Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Sunday 30 December 2012


புத்தாண்டு நல்வாழ்த்துகள்:


அனைத்து வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆண்டு இனிய ஆண்டாக இருக்க இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்.

அனைவரும் நோயின்றி நலமுடன் வாழ என் வாழ்த்துக்கள்.



நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி


அக்குபஞ்சரில் மாதவிடாய் பிரச்சனை -எளிதாக தீர்க்கும் பிரச்சனையே:


இனறு பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை பெரிய பிரச்சனையாக உள்ளது. மாதம் ஒரு முறை சரியாக போகவில்லை என்றால் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம், எதனால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

1. Heomoglobin Count குறைவாக இருக்கலாம்.
2. கருமுட்டை வளர்ச்சி குறைபாடு இருக்கலாம்
3. இரத்தம் குறைவாக இருக்கலாம் (Anemic Problem)
4. Thyrod Problem இருக்கலாம்
5. Iron சத்து குறைவாக இருக்கலாம்
6. Tension அதிகமாக இருந்தால்

இது போன்ற பிரச்சனைகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் அவர்களுக்கு மாதவிடாய் கோளாறு ஏற்படும். அதை எளிதாக சரி செய்து விடலாம் அக்குபஞ்சரில்.

Anemic Problem இருப்பவர்கள் (கருப்பு உலர்ந்த திராட்சை அதாவது கருப்பு கிஸ்மிஸ் பழம்) தினமும் 5-7 பழம் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்த உற்பத்தி ஆகிவிடும்.  முதலில் சுறுசுறுப்பு இல்லாமல் சோர்வாக இருந்தவர்கள், பலம் பெற்று விடுவர். நிறைய கீரை வகைகள், மாதுளம் பழம் சேர்த்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் Iron சத்து கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் Estrogen உற்பத்தி பெறவேண்டுமானால் Calcium சத்து தேவைப்படும். அதனால் பேரிச்சம் பழம் சேர்த்துக் கொண்டால் calcium குறைபாடு சரி செய்து விடும்.

மாதம் மாதம் சரியாக கழிவுகள் வெளியேறவில்லை என்றால் பல பிரச்சனைகள் ஏற்படும். உடம்பு உப்புசம் ஏற்பட்டு உடல் பெருத்து காணப்படும். அந்த கழிவுகள் உள்ளே தங்கிவிட்டால் என்ன செய்ய என்று தெரியாமல் முகத்தில் கரும்புள்ளியாக தோன்றிவிடும். முக அழகே கெட்டுவிடும். Tension அதிகமாக இருக்கும். அதனால் கழிவுகள் வெளியேற உடனே நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். திருமணத்திற்கு முன் இருந்தால் உடனே சரி செய்து விடுங்கள், இல்லை என்றால் பின் கருத்தரிக்க இதுவும் ஒரு தடையாக இருக்கும். அக்குபஞ்சரில் இதற்கு மிக அருமையான புள்ளிகள் உள்ளன. எந்த ஒரு side effect  கிடையாது. சில பேருக்கு இந்த மாதவிடாய் வந்தாலே பிடிக்காது என்பார்கள். அப்படி சொல்லாதீர்கள். இது ஒரு மிக அற்புதமான விஷயம். இது நடைபெறுவதால் தான் மிக அழகான குழந்தை நமக்கு கிடைக்கிறது. வயது வந்தவுடன் அதை ஒரு விழாவாகவும் கொண்டாடுகிறார்கள். சரியாக கழிவுகள் வெளியேறாவிட்டால் அதுதான் கட்டிகளாக மாறிவிடும். பின்பு நமக்குத்தான் பிரச்சனை ஏற்படும். எனவே எல்லோரும் நான் சொன்ன Tips ஐ கடைபிடியுங்கள். மாதவிடாய் என்பது ஒரு பெரிய பிரச்சனையே கிடையாது.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Friday 28 December 2012


அன்பு:


அன்பு பற்றி சில விஷயங்களை உங்களிடம் சொல்ல விருப்பப்படுகிறேன். இன்றைய கால கட்டங்களில் அன்பு என்றால் என்ன? என்பது தெரியாமல், அறியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

அன்பு என்பது உள்ளிருந்து வெளிப்படுவதாகும். அன்புக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. அன்பு என்பது நேசிப்பதாகும். குறுகிய மனம் இருக்காது. பரந்து விரிந்து காணப்படும். சுயநலம் இருக்காது. அன்பு உள்ளவர்கள் பிறருக்காக எதையும் செய்வார்கள். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாதது தான் அன்பு ஆகும். அன்பு உள்ளவர்களுக்கு கொடுக்க மட்டும் தான் தெரியும். வாங்கத் தெரியாது.

அன்பு உள்ளவர்களிடம் காதல் மலரும். காதல் தெய்வீகமானது.

அன்புக்கு கோபப்படத் தெரியும். தவறு செய்யும் போது கண்டிக்கவும் தெரியும். அன்பு உள்ளவர்கள் மற்றவரை மனம் அறிந்து நடந்து கொள்வார்கள். பிறருடைய உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள். அன்பு உள்ளவர்கள் என்றும் திருப்தியாக இருப்பார்கள்.

ஆனால் இன்று அப்படி இல்லை. Condition போட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு விஷயம் சொன்னால் அப்படியே கேட்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு பெயர் அன்பு அல்ல அடிமையாகும். அன்பு உள்ளவர்கள் எப்பொழுதும் சுதந்திரம் அளிப்பவர்கள்.

அன்பு உள்ளவர்கள் எப்போழுதும் விட்டுக் கொடுக்கும் மனம் படைத்தவர்கள் ஆவர். ஆனால் அதை சரியாக பயன்படுத்த தெரியாதவர்கள் அவர்களை இழந்து விடுவார்கள்.

