நம்மால் முடிந்ததை உதவி செய்தால் போதும் அதில் கடவுள் இருக்கிறார். அன்பு, இரக்கம் இருந்தாலே போதும் உண்மையும், ஒழுக்கமும் தானாகவே வந்துவிடும். ஏதாவது ஒன்றை எதிர்பார்த்து தான் நாம் கடவுளை வழிபடுகிறோம். அது தவறு அல்ல ஆனால் அதுவே பழக்கமாக இருந்தால் அதற்கு பெயர் பக்தி அல்ல. எப்பொழுதும் சிரித்து முகமலர்ச்சியுடன் இருக்கும் போது முகமும் வசீகரமாக இருக்கும், எல்லோருக்கும் உங்களை பிடிக்கும், எந்த நோயும் வரவே வராது.

நம் பொரியோர்கள் கூறிய படி நாம் செய்யும் ஒவ்வொன்றிக்கும் ஒரு காரணம் உண்டு.

உதாரணத்திற்க்கு,

1. தீபம் ஏற்றுவதால் வீட்டுக்கு வெளிச்சம் கிடைக்கும் மற்றும் அந்த ஒளியை பார்த்து வந்தால் மனம் ஒருநிலைப்படும் என்பதற்க்காகத்தான் தீபம் ஏற்றுகிறோம்.

2. கற்பூரம் காட்டுவது என்பது கற்பூரம் எரிந்து ஒன்றும் இல்லாமல் போவது போல, நாமும் கடவுளை நினைத்து இந்த கற்பூரம் போல் இறைவனுடன் இரண்டர கலந்து இந்த பிறவியை முடிக்க வேண்டும் என்பது தான்.

3.மலர்கள் போடுவது கூட, நாமும் மலர்கள் போல மணம் வீசி பரந்து விரிந்த மனத்துடன் இருக்க வேண்டும் என்பது தான்.

"கடவுளிடம் நமக்கு வேண்டியதை எல்லாம் கேளுங்கள். அவரிடம் கேட்காமல் நாம் வேறு யாரிடம் கேட்க முடியும். ஆனால் கேட்பதற்க்காக மட்டுமே கடவுளை வணங்காதீர்கள்".

இன்னும் எழுதலாம் வாசகர்களின் பொறுமை கருதி இத்துடன் இன்று நிறைவு செய்கிறேன். இன்னும் வரும்.

அடுத்த பகுதியில் மீண்டும் அக்குபஞ்சர் பற்றி பார்ப்போம்


நன்றி


அன்புடன்
ஈஸ்வரி

Wednesday 14 November 2012

பக்தி என்றால் என்ன ?



அக்குபஞ்சருக்கும் பக்திக்கும் என்ன சம்பந்தம்? உடம்புக்கும் பக்திக்கும் என்ன சம்பந்தம் என்று பார்கிறீர்களா ?

அக்குபஞ்சரை பற்றி எனக்கு தெரிந்த விஷயங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். கொஞ்சம் போர் அடிக்காமல் இருக்க ஒரு மாறுதலுக்காக வேறு சில விஷயங்களை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

இனி வரும் பகுதியில் மதம் பற்றி பேச வில்லை மனித மனம் பற்றி பேச இருக்கிறேன்.

பக்தி என்றால் என்ன என்பதை பற்றி கூற இருக்கிறேன்.  கடவுள் என்பவர் யார்? சிவனா, விஷ்னுவா, பார்வதியா அல்லது லஷ்மியா, இயேசுவா அல்லது அல்லாவா ?  இதில் யார் கடவுள் ?

அவரவர் மனநிலைக்கு ஏற்ப பிடித்த கடவுளை வழிபாடு செய்கிறோம். அதில் எந்த தவறும் இல்லை. அதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் கடவுள் என்பவர் குறுகிய ஒரு வட்டத்திற்குள் இருக்கக் கூடியவர் இல்லை. மிகவும் பிரம்மாண்டமான பரந்து விரிந்து இருக்கக் கூடியவர். அது தான் பிரபஞ்சம்.

நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், நிலம் இந்த ஐந்தின் வெளிப்பாடு தான் பிரபஞ்சம். அது நமக்குள் அடங்கி இருக்கும் வரை தான் நாம் "மனிதன்" என்று அழைக்கப்படுகிறோம். காற்று நின்று விட்டால் அதற்கு என்ன பெயர் "பிணம்" என்று கூறுகிறார்கள். இந்த பிரபஞ்சமாகிய ஐந்தையும் நாம் கவனித்துக் கொண்டாலே போதும் உடம்பும் நன்றாக இருக்கும், பக்தியும் தானாகவே வந்து விடும்.

உடம்புக்கும் பக்திக்கும் என்ன சம்பந்தம் என்று பார்கிறீர்களா ?   இருக்கிறது.

எவன் ஒருவன் உடம்பையும், மனதையும் நன்றாக வைத்திருக்கிறானோ அவர்களைத்தான் இந்த பிரபஞ்சத்துக்கு பிடிக்கும். நீங்கள் நினைத்தது எல்லாம் கிடைக்கும். உடம்பு சரியாக இருந்தாலே மனமும் நன்றாக இருக்கும். கடவுளுக்கு நாம் என்ன செய்கிறோம். சூடம் காட்டுவது, நெய் வேத்தியம் செய்வது, பாதயாத்திரை செல்வது, கோயிலுக்கு சென்று வருவது, பரிகாரங்கள் செய்வது, நேர்த்திக்கடன் செலுத்துவது, இது போன்ற விஷயங்களை தான் நாம் கடவுளுக்கு செய்கிறோம். இதை எல்லாம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். சரி இதையெல்லாம் செய்கிறோம். ஆனாலும் சில நேரங்களில் மனக் குழப்பம் மற்றும் கவலையில் தானே இருக்கிறோம். சிலர் மேலே கூறிய எதையும் செய்ய மாட்டார்காள். ஆனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டியது எல்லாம் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கிறது.

இது எப்படி சிறிது யோசியுங்கள் ?

கடவுளுக்கு இதையெல்லாம் செய்ய வேண்டுமா ? செய்ய கூடாதா ? எதை செய்தால் நமக்கு எல்லாம் கிடைக்கும் ?
 
                                                                                                                    தொடரும்  .. .. .. .. ... ....

Saturday 10 November 2012

தீபாவளி நல்வாழ்த்துக்கள் ..





எனது பதிவிற்க்கு அமோக வரவேற்பை வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கு

எனது ஆத்மார்த்தமான "தீபாவளி நல்வாழ்த்துக்கள்"



Friday 9 November 2012

திருப்பதி சென்று வாருங்கள் :





இந்தப் பதிவில் காற்று மூலகத்தை பற்றி பார்க்க இருக்கிறோம்.  திருப்பதி செல்வதற்க்கும் இந்த பதிவிற்க்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா? இருக்கிறது.

காற்று மிக மிக முக்கியமான ஒன்று. மனிதனின் உயிர்நாடி மூச்சுக்காற்றாகும். நீர், உணவு இல்லாமல் சில நாட்கள் உயிர் வாழ முடியும். ஆனால் காற்று இல்லாமல் ஒரு சில நிமிடங்கள் கூட உயிர் வாழ முடியாது. 3 முதல் 4 நிமிடங்களுக்கு மேலாக மூளைக்கு செல்ல வேண்டிய ஆக்ஸிஜன் தடைபடுமானால் மூளை செயலிழந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும். நம்மை சுற்றியுள்ள காற்றில் 21% ஆக்ஸிஜன் நிறைந்துள்ளது. மூச்சுக் காற்றின் மூலம் நாம் ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கிறோம்.

மூக்கினால் உறிஞ்சப்படும் காற்றை நுரையீரல் உடனே எடுத்துக் கொள்ளாது, மூச்சுக் காற்றிலுள்ள நஞ்சுப்பொருட்களை வடிகட்டும். மூச்சுக் காற்றிலுள்ள தூசு குப்பைகளை "இருமல்" "தும்மல்" என்னும் செயல்கள் மூலம் வெளியேற்றுகின்றது. மூக்கு சுவாசம் செய்வதற்க்கும், நுகர்தல் என்னும் செயலுக்கும் உதவுகிறது.

