Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Wednesday 20 February 2013

பொறாமை கொண்டவர்களை எப்படி அறிந்து கொள்வது?




நாம் வாழும் வீட்டிலும் சரி, வெளியே வேலைக்கு செல்லும் இடத்திலும் சரி நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. அதில் மிகமிக முக்கியமான ஒன்று என்னவென்றால் "நம்மைவிட மற்றவர்கள் முன்னேற விடக் கூடாது"  என்ற எண்ணத்தில் பலர் உள்ளனர் என்பது தான். இதனால் எத்தனை பேர் மனநிலை பாதித்து வருகிறார்கள் தெரியுமா? மிக மிக கவலையான விஷயம் தான். இந்த பொறாமை என்ற கெட்ட குணம் இருந்தால் தான் "மற்றவர்கள் முன்னேற கூடாது" என்ற எண்ணம் வரும். 


பொறாமை கொண்டவர்களை எப்படி அறிந்து கொள்வது? நீங்கள் எவ்வளவு நல்ல விஷயத்தை செய்தாலும் சரி அதை விட்டுவிட்டு குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். அதாவது தவறை மட்டும் கண்டுபிடிக்கப் பார்ப்பார்கள். நீங்கள் செய்த நல்ல விஷயத்தை கண்டு மகிழ முடியாது. மனம் திறந்து பாராட்ட முடியாது. முகமே வாடிவிடும் அதை வைத்து தெரிந்து கொள்ளலாம். பொறாமை எண்ணம் கொண்டவர்களிடம் நல்ல எண்ணம் இருக்காது. அதைக்கண்டு பல பேர் வருத்தம் அடைகிறோம்.

1. பொறாமை எண்ணம் கொண்டவர்களிடம் உங்கள் வளர்ச்சியை சொல்லத் தேவையில்லை, ஏனென்றால் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும் மனம் அவர்களிடம் கிடையாது. அதனால் அவர்களிடம் உங்களை நிருபிக்க தேவையில்லை.

2.பொறாமை எண்ணம் கொண்டவர்கள் எவ்வளவு தான் உங்களை குறைவாக நினைத்தாலோ அல்லது கெடுக்க நினைத்தாலோ அது நிச்சயம் நடக்காது என்பதை மட்டும் புரிந்து கொண்டால் போதும். நமக்கு என்ன கிடைக்க இருக்கிறதோ அது கண்டிப்பாக கிடைக்கும்.

3.அவர்களை இரண்டு வார்த்தை புகழ்ந்து பேசினால் போதும் அவர்கள் வாயை அடைக்க செய்துவிடலாம்.(இதெல்லாம் சின்ன டிப்ஸ் தான்). இதையே உபயோகிக்க தேவையில்லை.

4.அதனால் அவர்களை பார்த்து பயப்படத்தேவையில்லை. அவர்கள் என்றும் முன்னேற மாட்டார்கள் என்பது தான் உண்மை.அவர்களின் நிலையை கண்டு பரிதாபப்படவேண்டும்.

ஆகவே நீங்கள் கவலையை விட்டு வெளியே வந்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆகும்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி




Sunday 17 February 2013

திருப்தி எப்படி வரும் ?





நமது எண்ணங்கள் Positive-ஆக இருக்க என்ன செய்யலாம் என்று பார்த்தோம். நமது ஆசைகள் நிறைவேறவில்லையே என்று புலம்பி வெம்பி கொண்டு இருக்கிறோம். ஆனால் அது முற்றிலும் தவறாகும். எல்லோருடைய ஆசையும் நிறைவேறிக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதை நாம் உணரவில்லை. ஏன் என்றால் ஒரு ஆசை நடந்தவுடன் அதை அனுபவிக்கும் முன் இன்னொரு ஆசை வந்துவிடுவது தான். இதை கவனித்தீர்கள் என்றால் போதும் பாதி கவலை சரியாகிவிடும். ஒரு உதாரணத்திற்கு, ஒரு தாய்க்கு குழந்தை இல்லை என்பது பெரிய கவலை. பல நாட்கள் காத்திருந்தபின் ஆசை நிறைவேறும். ஆனால் குழந்தை பிறந்தவுடன், அதை அனுபவிக்கும் முன் குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டும், படிக்க வைக்க வேண்டும், இப்படி அடுத்து அடுத்து தொடர்ந்து வரும் ஆசைகள் தான் நம் கவலைக்கு காரணம். என்ன சொல்ல வருகிறேன் என்றால் குழந்தை கிடைத்ததை முழுமையாக் அனுபவியுங்கள் அப்படி அனுபவிக்காதலால் திருப்தி ஏற்படுவதில்லை. நமக்கு என்ன கிடைத்துக் கொண்டு இருக்கிறதோ அதை முழுமையாக அனுபவிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