எந்த ஒரு உறவாக இருந்தாலும் சரி. உதாரணத்திற்கு அப்பா, பையன் அல்லது அக்கா, தங்கை போன்ற எந்த ஒரு உறவாக இருந்தாலும் சரி அவர்களை சுயநலத்திற்காக பயன்படுத்தாமல், அதாவது என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் பெறுவதற்காக மட்டும் பயன்படுத்தினால் நீண்ட நாள் உறவு நீடிக்காது என்பது உண்மை. அன்பு என்பது எல்லோரிடமும் காட்டப்படுவது ஆகும். குறுகிய மனம் படைத்தவர்கள் மட்டும் தான் தனக்கு பிடித்தவர்கள் மீது மட்டும் அன்பு வைத்திருப்பார்கள். நன்றாக சொல்ல வேண்டும் என்றால் அதற்கு பெயர் அன்பு அல்ல பற்று ஆகும். அன்பு ஒரு துளி கூடிவிட்டால் அது பற்றாக் மாறிவிடும். எனவே எல்லோரும் பற்றை அகற்றிவிட்டு, அன்பாக இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள் ஆகும்

அன்புக்கு இதற்கு மேல் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Thursday 27 December 2012


இத படிங்க முதல்ல ....


இன்று எத்தனை பேருக்கு சுகப்பிரசவம் ஆகிறது? நினைத்தாலே கஷ்டமாக உள்ளது. டாக்டர் கிட்ட check-up-க்கு சென்றால் உடம்பு கொஞ்சம் மோசமான நிலையில் இருக்கிறது. கொஞ்சம் Rest எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது தான் தாமதம் உடனே கடைபிடிப்பார்கள். 10 மாதமும் complete rest தான். பின்பு, எப்படி சுகப்பிரசவம் ஏற்படும்?. முதல் மூன்று மாதம் சிரமமான வேலை செய்ய வேண்டாம் என்று தான் கூறி இருப்பார்கள். அதை இவர்கள் காரணம் காட்டி வேலையே செய்வதில்லை. டாக்டர் தான் சொன்னாங்கன்னு சொல்லி சாதித்து கொள்வது. சோம்பேறிகள் தான் வேலை செய்ய பயந்து கொண்டு இப்படி இருக்க வேண்டும். அந்த காலத்தில் வீட்டிலேயே சுக பிரசவம் ஆகிவிடும். 10 குழந்தைகள் பெற்று எடுத்து இருக்கிறார்கள். ஆனால் இன்று வேலை செய்ய பயந்து கொண்டு 10 மாதமும் Rest எடுப்பார்கள். கண்டிப்பாக சுகபிரசவம் ஆவதற்கு வாய்ப்புகள் குறைவு தான். கடினமானதை தூக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது தவறில்லை. ஆனால் கர்பினிகள் சுத்தமாக எந்த வேலையுமே செய்யாமல் இருக்காதீர்கள். சுகப்பிரசவம் வலிக்கும் என்று எண்ணி நிறைய பேர் ஆபரேசன் செய்து கொள்கிறார்கள். தயவு செய்து ஆபரேசன் செய்து கொள்ள கூடாது என்பது எனது வேண்டுகோள் ஆகும்.

கருத்தறித்தவுடன் நமக்கே தெரியும். உடம்பு மிகவும் சோர்வாக இருந்தால் சிறிது Rest எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி குனிந்து நிமிர்ந்து வேலை செய்தால் தான் நல்லது. Evening தினமும் walking போக வேண்டும்.

சுக பிரசவம் ஆகிவிட்டால் மூன்று நாட்கள் கழித்து நாம் நன்றாக இயங்க முடியும். சீக்கிரம் உடம்பு தேறிவிடும். ஆனால் ஆபரேசன் செய்து கொண்டால் புண் ஆர நாட்கள் ஆகும். முன்பு போல் Normal ஆக இருக்க முடியாது. பல பிரச்சனைகள் ஏற்படும். டாக்டர்கள் சில நல்ல விஷயங்களை உங்களுக்காக சொன்னால் அதை தவறாக உபயோகம் செய்யாதீர்கள். தயவு செய்து வேலைகளை செய்தால் தான் குழந்தை பிறக்கும் போது மிகவும் வலியில்லாமல் எளிதாக பெற்று விடலாம்.

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Wednesday 26 December 2012


எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ?


நமது உறுப்புகள் ஒவ்வொன்றும் நமக்கு கிடைத்த பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு  தயவு செய்து அக்கறை காட்டுங்கள். சிறியதாக இருக்கும் போதே சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். பெரிதாக வலி கூடிய பின்பு உறுப்பை வெட்டி எடுத்துவிடுவது இன்று சாதாரணமாக மாறிவிட்டது. அதை நினைக்கும் போது எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. எந்த எந்த உறுப்பு எங்கே இருக்க வேண்டுமோ அந்த அந்த உறுப்பு அங்கே கட்டாயமாக இருக்க வேண்டும். ஒரு உறுப்பை எடுத்த பின்பு பல பிரச்சனைகள் சந்திக்க வேண்டியிருக்கும். நமது உறுப்புகளில் கத்தி படவே கூடாது. அதை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் வீடு மற்றும் நகை இது போன்ற விஷயங்களுக்கு முக்கியதுவம் கொடுக்கிறோம்.

அதற்காக ஓடி ஓடி உழைக்கிறோம். உடம்பை கூட பேணி காப்பதில்லை. அப்படி ஓடி வீடு, நகை சேர்த்து விடுவோம். ஆனால்
அதை அனுபவிக்க நாம் இருக்க வேண்டும் அல்லவா? அதனால் சற்று சிந்தியுங்கள். எதற்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும் என்று யோசியுங்கள். நாம் நன்றாக இருந்தால் கடைசி வரை நிம்மதியாக இருக்கலாம். அதனால் நமது ஒவ்வொரு உறுப்புகளும் தான் "தங்கம்" போன்றவை அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

ஒரு பைக்கிள் பிரேக் இல்லை என்றால், அதாவது பிரேக்கை மட்டும் எடுத்து விட்டால் நாம் எப்படி சிக்கலில் மாட்டிக் கொண்டு முழிபோமோ, அது போல தான் நமது உறுப்புகள் எதுவானாலும், அதை எடுத்து விட்டார்கள் என்றால், நாம் மிகப்பெரிய சிரமத்தை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே உறுப்புகளுக்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Wednesday 19 December 2012


அக்குபஞ்சரில் அவசர கால சிகிச்சை:


அக்குபஞ்சர் வருமுன் காக்கும் வைத்தியம் என்று பார்த்தோம். அது மட்டும் அல்லாமல் மற்றும் ஒரு சிறப்பு அம்சம் உள்ளது. என்னவென்றால் அவசரகால சிகிக்சையும் அளிக்க முடியும். திடீரென்று Heart-ல் ஒரு பிரச்சனை என்று வைத்துக் கொள்வோம். அதாவது ஒரு படபடப்பு, நெஞ்சு வலி ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். Hospital போகும் வரை அவர்களுக்கு  ஒரு Relief கொடுக்க முடியும். அக்கு புள்ளிகள் இருதய சக்தி ஓட்டப்பாதையில் Toutch Healing கொடுக்கும் போது அவர்கள் Hospital போகும் வரை பாதுகாக்க முடியும் என்பது மிகப்பெரிய உண்மையாகும். என்னுடைய Experience ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு நாள் சென்னையில் Local A/C Bus-ல் சென்று கொண்டு இருந்தேன். அப்பொழுது எனக்கு எதிரே ஒரு family நின்று கொண்டு வந்தது. அதில் அப்பா, அம்மா, ஒரு பையன். அந்த பையனுக்கு 9 வயது இருக்கும். திடீரென்று அந்த பையனை அவனுடைய அப்பா திட்டிக்கொண்டே வந்தார். முகத்தில் ஒரு பயம் தெரிந்தது மற்றும் பதட்டம் தெரிந்தது. அவன் அப்பா அந்த பையனிடம் எப்படியாவது பொறுத்துக்கொள் என்று கூறிக்கொண்டே வந்தார். உடனே நான் சென்று என்ன பிரச்சனை? என்று கேட்டேன். உடனே அவர் சொன்னார், பையனுக்கு வாந்தி வருகிறதாம் என்றார். மேலும் என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் கூறினார். ஏனென்றால் A/c Bus-ல் ஜன்னல்கள், கதவுகள் எல்லாம் complete close-ஆக இருந்தது. அவருக்கு என்ன செய்ய என்று தெரியாமல் பையனை பொறுத்துக் கொள் என்று கூறிக் கொண்டே வந்தார்.

வாந்தியை Control பன்ன முடியுமா என்ன? உடனே நான் ஒரு அக்கு புள்ளியை சொல்லி Touch Healing செய்ய சொன்னேன். ஒரே ஒரு புள்ளி தான். ஒரே புள்ளியில் தூக்கம் மற்றும் வாந்தியின்மை சரி செய்ய முடியும். நான் அந்த புள்ளியை சொன்னவுடன் அவர் நான் யார் என்பதை தெரிந்து கொள்ள கூட யோசிக்காமல் நேரடியாக உடனே புள்ளியை தொட ஆரம்பித்துவிட்டார். எவ்வளவு டென்சனாக இருந்திருப்பார். அந்த புள்ளியை அவர் அமுக்கி கொண்டே வந்தார்.

அப்பொழுது தான் அந்த அதிசயம் நடந்தது. என்ன நடந்தது தெரியுமா? அந்த பையன் நின்றவாரே அவங்க அப்பாவை அணைத்தவாரே அவர்கள் இடம் வரும்வரை தூங்கிவிட்டான். இடம் வந்தவுடன் இறங்கும் போது பையனின் தந்தை நன்றி சொல்லி இறங்கினார். இவ்வளவு பெரிய டென்சனிலில் இருந்து அவருக்கு விடுதலை தந்ததை நினைத்து சந்தோஷம் அடைந்தேன்.

இது ஒரு சின்ன உதாரணம் தான். ஆனால் எவ்வளவு பெரிய விஷயத்தையும் அக்கு புள்ளிகளால் அவசர சிகிச்சை செய்ய முடியும் என்பது தான் உண்மை.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Monday 17 December 2012

எந்த நோயும் உங்களை நெருங்க பயப்படும்:


நோய் வந்த பின் என்ன செய்யலாம்? என்பதற்கு நிறைய மருத்துவ ஆலோசனைகள் கிடைக்கும். ஆனால் என்னுடைய நோக்கம் அது அல்ல. எப்படி நோய்கள் வராமல் தடுப்பது என்பது மட்டுமே. இது  இதுவரை யாருமே சொல்லாதது.

நமது உறுப்புகளை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்துக் கொண்டாலே எந்த ஒரு நோயும் வரவே வராது. அதுவும் கல்லீரல் மிகவும் குளிர்ச்சியாக வைத்துக்கொண்டால் சர்க்கரை நோய் மற்றும் மஞ்சள் காமாலை இது போன்ற பல நோய்கள் உருவாகாமல் தடுக்க முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும்.?

நாம் பல அருவிகளில் குளித்து இருப்போம். குளித்துவிட்டு வந்தவுடன் பார்த்தால் நமது கண்கள் மிகவும் சிவந்து காணப்படும். எவ்வளவுக்கு எவ்வளவு கண்கள் சிவக்கின்றதோ அவ்வளவு உஷ்ணம் நமது உடம்பில் இருக்கின்றது என்று அர்த்தம். ஆனால் அப்படி அருவிகளில் குளிப்பதால் அந்த உஷ்ணம் வெளியேறிவிடும். உறுப்புகளும் நன்றாக இயங்க துவங்கிவிடும். அதனால் தான் குளித்துவிட்டு வந்தவுடன் நன்றாக பசி எடுக்கும். அருவிகளில் குளிக்கும் போது என்ன நடக்கிறது என்றால், நமது கண்கள் வழியாக குளிர்ச்சி உள்ளே செல்லும் மற்றும் வாயை திறக்கும் போது நாக்கிலும் தண்ணீர் படும்.  இந்த இரண்டும் நனையும் போது நேரடியாக நீரின் குளிர்ச்சி கல்லீரல் சென்றடையும். 

இதனால் கண் நோய் மற்றும் கண் பார்வை போன்ற கோளாறுகள் குணமாகும். Beauty Parlor ல் வெள்ளரிக்காயை வட்டத்துண்டுகளாக்கி கண்கள் மேல் வைப்பார்கள். இதனால் கண் குளிர்ச்சியடையும்.

இதில் இருந்து என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கண் மற்றும் நாக்கு தண்ணீரில் நனைய வேண்டும் என்பது தான். இதை என்றோ ஒரு நாள் மட்டும் செய்யாமல் தினமும் நமது கடமைகளில் ஒன்றாக சேர்த்துக் கொண்டால் போதும் உடல் உறுப்புகள் குளிச்சியாகிவிடும்.