இந்த காற்று மூலகத்தில் ஏதேனும் தடை ஏற்பட்டால் அதனுடைய சக்தி ஓட்டப் பாதையில் தெரிந்துவிடும். அதனால் தான் காற்று மூலகத்தில் பிரச்சனை என்றால் அதனுடைய வெளிப்புற உறுப்பான் மூக்கில் தெரிந்துவிடும்.

ஆக்ஸிஜன் கலந்த காற்று மூக்கின் துவாரத்தின் வழியாக நுரையீரலுக்குள் செல்கிறது. மூக்கு துவாரத்திலுள்ள சுரப்பிகள் காற்றின் வெப்பநிலையை சமநிலையக்குகிறது. நுரையீரலிலுள்ள காற்று சிற்றறைகளில் முழுவதும் ஆக்ஸிஜன் நிரப்பிக் கொண்ட பின், கார்பன் டை ஆக்ஸைடு வெளிவந்துவிடுகிறது. இதுவே காற்றின் பரிமாற்றம் எனப்படும்.

நலமுள்ள ஒருவர் ஒரு நிமிடத்தில் 14 முதல் 18 முறை மூச்சை இழுக்கிறார். நாம் பெரும்பாலும் மூச்சை இழுப்பதும், விடுவதுமில்லை. இதனால் காற்று நுண்ணறைகள் முழுவதும் நிரப்ப்படுவதில்லை. அதனால் உடம்பில் உள்ள திசுக்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உடல் உறுப்புகளில் நலம் கெடும். எனவே சரியான மூச்சுப்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்க்கு உறுதுணையாக இருக்கும்.

இப்பொழுது உள்ள சூழ்நிலையில் எந்த காற்றுமே கிடைப்பதில்லை. அவசர உலகத்தில் போய் கொண்டு இருக்கிறோம். விடுமுறை நாட்களில் காற்று நிறைந்துள்ள சுற்றுலா இடங்களுக்கு சென்று வந்தாலே உடமபுக்கு நன்றாக இருக்கும். எவ்வளவு மனம் பாறமாக இருந்தாலும் காற்று உள்ள இடங்களுக்கு சென்று அமைதியாக அமர்ந்து நல்ல காற்றை உள்வாங்கி கொண்டாலே போதும் எல்லாம் சரியாகிவிடும்.

உதாரணத்திற்கு, சென்னையில் எல்லோரும் Beach -க்கு செல்கிறார்கள். அங்கே சென்று அந்த கடற்கரை அருகில் அம்ர்ந்து அந்த குளிந்த காற்று பட்டவுடன் மிகவும் சுகமாக இருக்கும். அதான் Beach -க்கு போயிட்டு வந்தால் மிகவும் சந்தோஷமாக இருப்பதற்கு காரணம். எனவே இனிமேல் தயவு செய்து நல்ல காற்றை சுவாசிப்போம். நுரையீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகம் வரும். நல்ல காற்று கிடைக்க வில்லை என்றால்,

1. இருமல்
2. மூச்சிறைப்பு
3. தும்மல்
4. தோல் நோய்கள்
5. தசைகளில் வலி
6. சைனஸ்

மூச்சு சம்மந்தப்பட்ட அனைத்தும் வரும். திருப்பதி போன்ற மலை உச்சிகளுக்கு சென்று வந்தால் மிகவும் நன்றாக இருக்கும். அங்கு மூலிகை மரங்கள் அதிகம் இருப்பதால் அந்த காற்று பட்டவுடன், உடம்பு மற்றும் மனம் இரண்டுமே சரியாகிவிடும்,. திருப்பதிக்கு போகும் போது மலை உச்சியில் ஏறும் போது இவ்வளவு நாள் தூக்கமில்லை என்று சொன்னவர்கள் அனைவரும் தூங்கிவிடுவார்கள். ஏனென்றால், அவ்வளவு நல்ல காற்று கிடைக்கிறது. 

Thursday 8 November 2012

மஞ்சள் காமாலை வரவே வராது !




முதலில் ஆகாயம் (wood) மூலகம் பற்றி பார்க்கலாம். ஏனென்றால் ஆகாயம் மூலகத்திற்கும் மஞ்சள் காமாலை நோய்க்கும் தொடர்பு உண்டு.