எதுவும் நமக்கு கிடைக்காமல் இல்லை. இதை படிக்கும் போது சற்று உங்களை திரும்பி பாருங்கள். என்னவெல்லாம் உங்களுக்கு கிடைத்ததோ அதை முழுமையாக அனுபவிக்கவில்லை என்று யோசியுங்கள் !. என்ன கிடைத்தது என்பது புரியவரும். ஆசைக்கு அளவே இல்லாமல் போகும் போது கவலைகள் அதிகம் ஆகிக்கொண்டே போகும் என்பது தான் உண்மை. இன்றில் இருந்து வாழ்க்கையை முழுமையாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். எதை செய்தாலும் அதை ரசித்து ருசித்து செய்யுங்கள் மற்றும் அனுபவியுங்கள் உங்கள் வாழ்வு திருப்தி அடைய எனது நல்வாழ்த்துக்கள்.

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Thursday 14 February 2013

அனைவரும் காதல் செய்து கொண்டு தான் இருக்கிறோம் !






காதல் என்பது மிகவும் புனிதமானது மற்றும் தெய்வீகமானது ஆகும். மனதராய் பிறந்த ஒவ்வொருவருகுள்ளும் காதல் மலரும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இதை யாரும் இல்லை என்று மறுக்க முடியாது. காதல் என்பது மூன்று வருடம் காதலித்தால் தான் காதலா என்ன?. ஒரு நொடி போதும் உள்ளே வருவதற்கு என்பதால் தான் வீட்டில் பார்த்து செய்து வைத்தாலும் கூட பெண் பார்க்க வந்த அந்த நிமிடத்தில் இருவருக்கும் பிடித்து விடுகிறது. காதல் திருமணம் அல்லது வீட்டில் பார்த்து வைத்த திருமணம் ஏதுவாக இருந்தாலும் சரி காதல் ஏற்படுவது ஒன்று தான். அதனால் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் காதல் எல்லோருக்கும் உள்ளே மலரும் விஷயம் ஆகும்.

அதனால் என்ன சொல்ல வருகிறேன் என்றால் காதல் செய்யும் நேரத்தில் அன்பு மனம் திறந்து இருக்கும். அது சில காலகட்டங்களில் மட்டும்  இருக்கும் பின்பு ego வந்தவுடன் எல்லோரும் சண்டை போட்டுக்கொள்வார்கள், அது காதல் திருமணம் செய்தவராக இருந்தாலும் சரி, வீட்டில் முடிவு செய்த திருமணம் ஆகி இருந்தாலும் சரி.

உண்மையான காதலர்கள் என்றும் பிரிய மாட்டார்கள். யாராலும் பிரிக்கவும் முடியாது. ஏன்னென்றால் அதற்கு அவ்வளவு சக்தி உண்டு. காதல் என்றால் தவறு என்று நினைத்து யாரையும் பிரிக்க வேண்டாம். ஏனென்றால் நீங்களும் ஒருவரை ஒருவர் நேசித்து தான் திருமணம் செய்துள்ளீர்கள் என்பதை மறந்து விடவேண்டாம். காதல் செய்பவர்கள் முழுமையாக மனதை மட்டும் நேசித்தால் நல்லது மற்றும் உண்மையானதும் கூட. ஆனால் அதில், ஜாதி, மதம், பணம், காமம், சுயநலம், இதெல்லாம் இருந்தால் யாரும் பிரிக்க தேவையில்லை அதுவே பிரிந்து போய் விடும் என்பது உண்மையாகும்.

அதனால் ego -வை மட்டும் எடுத்து விட்டு அனைவரும் ஒருவரை ஒருவர் நேசித்து இன்பமாக வாழ என் நல்வாழ்த்துக்கள்.

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Monday 11 February 2013

வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் தேவை .. .. ..



