அதாவது தவறு செய்வது இயற்கை. ஆனால் செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்வது தான் குற்றம் ஆகும். குழந்தைகளாக பிறந்த உடனே, இந்த மண்ணில் காலடி பட்டவுடன் கஷ்டங்களை சந்திக்க தயாராகி விடவேண்டியிருக்கிறது. கஷ்டங்களுக்கு ஒரு அழகான விளக்கம் தரப்போகிறேன். குழந்தைகளாக இருக்கும் போது, அதாவது படிக்கும் காலத்தில் படிப்பது கஷ்டமாக இருந்து இருக்கும். கல்லூரி பருவத்தில் "காதல் பிரச்சனை" மற்றும் அட்வைஸ் கேட்பதே பிடிக்காத காலம். அந்த பருவத்தில், அது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து இருக்கும்.
இது போல் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒரு பிரச்சனை வந்து கொண்டு தான் இருக்கிறது. நாம் அதை தாங்க முடியவில்லை என்று தான் கூறுகிறோம். ஆனால் இதில் என்ன ஒரு உண்மை என்றால், நாம் கடந்து வந்த கஷ்டத்தை இன்று நினைக்கும் போது அது சிரிப்பாக கூட இருக்கும். இது மிகப்பெரிய உண்மை ஆகும். எல்லோரும் உங்களை ஆராய்ந்து பாருங்கள். அதனால் எதற்கும் கவலை படாதீர்கள். என்ன செய்யலாம் எப்படி face பண்ணலாம் என்பதை பற்றி யோசியுங்கள். உங்கள் பிரச்சனைகளில் இருந்து வெளியே வாருங்கள் ! சுதந்திர பறவைகளாய் மாறுங்கள் ! சந்தோஷம் அடையுங்கள் !
நன்றி
,
அன்புடன்
,
ஈஸ்வரி
No comments:
Post a Comment