ஆகாயம் மூலகத்தில் தடை ஏற்பட்டால் அதனுடைய வெளிப்புற உணர்வான நமது கண்களில் தெரிந்து கொள்ளலாம். இதனால் கல்லீரல் மற்றும் பித்தப்பையில் பிரச்சனைகள் ஏற்படும். கல்லீரல் மற்றும் பித்தப்பையில் ஏதேனும் சத்து குறைபாடோ அல்லது நோய் ஏற்பட்டாலும் அதனுடைய சக்தி ஓட்டப்பாதையில் தெரிந்துவிடும். வலி அல்லது வேதனை ஏற்படும். தூக்கம் என்பது மிக முக்கியமான ஒன்று. கடவுள் மிக அருமையாக நமக்கு அமைத்து கொடுத்துள்ளார். 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்காமல் குறைந்த பட்சம் தினமும் 6 முதல் 7 மணி நேரம் உறங்க வேண்டும்.  மறுநாள் நாம் எழுந்தவுடன் சுறுசுறுப்பாக இயங்க தொடங்கிவிடுவோம். ஒவ்வொரு உறுப்பும் குறிப்பிட்ட நேரத்தில் வேலை செய்யும். அதில் கல்லீரல் மற்றும் பித்தப்பை இரவு 11 முதல் காலை 3.00 மணி வரை வேலை செய்யும். ஏனென்றால் கல்லீரலின் வேலை, தேவையான சத்தை எடுத்துக் கொண்டு  மீதமுள்ளதை வெளியேற்றிவிடும். மிகப்பெரிய வேலையை செய்வது இந்த கல்லீரல் தான். நாம் காலையில் இருந்து இரவு படுப்பது வரை சாப்பிடுவதை பிரித்து எடுப்பது தான் இதன் வேலை. எனவே அந்த நேரத்தை, நாம் கல்லீரல் வேலை செய்வதற்கு உதவி செய்தால் போதும். என்ன உதவி  என்று நினைக்கிறீர்களா ? தூங்குவது தான். நாம் அந்த நேரத்தில் தான் வேலை செய்து கொண்டு இருப்போம் அல்லது டி.வி பார்ப்பது அல்லது அந்த நேரததில் சாப்பிடுவது மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே அந்த நேரத்தில் தூங்குவது மிகவும் நல்லது.

அதனால் தான் தூக்கம் சரியாக இல்லை என்றால் கண்களில் தெரியும். கல்லீரல் சரியாக வேலையை செய்யவில்லை என்று புரிந்து கொள்ளலாம் தூக்கம் இல்லை என்றால் உடல் உஷ்ணம் ஏற்பட்டால் பல நோய்கள் உருவாகிவிடும். கல்லீரல் குளிச்சியாக வைத்துக் கொண்டால் போதும் எந்த ஒரு நோயும் வராது. முக்கியமாக சர்க்கரை நோய் வரவே வராது. மஞ்சள் காமாலை வரவே வராது.  மஞ்சள் காமாலை ஏற்பட்டாலும் கண்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

1. மஞ்சள் காமாலை
2. சர்க்கரை நோய்
3. இரத்த அழுததம்
4. ஞாபக மறதி
5. நரம்பு தளர்ச்சி
6. பக்கவாதம்

இது போன்ற நோய் வராமல் தடுக்கலாம். நரம்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது மிகுந்த  இரத்த அழுத்தம் ஏற்படும் போது அல்லது மன அழுத்தம் ஏற்படும் போது, நரம்பு மண்டலமே பாதிப்பு ஏற்படும். அதனால் தான் கோபம் ஏற்படும் போது நரம்பு மண்டலம் வேலை செய்யும், அதுவும் கண்களில் தெரியும். இந்த ஆகாயம் மூலகத்திற்க்கு தேவையான சுவை புளிப்பு.

டென்சன் ஆகும் போது,  நரம்பு பாதிப்பு ஏற்படும் போது ,  ஞாபக மறதி ஏற்படும். எனவே மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். டென்சன் ஆவதால் தலைவலி ஏற்படும், பசி இருக்காது. எனவே இந்த ஆகாய மூலகத்தை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.                                                                                                                
                                                                                                          இன்னும் வரும் ....