நாம் எல்லோரும் முன்னேறுவதற்கு Positive thoughts இருக்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல, அதை ஒவ்வொருவருக்குள்ளும் எப்படி கொண்டு வருவது என்பது பற்றி பார்ப்போம். காலையில் எழுந்தவுடனே நல்ல Positive energy கொடுக்கககூடிய விஷயங்களை கேட்கலாம். உதாரணத்திற்கு Hello FM 106.4 Chennai -ல் திரு.ஜெயராம் அவர்கள் தினமும் காலையில் 5.30 am to 7.00 am வரை ஆன்மீக கதைகள் மற்றும் சிந்திக்க தூண்டும் கதைகள் சொல்வார். அதை கேட்கலாம், அப்படி கேட்கும் பொழுது அன்று முழுவதும் நமக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்.

நம் வீட்டில் இருக்கும் எல்லோரிடத்திலும் கலகலப்பாக மனம் விட்டு பேச வேண்டும். ஒருவரிடத்தில் இருக்கும் நல்ல பண்புகளைப் பற்றி அவரிடம் வெளிப்படையாக மனம் திறந்து பாராட்ட வேண்டும். நீங்கள் எப்படியோ அப்படியே திரும்பிவரும்.(Every action has an equal and opposite reaction) ஒரு உதாரணத்திற்கு ஒருவரை வழியில் சந்திக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால் அதற்கு அவர் "ஏதோ இருக்கிறேன்", Life ஏதோ போகிறது என்று கூறினால் நாமும் அதையே கூறுவோம். அப்படி அல்லாமல் life-super -ஆக போகிறது என்று சொல்லுங்கள். அவரை ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும். நாம் பேசும் பேச்சில் கூட உற்சாகம் காணப்பட வேண்டும். நல்ல விஷயங்கள் உள்ள புத்தகங்களை படியுங்கள். டி.வி-யில் பல நல்ல விஷயங்கள் இருக்கும் நிகழ்ச்சிகளைப் பாருங்கள். இவ்வாறு தொடர்ந்து பல நல்ல விஷயங்களை உள்ளே கொடுத்து வந்தால் மட்டும் நாம் Positive-வாக மாற முடியுமே தவிற வேறு வழியில்லை.

நேரத்தை வீணாக்காமல் நல்ல வழியில் பயன்படுத்துங்கள். பிறருடன் வீண் பேச்சு, அடுத்தவர்களை பற்றிய விமர்சனங்கள், முடிந்தவரை பேசுவதை தவிறுங்கள். வீட்டில் எல்லோரிடமும் நேரத்தை ஒதுக்கி அன்பு காட்டுங்கள். Positive thoughts உள்ளவர்களை நண்பர்களாக்கி கொள்ளுங்கள்.

இதை செய்து வந்தாலே வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் தோன்றி விடும்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

வாழ்த்துகளுக்கு நன்றி .. ..




இதுவரை வெளிவந்த என்னுடைய கருத்துக்களுக்கு ஊக்கம் கொடுத்த அன்பு வாசகர்களாகிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றி.

நீங்கள் அளித்த கருத்துகளை திருப்ப படித்து பார்ப்பது என்பது ஒரு இனிமை. ஏன் அதையே உங்களுடன் பகிர்ந்தால் என்ன என்று உங்களுடன் பகிர்கிறேன்.


puthiya ariya thagavalgal
thks for sharing

unmai nalla pathivu thanks

தேவையான பதிவு.

good work

எனது ஆத்மார்த்தமான "தீபாவளி நல்வாழ்த்துக்கள்"

accueaswari

it's a great service rendering to society.my appreciation and prey the almighty to shower all prosperous, wisdom, happiness and prosperity for ever.
accu classmate Parthashaarrathi


நல்ல பதிவு...தொடருங்கள் உங்கள் பணியை...கடவுள் ஆசீர்வாதம் உண்டு
NICE ARTICLE Dr

Today only i saw this blog. Very Good and useful informations you are giving thank you madam

Madam, all those commands looking Simplicity, Sweety and Rarity

இராஜராஜேஸ்வரி13 December 2012 21:53
ஒவ்வொருவருக்கும் ஒன்று பிடிக்கும். அது எது என்று கண்டு பிடியுங்கள். உங்களை நீங்களே திரும்பி பாருங்கள். மற்றவர்களை பார்ப்பதை தவிருங்கள். "மன அமைதி" கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும்.