இதை எப்படி வீட்டில் செய்யலாம். Shower Bath -ல் தினமும் குளிக்கலாம். வேறு எப்படி செய்யலாம் என்று நீங்களும் சிறிது யோசியுங்கள். ஆனால் கண்கள் தண்ணீரில் நனைய வேண்டும் என்பது முக்கியம். ஒரு நாளைக்கு அரை மணி நேரம் கண்கள் மற்றும் நாக்கு நனையப்பட வேண்டும்.

நீச்சல் தெரிந்தவர்கள் நீச்சல் அடிக்கலாம். நீங்கள் இதை தினமும் செய்து வந்தால் நிச்சயமாக பல மாற்றம் ஏற்படும்  என்பது உண்மை. எனவே எல்லோரும் உறுப்புகள் குளிச்சியடைய இன்றே கடமையை செய்ய ஆரம்பியுங்கள். எல்லோருடைய உறுப்புகளும் குளிச்சியடைய வேண்டும், எந்த நோயும் இல்லாமல் வாழ வேண்டும் என்பது என் விருப்பம் ஆகும்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Sunday 16 December 2012


உங்கள் உள்ளங்கைகளில் அக்குபஞ்சர்:


அக்குபஞ்சருக்கு திரும்ப வருவோம். தியானம் என்ற அருமையான விஷயத்தை பேசியவுடன் வாசகர்கள் கொஞ்சம் பயந்து விட்டார்கள். தியானம் செய்யுங்கள் என்று சொல்கிறார்களே என்று கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நல்ல விஷயம் எல்லோருக்கும் சென்று அடைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆகும். அதனால் எல்லா பதிவுகளையும் தவறாமல் படியுங்கள், பயன் அடையுங்கள்.

கால் பாதத்தில் அக்கு புள்ளிகள் இருந்தது போல் உள்ளங்கைகளிலும் அக்கு புள்ளிகள் அமைந்துள்ளது. கால் பாதங்களில் எந்த உறுப்புகளுடன் தொடர்பு இருந்ததோ அதே போல் உள்ளங்கையிலும் எல்லா உறுப்புகளுக்கும் தொடர்பு உள்ளது. அதனால் நேரம் கிடைக்கும் போது, அந்த நேரததை வீணாடிக்காமல் உள்ளங்கையை நீவி விடலாமே ! பல உறுப்புகள் வேலை செய்யும்.


இதற்கு என்று தனியாக வேலை செய்ய  யாருக்கெல்லாம் தேவைப்படும் தெரியுமா? பாத்திரம் தேய்க்க பயப்படுபவர்களுக்கு! என்னங்க பாத்திரம் தேய்பதற்க்கும் அக்குபஞ்சருக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. சம்பந்தம் இருக்கிறது. பாத்திரம் தேய்க்கும் போது பல உறுப்புகளில் வேலை நடக்கும். ஆனால் பாத்திரம் தேய்த்தால் கை தேய்ந்துவிடும்  என்று எண்ணி வேலை செய்வதில்லை. அதில் இவ்வளவு அருமையான விஷயம் அமைந்துள்ளது. உடனே ஆண்கள் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? முடிந்தால் நீங்களும் செய்யலாம் இல்லை என்றால் உள்ளங்கைக்கு வேலை கொடுங்கள். வண்டி ஓட்டும் போது உங்களுக்கு உள்ளங்கை வேலை நடக்கும். இதில் பல நன்மைகள் நடக்கும்.
இதில் என்ன பெரிய விஷயம் தெரியுமா? வீட்டு வேலைக்கு ஆள் வைத்திருப்பவர்களுக்கு பெரிய நஷ்டம் !  வீட்டு வேலை செய்யும் வேலைகாரிக்குத்தான் Bonus! பாத்திரம் தேய்த்து , பல உறுப்புகள் நன்றாக இயங்க துவங்கிவிடும் மற்றும் மாத சம்பளம் வேறு! என்ன அதிஷ்டம்! அதனால் வேலைக்கு ஆள் வைப்பதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்! அதிஷ்டத்தை பெறுங்கள்.


வாசகர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். கொஞ்சம் எனக்கு ஊக்க மருந்து கொடுங்கள், அதாங்க உங்கள் விமர்சனங்களை பின்னூட்டம் இடுங்கள். அதுதான்  மேலும் எனக்கு எழுதுவதற்க்கு  தூண்டுகோலாக இருக்கும்.  உங்கள் விமர்சனங்கள் எனக்கு boost up கொடுக்கும்.


நன்றி,

அன்புடன்,

ஈஸ்வரி


Thursday 13 December 2012


புதிய திருப்பம் ஏற்படட்டும் !


தியானம் செய்யுங்கள் என்று சொல்லி விட்டீர்கள். அதை செய்ய நேரம் இல்லை என்று கூறாதீர்கள். ஏன் என்றால் அது மிகப் பெரிய பொய். ஏனென்றால் ஏற்கனவே நாம் எல்லோரும் நமக்கே தெரியாமல் தியானம் செய்து கொண்டு தான் இருக்கிறோம். அதுவே நமக்கு தெரியவில்லை.

தியானம் என்றால் என்ன? ஒரு இடத்தில் அமைதியாக அமர்வது அல்ல. அப்பொழுது தான் நிறைய குழப்பங்கள் வரும். "மனம் ஒருமனப்படும்" எல்லாமே தியானம் ஆகும். நமக்கு பிடித்த விஷயங்கள் ஏதாவது ஒன்றை நாம் மனம் லயித்து செய்து கொண்டு இருப்போம். அது எது என்று மட்டும் கண்டுபிடியுங்கள். அதை தினமும் செய்தாலே போதும் "கர்ம வினை" அழியும்.

ஒரு உதாரணத்திற்கு "பாட்டு படிப்பது" நமக்கு பிடித்த விஷயமாக இருக்கும். அதை படிக்கும் போது சுற்றி இருப்பவர்களை மறந்து விடுவோம். மனம் லயித்து விடும். இதுவே தியானம் ஆகும். இது போல் ஒவ்வொருவருக்கும் ஒன்று பிடிக்கும். அது எது என்று கண்டு பிடியுங்கள். உங்களை நீங்களே திரும்பி பாருங்கள். மற்றவர்களை பார்ப்பதை தவிருங்கள்.  "மன அமைதி" கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும்.

நான் சொன்ன எல்லா விஷயங்களை படித்து விட்டு, "பரவாயில்லை இவுங்க நன்றாக சொல்லுறாங்க" என்று பேசுவதை விட்டுவிட்டு கடைபிடியுங்கள்! புதிய திருப்பம் ஏற்படும் உங்கள் வாழ்வில்!

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி


Tuesday 11 December 2012


இறைவனின் பிரமாண்டம் : (பகுதி -2)


கடவுள் என்ன தேவையோ அதையெல்லாம் முன்பே அறிந்து அனைத்தையும் அளித்துள்ளார். ஆனால் அதையெல்லாம் குழப்பம் செய்து தவறாக வாழ்ந்துவிட்டு பின்பு எல்லம் வல்ல இறைவனை திட்டுகிறோம். ஆனால் நமக்கு என்னவெல்லாம் தந்தார் என்பதை இறைவனின் பிரம்மாண்டம் என்ற தலைப்பில் ஏற்கனவே தந்துள்ளேன். படிக்காதவர்கள் படித்துவிட்டு வரவும்.

வேறு என்ன அற்புதம் செய்துள்ளார்? உடம்புக்கு மட்டும் அல்லாமல் மனதுக்கும் நிறைய தந்துள்ளார். ஆம், நாம் பல பிறவிகளில் நிறைய பாவங்களை சேர்த்து வைத்திருப்போம். அதை இந்த பிறவியில் கஷ்டங்களாக அனுபவித்துக்கொண்டே இருந்தால் என்ன செய்வது? இதற்கு வழிதான் என்ன?

அவ்வளவுதான் நீங்கள் எல்லா கஷ்டங்களையும் அனுபவித்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை என்று உங்களை கை விட்டு விட வில்லை. அதற்காக ஒரு வழியும் வகுத்து தந்துள்ளார்.  அந்த வழிதான் "தியானம்" என்ற மிக அற்புதமான ஒன்று. உங்கள் பாவங்கள் அனைத்தும் அழித்துவிடும். "தியானம்" என்பது மன அமைதியாகும்.

அதனால் உடம்புக்கு தேவையானதையும், மனதுக்கு தேவையானதையும் இறைவன் அளித்துள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த இரண்டையும் நன்றாக உபயோகிப்பது யார் கையில் இருக்கிறது? நம் கையில் தான்! எல்லா பிரச்சனைக்கும் வழி தந்துள்ளார். எல்லா சக்தியும் நமக்குள்ளே இருக்கிறது என்பதுதான் உண்மை. எனவே இறைவன் தந்த பரிசை உபயோகிக்க கற்றுக்கொண்டாலே போதும் வாழ்க்கையில் ஜெயித்துவிடலாம்.

இறைவனிடம் போய் கேட்கும் அளவிற்கு அவர் எந்த குறையும் நமக்கு வைக்கவில்லை.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Monday 10 December 2012

நாமே நமது நோய்களைப் பற்றி அறிந்து கொள்வது எப்படி?



நாமே நமது நோய்களைப் பற்றி அறிந்து கொள்வது எப்படி என்பதை பற்றி கூற இருக்கிறேன். உடம்பில் ஏதேனும் வலி தோன்றினால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டுமா? அல்லது சிறிய நோய் தானா? என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு உதாரணத்திற்கு காய்ச்சல் ஒரு நாள் மட்டும் வந்தால் அது சிறிய நோய் தான். ஆனால் அதுவே ஒரு வாரம் வரை விடாமல் தொடர்ந்து இருந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்குபஞ்சரில் 2 sittings போட்டால் போதும் காய்ச்சல் ஓடிப்போய்விடும். வாயுத்தொந்தரவு இருந்தால் அவர்களுக்கு முதுகு வலி மற்றும் ஏதாவது ஒரு இடத்தில் பிடித்துக் கொள்ளும். அதுவும் வலி ஏற்படும். அதற்காக பயந்து கொண்டு இருக்கத் தேவையில்லை. வாயு தொந்தரவு இருந்தால் நெஞ்சு கூட வலிப்பது போல் இருக்கும். ஆனால் அது நெஞ்சுவலி கிடையாது. அது போல் நாமே நம்மை புரிந்து கொள்ள சின்ன டிப்ஸ் தரப்போகிறேன்.

1.வயிற்றில் இடது பக்கம் தொடர்ந்து பல நாட்கள் வலித்தால் வயிறு, சிறுகுடல், மண்ணீரல் அல்லது கர்ப்பபை பிரச்சனை என்று அறிந்து கொள்ளலாம். 

2.வயிற்றில் வலது பக்கம் தொடர்ந்து பல நாட்கள் வலித்தால் கல்லீரல், பித்தப்பை, பெருங்குடல் போன்ற பிரச்சனை என்று அறிந்து கொள்ளலாம். 

3.அது போல் மார்பு பகுதியில் இடது பக்கம் வலித்தால் இருதயமும், வலது பக்கம் வலித்தால் நுரையீரல் பிரச்சனை என்று அறிந்து கொள்ளலாம்.

4.அடிவயிற்றில் வலி மற்றும் பின் பக்க வலி என்றால் சிறுநீரகத்தில் பிரச்சனை என்று அறிந்து கொள்ளலாம். 

5.பின்பக்க முதுகில் நடுவில் மேலிருந்து கீழ் வரை வலித்தால் spinal card பிரச்சனை என்று அறிந்து கொள்ளலாம்.

இதை ஏன் கூறுகிறேன் என்றால் ஒரு வாரத்திற்கு மேல் வலி இருந்தால் நிச்சயமாக அது பெரிய பிரச்சனை தான். உடனே மருத்துவரிடம் அனுகவும். தாமதம் செய்ய செய்ய நமக்குததான் கஷ்டம்.

Simple -ஆக சொல்ல வேண்டும் என்றால், எந்த இடத்தில் கை வைத்தால் அதிகமாக வலிக்கிறதோ. அந்த இடத்தில் என்ன உறுப்பு இருக்கிறதோ, அந்த உறுப்பில் தான் பிரச்சனை இருக்கும் என்பதை நாமே தெரிந்து கொள்ள முடியும்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் சின்ன பிரச்சனையை கூட பெரியதாக சொல்லி விடுகிறார்கள். உடனே பயந்து விடுகிறோம். அதனால் பணம் நிறைய விரயம் ஆகிவிடும். நேரமும் வீணாகிவிடும். அதனால் எல்லோரும் சற்று நம் உடம்புடன் இணைந்து இருந்தால் நாமே அறிந்து கொள்ள முடியும் என்பதில் ஐயம் இல்லை. உடம்பில் நிறைய வலி இருந்தும் சிலர் மருத்துவரிடம் அணுகுவது இல்லை. அதுவும் தவறாகும். எப்பொழுது அணுக வேண்டும். அணுக கூடாது என்ற விழிப்புணர்வு வர வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

சாதாரண நோய்களுக்கு சில நேரங்களில் பல Test எடுத்துப் பார்ப்போம். கடைசியில் ஒன்றும் இல்லை என்பார்கள். இதனால் எவ்வளவு செலவு மற்றும் மன அழுத்தம் கூட. ஆனால் உண்மையில் நாள் பட்ட வியாதியாக இருக்கும். அதை அலட்சியமாக விட்டு விட்டு பின் வருந்துவது. இது இரண்டுமே தவறு தான். அதனால் யோசித்து செயல்படுங்கள்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Sunday 9 December 2012

எந்த மருத்துவத்திலும் இல்லாத ஒன்று .....


அக்குபஞ்சர் சிகிச்சையில் நோய் மட்டும் குணமாக்கப்படுவதில்லை. மிகமிக முக்கியமான ஒன்று அக்குபஞ்சரில் அதிகம் அமைந்துள்ளது. மற்ற எந்த மருத்துவத்திலும் இல்லாத ஒன்று இந்த அக்குபஞ்சரில் அமைந்துள்ளது. அதை கூறுவதற்க்கு முன் சில விஷயங்களை சொல்லிவிட்டு வருகிறேன்.

நோய் வருமுன் காக்க வேண்டும் என்று சிலர் பாதுகாக்கின்றோம். அதையும் தாண்டி சில நோய்கள் வந்துவிடுகின்றன. அதுவும் சரி ஏற்றுக்கொள்ளக் கூடியதே, ஏன்னென்றால் இது இயற்கையான சில விஷயங்கள் ஆகும். ஆனால், பிறக்கும் குழந்தைகளுக்கு கூட பிறக்கும் போதே நோய்களுடன் பிறக்கின்றன. சில நோய்கள் நமக்கே தெரியாமல் நம்மை கஷ்டப்படுத்துகிறது ஏன்? என்ன காரணம்? எந்த தவறும் செய்யாத பிறந்த குழந்தைக்கு ஏன் இந்த தண்டனை? இது எல்லோருக்கும் இருக்கும் கேள்வி ஆகும்

அது தான் "கர்மவினை" ஆகும்.  அது என்ன கர்மவினை?. கர்மவினை என்றால் பல பிறவிகளில் செய்த பாவங்கள் தான் இந்த பிறவிகளில் கஷ்டங்களாக வெளிப்படுகின்றன. அதை யாரலும் தடுக்க முடியாது. ஆனால் கர்மவினை முடிந்தவுடன் தானாகவே அதற்கான விடைகள் கிடைத்து நோய்கள் சரியாகிவிடும். அதுவரை நம்மை படுத்திவிடும்.

(பல பிறவிகளில் செய்த பாவங்கள் தான் இந்த பிறவிகளில் கஷ்டங்களாக வெளிப்படுமா? அது எப்படி? என்று கேட்பவர்கள் பின்னூட்டம் இடுங்கள் விடை தருகிறேன். ஏனென்றால் அது பற்றி பேச ஆரம்பித்தால் அதற்க்காக தனி Blog- எழுதவேண்டும்.) 

இந்த கர்மவினைக்கும் அக்குபஞ்சருக்கும் என்ன சம்பந்தம் என்றால், முழுமையாக தீர்வு அக்குபஞ்சரில் மட்டும் தான் இருக்கின்றன்.  

அது என்ன தீர்வு என்றால் கர்மவினையை அழிக்கும் புள்ளிகள் நம் அக்குபஞ்சரில் மட்டும் தான் உள்ளன.

கர்மவினைக்கான புள்ளிகளை போட்டுவிடும் போது பல பிறவிகளில் நாம் செய்த பாவங்கள் அழியும் என்பது மிக மிக உண்மையான விஷயம் ஆகும். பல நாட்கள் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்கள் கூட இந்த இடத்தில் ஊசிகளை போட்டு விட்டால், Depression குறைந்து தூக்கிவிடுவார்கள் மற்றும் நோய்களும் சரியாகிவிடும்.

இது எந்த மருத்துவத்திலும் கிடையாது. இந்த புள்ளிகளை கைகளால் தொடக்கூடாது. ஊசிகள் மட்டும் போட்டுக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து ஒருவாரம் போட்டால் நிறைய வித்தியாசம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே இந்த மருத்துவத்துறை எனக்கு கிடைக்கக கூட நாம் பல பிறவிகளில் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்ள பெருமைபடுகிறேன். இதை படிக்கும் ஒவ்வொருவருமே புண்ணியம் செய்தவர்கள் தான்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Thursday 6 December 2012


அன்புடைய வாசகர்களுக்கு,

உங்களின் மேலான ஆதரவிற்க்கு எனது பனிவான நன்றிகள்.

இந்த குறுகிய நாளில் இவ்வளவு வாசகர்கள் கிடைத்துள்ளார்கள் என்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள். இன்னும் நிறைய விஷயங்கள் வர இருக்கின்றன.

மூன்று நாட்கள் நான் வெளியூர் செல்ல இருப்பதால் அடுத்த பதிவு வரும் திங்கட்கிழமை வெளிவரும்.


நன்றி,


அன்புடன்,
ஈஸ்வரி


விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை:


நோய் உருவாகுவதைப் பற்றி பார்த்தோம். அதில் சில காரணங்கள் கூறி இருந்தேன். அதில் இன்னொரு முக்கியமான காரணம் என்னவென்றால் "மன அழுத்தம்" ஆகும். நாம் எல்லோரும் சந்தோசமாக வாழ வேண்டும் என்று தான் நினைக்கிறோம். அதையும் தாண்டி "Stress"  மற்றும்  "Depression" வந்து விடுகிறது. எதனால் உருவாகிறது? அடிப்படை காரணம் என்னவென்றால் "ஆசை" .

1."ஆசையே அழிவுக்கு காரணம்" என்று ஒருவரியில் படித்திருப்போம். ஆனால் அந்த மிகப்பெரிய விஷயத்தை ஒருவரியில் படித்து தெரிந்து வைத்திருக்கிறோம்.

2."பிறரை சார்ந்து வாழ்வது" இந்த இரண்டும் தான் நம்மை கவலை பட செய்கிறது. பிறர்  நம்மை பற்றி என்ன கூறுகிறார் என்பது நம்முடைய மிகுந்த ஆர்வம் ஆகும். இது இயற்கை எல்லோருக்கும் இருக்கக்கூடியதே.

ஆசை என்று எடுத்துக் கொண்டால் அவர் அவருடைய ஆசை நியாமான ஆசை என்று தான் கூறுவர். ஆசைக்காகத்தான் நாம் பிறவியை எடுத்து இருக்கிறோம். நியாயம் எது அநியாயம் எது என்று எப்படி உணர்ந்து கொள்வது? மிக எளிமையாக கூறி விடுகிறேன்,

 *  ஆசை என்பது முடிந்தவரை பிறருக்கு துன்பம் தராத ஆசையாக இருந்தால் மட்டும் போதும். நான் நன்றாக படிக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இது போன்ற ஆசைகள் பிறருக்கு நன்மை, நமக்கும் நன்மையே ஏற்படுத்தும். நமக்கு பிடித்த ஆசை மற்றவருக்கு பிடிக்காமல் இருக்கும். அது துன்பத்தை ஏற்படுத்தும்.  அப்படி ஏற்படும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாது.  உதாரணத்திற்க்கு பெற்றோர்கள் தம் மகன் டாக்டர் ஆக வேண்டும் என்று நினைப்பதும் மகனின் கனவு பெரிய ஓவியராக வரவேண்டும் என்று நினைப்பதும். பின் பையன் ஓவியரான பின் பெற்றோருக்கு பிடிகாமல் போவது நடை முறையில் நாம் பார்க்கும் விஷயங்கள். தம் ஆசைகாக பிடிக்காத விஷயத்தை தினிப்பது இருவருக்கும் துன்பமே. பெற்றோருக்கும் துன்பம், மகனுக்கும் துன்பம். இதுவே கவலையாக மாறி depression ஆக மாறிவிடும். இது போல் தான் எல்லா ஆசைகளும் துன்பத்திற்க்கு காரணமாகிறது.

* இந்த நேரங்களில் தான் முக்கியமான ஒன்று தேவை. அது என்னவென்றால் "விட்டுக்கொடுப்பது" "யார் பக்கம் உண்மை அதிகம் இருக்கிறதோ" அவர்களுக்கு அந்த ஆசையை விட்டு கொடுத்துவிட்டால் பிரச்சனை வராது.

பிறர் சொல்லும் வார்த்தைகளை வைத்து தான் நாம் வாழ்கிறோம். ஒரு முடிவு எடுப்பதற்க்குள் பல குழப்பங்கள் ஏற்படும். பிறர் நம்மை பற்றி சொல்லும் கருத்துக்கு முக்கியதுவம் கொடுக்க தேவையில்லை. நம்மைபற்றி நமக்கு தெரியும் போது பிறர் சொல்லும் கருத்தை உள்வாங்க தேவையில்லை.

ஆசை மற்றும் பிறர் கருத்துக்கு முக்கியதுவம் கொடுப்பதை நிறுத்திவிட்டால் எந்த ஒரு "Stress"  மற்றும்  "Depression" ஏற்படாது. நாம் மனதை அமைதியாக வைத்துக் கொண்டால் தான் உடம்பு நன்றாக இருக்கும். எனவே எல்லோரும் விட்டுக் கொடுத்து வாழ கற்றுக் கொண்டால் போதும் இனி வாழ்க்கை சூப்பராக இருக்கும்.

                "விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை. 
                  கெட்டுப்போபவர் விட்டுக்கொடுப்பதில்லை"


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Wednesday 5 December 2012

காக்க காக்க வரும் முன் காக்க !



அக்குபஞ்சர் என்பது வரும்முன் காக்கும் வைத்தியம் ஆகும். நமது உடலில் நோய் முற்றி பெரிய வியாதியாக மாறும் வரை நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம். அந்த விழிப்புணர்வை கொண்டு வரவேண்டும். இறைவன் நமக்கு ஒரு நோய் ஆரம்பம் ஏற்படும் போது சில அறிகுறிகள் தெரியும் படி படைத்துள்ளார். நாம் அதை உதாசீனப்படுத்திவிடுகிறோம். பின்பு முற்றாமல் என்ன செய்யும்?

"நேற்று வரைக்கும் நன்றாக இருந்தார் திடீரென்று Heart Attack வந்திருச்சு" என்பார்கள். திடீரென்று சர்க்கரை நோய் வந்துவிட்டது என்று பலர் கூறுவார்கள். அது எல்லாம் உண்மையல்ல, அறியாமையால் கூறுவது ஆகும். இறைவன் Heart-யை மிக பத்திரமாக இருப்பதற்கு மூன்று உறை தாண்டிய பின்பு படைத்துள்ளார். அதை தாண்டி சென்று Heart Attack ஆகிறது என்றால் நாம் எவ்வளவு கவனக்குறைவாக இருந்திருக்க வேண்டும். அதனால் நம்மிடம் இருக்கும் தவறை மாற்றி கொண்டாலே போதும். பல நோய்களில் இருந்து வெளியே வந்துவிடலாம்.

நன்றாக தெரிந்து கொள்ளுங்கள், உடம்பின் உள்ளே பிரச்சனை என்றால் வெளியே தெரியப்படும் வலியாகவோ, அரிப்பாகவோ, தடிப்பாகவோ அல்லது வாந்தி போன்ற எந்த ஒரு அறிகுறியாவது தோன்றும். அதை வைத்து தெரிந்து கொண்டு நாம் உடனே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். தயவு செய்து உடம்புக்கு அக்கரை காட்டுங்கள். ஏன் என்றால் நம்முடைய " ஆத்மாவை" தாங்கி பிடித்துக் கொண்டு இருப்பது இந்த உடம்பு தான். நாமே நம் உடம்பை மதிக்கவில்லை என்றால் பிறர் எப்படி நம்மை மதிப்பார்கள். ஏன் சொல்கிறேன் என்றால் உடம்பு நன்றாக இருந்தால் தான் Public நம்மை மதிக்கும் ஏதாவது பெரிய நோய் வந்துவிட்டால் யாரும் அருகில் கூட வரமாட்டார்கள். எந்த உதவியும் செய்ய மாட்டார்கள்.

எடுத்துக்காட்டாக ஒருவர் சாதாரண சளியால் அதிகமாக இருமுகிறார் என்றால்,  அனைவரும் அவர் அருகில் செல்ல யோசிப்பர். ஏதாவது நோய் கிருமிகள் நம்மை தாக்கிவிடும் என பயப்படுவர். ஆனால் வெளியில் சொல்ல மாட்டார்கள். ஒரு சாதாரண சளி மற்றும் இருமலுக்கே இப்படி என்றால், பெரிய பெரிய நோய்களுக்கு எப்படி மக்களிடம் Response இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

அதனால் நம் உடம்பை கெடுத்துக் கொண்டு பிறருக்கு எந்த சிரம்மத்தையும் கொடுக்காதீர்கள். அதனால் "வரும் முன் காக்க" கற்றுக் கொள்ளுங்கள்.  


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Tuesday 4 December 2012

உங்கள் நோயை வேறுடன் பிடுங்க வேண்டுமா?



அக்குபஞ்சர் treatment எவ்வளவு நாள் எடுத்துக்கொள்ள வேண்டும்? என்ற சந்தேகம் எழும். அதைப்பற்றி கூற இருக்கிறேன். நம் வியாதியின் அளவை பொறுத்து தான் சொல்லமுடியும். சின்ன பிரச்சனை என்றால் 3 sittings -ல் சரி செய்யலாம். பெரிய பெரிய பிரச்சனை என்றால் சில நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். பல வருடம்  நாள்பட்ட நோயாக இருந்தால் அதற்கு ஏற்றால் போல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இது என்ன ஒரு பெரிய விஷயம் என்றால் அக்குபஞ்சர் Needle போட்டுக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டும் அல்லாமல் வேறுடன் உள் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யும். அதாவது திரும்ப திரும்ப வராது என்பது உறுதி. மாத்திரை அதிகம் எடுத்துக்கொண்டால் நமது எதிர்ப்பு சக்தி குறைந்து விடும் என்பது மிக மிக முக்கியமான உண்மையாகும். அதனால் தயவு செய்து விழிப்புண்ர்வு ஏற்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆகும்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Sunday 2 December 2012

ஆச்சரியமான உண்மை?





அக்குபஞ்சர் சிகிச்சையின் மகிமை பற்றி கூற இருக்கிறேன். அக்குபஞ்சர் நீடில் போட்டால் எப்படி நோய்கள் சரியாகின்றன ? என்ற சந்தேகங்கள் நிறைய பேருக்கு உண்டு. அதை பற்றிய சந்தேகங்களை சரி செய்ய கடமை பட்டுள்ளேன்.

ஒரு உதாரணத்திற்க்கு இருமல் என்று வைத்துக்கொள்வோம். அதற்கான சக்தி ஒட்டப்பாதையில் நாம் நீடில் போடுவோம். அது சரியாகிவிடுகிறது எப்படி? அந்த சக்தி ஓட்டப்பாதையில் தடை ஏற்பட்டு இருக்கும். அந்த தடையை மட்டும் தான் நாம் எடுத்து விடுகிறோம். மீதமுள்ள வேலையை உடம்பு தானே பார்த்துக் கொள்ளும். மீண்டும் சொல்கிறேன், உடம்பிற்க்கு தன்னைதானே சரி செய்து கொள்ளும் சக்தி  உள்ளதால் நாம் வெறும் தூண்டுகோளாக இருந்து நீடில் மட்டும் போட்டால் போதும்,  மீதியை அதுவே பார்த்துக் கொள்ளும்.

நம் உடம்பை எவ்வளவு சக்தி உள்ளதாக கடவுள் படைத்துள்ளார். நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. நம் தெளிவு என்னவென்றால், நம் உடம்பு தானே வேலையை செய்து கொள்ளும் என்ற உண்மையை புரிந்து கொண்டால் போதும். Allopathy Treatment  கூட மாத்திரையை கொடுப்பது மட்டும் தான் Doctor வேலை. மீதி வேலையை செய்வது யார்?  நம் உடலில் உள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் தான். நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நமக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் என்று தான் கூறுவேன். அதை தயவு செய்து கெடுத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் வெளியில் கிடைக்கும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆனால் உடம்பின் உள் உறுப்புக்கு முக்கியத்துவம் தருவதில்லை.

வேலை செய்யும் போது கையில் கத்திபட்டு இரத்தம் வந்துவிடுகிறது. கையை கிழித்துக் கொள்வோம். இது ஒரு சாதாரண விஷயம். ஆனால் நன்றாக கவனியுங்கள். முக்கியமான ஒன்றை கூறப்போகிறேன். கையில் கிழித்த இடத்தில் சிலர் கொஞ்சம் மருந்து போடுவர் மற்றும் சிலர் ஒன்றுமே போட மாட்டார்கள். ஆனால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து பாத்தால் அந்த புண் ஆறியிருக்கும். அந்த வெட்டுப்பட்ட இடம் மூடியிருக்கும். அதை நாம் கவனித்து இருக்க மாட்டோம். இனி மேல் கவனியுங்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் உடம்பிற்க்கு தன்னை தானே சரி செய்து கொள்ளும் ஆற்றல் உண்டு என்பது மிகப்பெரிய உண்மையாகும்.

"என்னைப் பொறுத்த வரையில் உடல் உறுப்புகள் தான் டாக்டர் என்று சொல்வேன்" வெளியில் இருக்கக்கூடிய நாம் வெறும் தூண்டுகோள்கள் அவ்வளவு தான்.

எல்லோருக்கும் வரும் சந்தேகம். அக்குபஞ்சர் நீடில் உள்ளே ஏதோ மருந்து அடைத்து வைத்துள்ளார்கள், அதனால் தான் நோய் சரியாகிறது என்பது.  ஆனால் அக்குபஞ்சர் நீடிலில் எந்த ஒரு மருந்தும் கிடையாது. ஆனால் மிக அற்புதமாக வேலை செய்யும். அதனால் இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. எந்த ஒரு side effect இல்லாமல் மற்றும் வலியும் இல்லாமல் நோய் குணமாகும் நல்ல ஒரு இறை மருத்துவம் ஆகும்

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

படம் : நன்றி கூகுள்