Tuesday 6 November 2012

நிலம் (Earth) மூலகம் சரியாக செயல்படவில்லை என்றால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் ?



நீர் (water) மூலகம் குறைந்தால் என்ன விளைவு ஏற்படும் என்று எழுதியிருந்தேன். (படிக்காதவர்கள் பகுதி-1 பதிவை படித்துவிட்டுவரவும்)

அது போல் நிலம் (Earth) மூலகம் சரியாக செயல்படவில்லை என்றால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று எழுதுகிறேன். நிலம்
(Earth) என்பது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆகும். வயிறு மற்றும் மண்ணீரல் பிரச்சனைகள் ஏற்படும். நான் முன்பே கூறியது போல் வாயை நன்றாக மூடி மென்று சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடும் போது வாயில் சுரக்கும் உமிழ்நீர் சேர்ந்து உள்ளே போகும். அவ்வாறு போகும் போது வயிறு ஜீரணம் செய்ய மிகவும் பேருதவியாக இருக்கும். நன்றாக ஜீரணம் செய்யப்பட்டால் தான் அது சிறுகுடலுக்கு அனுப்பப்பட்டு அன்று உணவு பொருட்கள் சக்தியாக மாற்றப்பட்டு நல்ல இரத்தமாக மாறி உடலுக்கு செல்லும். வயிறு சரியாக ஜீரணம் ஆகும் போது மலச்சிக்கல் ஏற்படாது. உடம்பே மிகவும் லேசாக இருக்கும். உணவு சரியான சக்தியாக மாற்றப்படவில்லை என்றால் உடம்புக்கு சக்தி கிடைக்காது. நிலம் (Earth) மூலகம் சக்தி ஓட்டப்பாதையில் தடை ஏற்படும். பின்பு என்ன பிரச்சனைகள் எல்லாம் வரும் தெரியுமா ?

1. அஜீரண கோளாறு
2. இரத்த சோகை
3. புளித்த ஏப்பம்
4. மாதவிடாய் கோளாறு
5. கர்ப்பப்பை பிரசனைகள்
6. வயிறு உப்புசம்
7. உடல் சோர்வு
8. தூக்கமின்மை
9. பசியின்மை
10.மலச்சிக்கல்
11.வாயு தொந்தரவு

இது போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே நன்றாக சாப்பிடும் முறையை கடைபிடித்தால் எந்த பிரச்சனையும் வராது.

அதே போல் நாம் பசித்து சாப்பிடவேண்டும். நேரம் பார்த்து நம் வசதிக்கு ஏற்ப சாப்பிடுவது மிகவும் தவறாகும். "பசித்து ருசி" என்று கூறுவார்கள். அது மட்டும் அல்லாமல் சாப்பிடுவதற்க்கு முன்பு இனிப்பை சாப்பிட்டு விட்டு சாப்பிட ஆரம்பித்தால் வயிறு ஜீரணம்  நன்றாக நடைபெறும். எப்படி என்றால்,  நமக்கு பசிக்கும் போது வயிற்றில் Hydro Chloric Acid  சுரந்து இருக்கும். சிலருக்கு சுரக்கவே சுரக்காது அப்போது இனிப்பை சாப்பிட்டுவிட்டால், அந்த அமிலம் சுரந்து விடும். பின்பு எந்த உணவை சாப்பிட்டாலும் ஜீரணம் சரியாக நடைபெறும். சாப்பிட்ட பின்பு அரைமணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது தண்ணீர் குடிக்க கூடாது. அரைமணி நேரம் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.

முதலில் தண்ணீர் குடித்தாலோ அல்லது இடையில் தண்ணீர் குடித்தாலோ Hydro Chloric Acid வேலை செய்யாது. பின்பு உணவு சாப்பிடும் போது ஜீரணம் சரியாக நடைபெறுவதில்லை. அரைமணி நேரம் கழித்து தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் என்றால் நாம் உணட உணவு ஜீரணம் நடைபெற்று சிறுகுடலுக்கு அனுப்பிவிடும். பின்பு குடித்தால் ஒன்றும் செய்யாது. எனவே உணவு அருந்தும் முறையை நன்றாக கடைபிடிக்க ஆரம்பித்தால் போதும் வயிறு ஜீரணம் நன்றாக நடைபெறும்.

மலச்சிக்கல் ஏற்படும் போது வயிற்று வலி ஏற்படும். பின்பு முதுகு வலி ஏற்படும். வயிற்றில் கழிவுகள் வெளியேற்றப்படவில்லை என்றால், கிருமிகள் உருவாகிவிடும். கிருமிகள் வயிற்றில் இருக்கும் போது பசி இருக்காது, தோலில் நிறமாற்றம் ஏற்படும் மற்றும் அரிப்பு ஏற்படும்.  எனவே மலச்சிக்கல் ஏற்படாமல் வயிற்றில் இருக்கும் கழிவுகள் சரியாக வெளியேறிவிட வெண்டும்.

அதனால் தான் அந்த காலத்தில் முதலில் இலையில் இனிப்பு வைத்து ஆரம்பிப்பார்கள். இனிப்பில் ஆரம்பித்து சாப்பிட்டால் நமது வாழ்கையும் இனிப்பாக இருக்கும் என்பது தான் தத்துவமாக கூறப்படுகிறது.

                                                                                                                       இன்னும் வரும் .....

Monday 5 November 2012

அக்குபஞ்சர் - உங்கள் வாழ்வில் !



எல்லாம்வல்ல இறைவன் ஈஸ்வரன் ஆசிர்வாதத்துடன் நான் என் கருத்துக்களை எழுத ஆரம்பிக்கிறேன்.

நான் படித்த அக்குபஞ்சரில்  உங்களுக்கு பயனுள்ள சிலவற்றை தருகிறேன். அக்குபஞ்சர் பற்றி கூறுவதற்கு முன் சில இயற்கை மருத்துவ முறைகளை பற்றியும் நாம் பின் பற்ற வேண்டியவை  பற்றியும் என் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

நாம் வாழ்வில் தினசரி உணவில் மூன்று வேலையும் இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்


பஞ்சபூதங்களின் தொகுப்பே மனிதனின் உடல். 

பஞ்சபூதங்கள் என்பவை யாவை ?

1. நெருப்பு

2. காற்று

3. நீர்

4. நிலம்

5. ஆகாயம்

இவைகளை கொண்டவை பஞ்சபூதங்கள்.

இந்த பஞ்சபூத மூலகங்கள் ஏதாவது ஒன்றில் குறைபாடு ஏற்பட்டால் அது மனித உடலின் வெளிபுற உறுப்புகளில் வெளிப்படும்.


நெருப்பு  -   நாக்கு

காற்று   -   மூக்கு

நீர்       -   காது

நிலம்    -   உதடு

ஆகாயம்  -  கண்


இந்த பஞ்சபூதங்களுக்கும் கீழ் கண்ட சுவைகளுக்கும் ஒற்றுமை உண்டு. அதை பின்பு எழுத இருக்கிறேன்.


நெருப்பு  -   கசப்பு

காற்று   -   காரம்

நீர்       -   உப்பு

நிலம்    -   துவர்ப்பு, இனிப்பு

ஆகாயம்  -  புளிப்பு

நமது உடம்பு பஞ்சபூதங்களின் அடக்கம் என்பதால், அதற்கு தேவையான சுவையை கொடுத்துவிட்டால் எந்த நோயும் வரவே வராது.

வாயை மூடி நன்றாக மென்று சாப்பிட்டால் நமக்கு தேவையான முழுமையான சத்து கிடைத்துவிடும். சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து தண்ணீர் அருந்த வேண்டும். அப்படி செய்தால் உணவு முழு செரிமானம் பெற்று நல்ல இரத்தமாக கிடைக்கும்.

இந்த அவசர உலகத்தில் யாருமே பொறுமையாக சாப்பிடுவதில்லை. பசித்து சாப்பிடுவதில்லை. பின்பு நோய் வராமல் என்ன வரும் ?  வந்த பின் யோசிப்பதை விட வரும் முன் காப்பதுதான் புத்திசாலித்தனம். அக்குபஞ்சர் வரும் முன் காக்கும் வைத்தியம் ஆகும். வந்தாலும் சரி செய்யலாம்.


நோய் வராமல் தடுக்க நாம் செய்ய வேண்டிய பழக்க வழக்கங்கள்.

1.வாயை மூடி மென்று சாப்பிட வேண்டும்.

2.ஆறு சுவைகள் தர வேண்டும்.

3.பசிக்கும் போது சாப்பிட வேண்டும்.

4.தவிக்கும் போது தண்ணீர் குடிக்க வேண்டும்.

5.தூக்கம் வரும் போது தூங்க வேண்டும்.

6.சிறு, சிறு உடல் பயிற்சிகள் தர வேண்டும்.

இதை செய்து வந்தாலே போது எல்லாம் ஓடி விடும்.


இன்னும் ஆழமாக சொன்னால்,

1.நெருப்பு என்றால்    -  உழைப்பு தேவை

2.நீர் என்றால்        -  தண்ணீர் தேவை

3.காற்று என்றால்     -  இயற்கை காற்று தேவை (Fan காற்று அல்ல)

4.ஆகாயம் என்றால் -  தூக்கம் தேவை

5.பூமி, நிலம் என்றால் - உணவு தேவை

மேலே குறிப்பிட்டு உள்ளபடி உழைப்பு, தண்ணீர், காற்று, தூக்கம், உணவு இதை எல்லாம் சரியாக உடம்புக்கு கொடுத்து விட்டால் உடம்பு தானாகவே அதன் வேலையை செய்து கொள்ளும்.

யார் இன்று நன்றாக உடம்பிற்க்கு உழைப்பை கொடுக்கிறார்கள். தண்ணீர் கூட சரியாக குடிப்பது கிடையாது. அதற்கு பதில் மற்ற குளிர்பானங்களை குடிக்கிறார்கள். நன்றாக உடம்பிற்க்கு உழைப்பை கொடுக்கவில்லை என்றால் நெருப்பு மூலகம் செயல் குறைபாடு ஏற்படும். அது சம்மந்தப்பட்ட நோய் உருவாகும்.

தண்ணீர் சரியாக குடிக்கவில்லை என்றால், அது சம்மந்தப்பட்ட நோய் உருவாகலாம். இது போலத்தான் ஒவ்வொரு பஞ்சபூத வேலையை சரியாக இயங்க நாம் உதவி செய்வது கிடையாது.

ஓர் உதாரணத்திற்கு கூறுகிறேன்.

தண்ணீர் சரியாக குடிக்க்வில்லை என்றால், நம் உடம்பின் தேவையில்லாத கழிவுகளை பிரித்து எடுக்கும் சிறுநீரகம் கழிவுகளை வெளியெற்றி ஆக வேண்டும். ஆனால் அதற்கு தண்ணீர் இருந்தால் தான் வேலையை செய்யும். இல்லை என்றால் கழிவுகள் வெளியெற மிகவும் சிரமமாகும். பாதி வெளியெறி பாதி உள்ளேயே தங்கிவிடும் போது தான், சிறுநீரகக்கல் தோன்றுகிறது. இது தேவையா ?. அது மட்டும் அல்ல மலச்சிக்கல் ஏற்படும். முகப்பருக்கல் ஏற்படும். எலும்பு சம்பத்தப்பட்ட  நோய் ஏற்படும்.  இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுவதற்க்கு நாமே காரணமாக ஆகி விடுகிறோம்.

இதில் என்ன ஒரு பெரிய ஜோக் என்றால் தவறுகளுக்கும் நாமே காரணமாக மாறிவிட்டு கடவுளை திட்டுவது " எனக்கு போய் இந்த
நோயை கடவுள் கொடுத்துவிட்டாரே " நான் யாருக்கும் எந்த துரோகம் செய்யவில்லையே எனக்கு ஏன் இப்படி ? " என்று வேதாந்தம் பேச வேண்டியது தான்.

இனிமேல் அதை எல்லாம் விட்டுவிட்டு நம்மளுடைய தவறுகளை திருத்திகொண்டால் போதும் எல்லாம் சரியாகிவிடும்.





For further information pls send e-mail easwarisaravana@gmail.com
contact number : 9445772438
sdfahttp://www.easwarisaravana.blogspot.in/