அருமையான பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

கர்மவினையை அழிக்கும் புள்ளிகள் நம் அக்குபஞ்சரில் மட்டும் தான் உள்ளன.

சிறப்பான பயனுள்ள பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

நாம என்னதான் புள்ளி போட்டாலும் அவுங்கவுங்க கர்மவினையை அனுபவிச்சே ஆகனும் வேனும்னா temporary re leaf குடுக்கலாம் {கிரகங்கள் கன்னை மறைக்க முடியாதே?}இது என்னோட கருத்து மட்டும்

நல்ல விளக்கம் நன்றி

really interesting news...


இதயம் நிறைந்த
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

thank u mam


arumaiyaana pathivu vaazthukkal
"'
நம்மை நாமே உயர்வாக நினைக்க "'
intha positive thinking irukkuravangala pirarin poraamai parvai marrum kanneru ponravai baathikkaathu

but ithuve overa poitta superiority complex nu solluvaanga athu oruvagaiyaana mana viyaathiya aayidum



தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

அன்புடன்,
ஈஸ்வரி

Thursday 7 February 2013

உன்னுடைய வளர்ச்சி உன் எண்ணத்தில் .. .. ..



நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டும் போதாது, அதற்கு எது மிக முக்கியமாக தேவைப்படுகிறது என்றால் "Positive Thinking" இருக்க வேண்டும். எந்த வேலையில் இருந்தாலும் சரி அதை விரும்பி செய்ய வேண்டும். ஒவ்வொரு விஷயத்தையும் Positive -ஆக பார்க்க துவங்கிவிட்டால் கஷ்டமே இருக்காது. நாம் எண்ணும் எண்ணத்தில் கலந்து இருக்க வேண்டும். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிவிடும் அளவிற்கு சக்தி நம்முள் இருக்கிறது என்பது தான் உண்மை. நமக்குள் இருக்கும் Negative-ஐ தூக்கி எறிந்துவிட்டால், Positive Energy தானாகவே வந்துவிடும். ஒரு உதாரணத்திற்கு சில ஆசைகள் நிறைவேறவில்லை என்று வைத்துக்கொள்வோம், உடனே மனம் என்ன சொல்லும் "நான் நினைத்து எது நடந்து இருக்கிறது" என்று Negative-ஆக சொன்னால் அது தான் நடக்கும்.

ரஜினி சார் பார்த்தீர்கள் என்றால் பல actress -யுடன் நடித்தாலும் "ஐஸ்வர்யா ராய்" கூடத் தான் நடிக்க ஆசைப்பட்டார். உடனே நடந்து விட்டதா என்ன? அந்த ஆசை பல படங்களுக்கு பிறகு "எந்திரன்" படத்தில் தான் நிறைவேறியது. இன்னொரு உதாரணமாக பவர் ஸ்டாரை சொல்லலாம். அவரே அவர் பெயருக்கு முன் "பவர் ஸ்டார்" என்று பட்டம் போட்டு கொண்டார். அப்பொழுது அனைவரும் சிரித்தார்கள். இப்பொழுது உண்மையிலேயே "பவர் ஸ்டார்" ஆகி விட்டார். எண்ணங்கள் தான் வாழ்க்கை. அது போல நாமும் நம் எண்ணங்களை Positive -ஆக நினைத்து வாழ கற்றுக் கொண்டால் பல ஆசைகள் நிறைவேறும் என்பதில் ஐயம் இல்லை. சினிமா வைத்து சொன்னால் நம்மவர்களுக்கு நன்றாக புரியும் என்பதால் கூறியுள்ளேன். பிறர் வந்து நம்மை Positive-ஆக சொன்னால் சந்தோஷம் அடைகிறோம். ஆனால் நாமே நம்மைப்பற்றி உள்ளே Negative-ஆக நினைத்தால் எப்படி இருக்கும்? எனவே எல்லோரும் எண்ணங்களை மாற்றி நம்மை நாமே உயர்வாக நினைக்க கற்றுக் கொள்ள வேண்டும்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Tuesday 5 February 2013

உங்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு உங்களுக்குள்ளே !



இவ்வளவு நாளாக உடம்பைப் பற்றி பார்த்தோம். ஆனால் இனி மேல் மனதைப்பற்றி பார்க்கப்போகிறோம். உடம்பைப் பற்றிய சில நல்ல தகவல்களை தந்து தெளிவுபடுத்திய நான் மனதைப்பற்றி தெளிவு படுத்தப்போகிறேன். இன்றைய நாளில் மனகுழப்பத்தில் நிறைய பேர் சிக்கிக் கொண்டு Stress-க்கு தள்ளப்படுகிறார்கள். ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் "ஆசை" தான் அடிப்படைக் காரணம். அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம். எல்லோருக்கும் இருக்கும் ஆசை என்னவென்றால்  life-ல் நல்லபடியாக Settle-ஆக வேண்டும். பேர் புகழ் கிடைக்க வேண்டும். இந்த இரண்டும் மிக முக்கியமான காரணம் ஆகும். இந்த இரண்டு விஷயத்திற்காக நாம் பல கஷ்டங்களை பட்டுக் கொண்டு இருக்கிறோம். இதில் என்ன ஒரு பெரிய விஷயம் நமக்கு மட்டும் தான் கஷ்டம் இருப்பதாக பலர் நினைப்பது தான். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கஷ்டம் இருக்கும் என்பதை புரிந்து கொண்டாலே போதும், நாம் கஷ்டத்தை விட்டு வெளியே வந்து விடலாம். 

ஆசைப்பட தெரிந்த நமக்கு கஷ்டத்தை எதிர்கொள்ளும் சக்தியும் வேண்டும். நம்முடைய கஷ்டத்திற்க்கு யாரும் காரணம் அல்ல Including God. ஆசை எவ்வளவு குறைகிறதோ அவ்வளவு தூரம் கஷ்டங்கள் இருக்காது. இப்பொழுது இது உண்மையா இல்லையா? என்று ஒரு நிமிடம் எல்லோரும் உங்களை திரும்பி பாருங்கள். அது எந்த கஷ்டமாக இருந்தாலும் சரி. அதற்கு நீங்கள் தான் காரணம் என்பது புரியும். அப்படி இல்லை என்று ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது என்றால், ஈகோ இருக்கிறது என்று அர்த்தம். அதை முதலில் தகர்த்தெரியுங்கள், ஒப்புக்கொள்ளுங்கள். மனம் லேசாக மாறிவிடும்.

எந்த பிரச்சனைகளில் இருந்தும் நாம் வெளியே வரமுடியும், நாம் நினைத்தால் மட்டும் !


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Monday 4 February 2013

சத்துக்களாக மாற்றப்படும் பிரமாண்டம் .... ... ..



நாம் உண்ணும் பலவகையான உணவுகளை அரைத்து Gulcose ஆக மாற்றுவதற்கும், சத்துக்களை எடுப்பதற்கு நம் உடல் உறுப்புகள் எவ்வளவு சிரமப்படுகிறது. ஆனால் நாம் செய்ய வேண்டியது என்ன? நல்ல உணவுகளை பார்த்து உள்ளே கொடுப்பது மட்டும் தான். அதைக் கூட நாம் செய்ய கஷ்டப்படுகிறோம். இது வரை நாம் பார்த்ததில் இருந்து என்ன தெரிந்து கொண்டோம் என்றால் நல்ல சத்துக்கள் கொடுத்தால் நோய் வராமல் தடுக்கலாம் என்பதைப்பற்றி தான். எனவே கொடுக்கும் பொழுது நல்ல உணவுகளை மட்டும் கொடுங்கள். மீதத்தை அது பார்த்துக் கொள்ளும்.

எவ்வளவு அழகாக பிரித்து எடுக்கிறது என்று பாருங்கள். காலையில் காபியில் ஆரம்பித்து இரவு படுக்கும் வரை எவ்வளவு கொடுத்தாலும், அதில் நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்து கழிவுகளை வெளியேற்றிவிட்டு மீதத்தை மட்டும் சத்துப் பொருளாக மாற்றி நமக்குக் கொடுக்கிறது. இதை ஒரு நிமிடம் நினைத்தாலே பிரம்மிப்பாக இருக்கிறது. அதை சரியான முறையில் பயன்படுத்துங்கள்.

இனி வரும் படைப்புகளில், மனதை பற்றி கூற இருக்கிறேன். உடம்பை பற்றி வேறு எதாவது சந்தேகங்கள் இருந்தால் E-Mail அல்லது Phone -ல் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும்.

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி