Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Wednesday 6 March 2013

எதையும் செய்யும் ஆர்வம் எப்படி வரும்?




நம் வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்று அடுத்தவரை ஊக்கப் படுத்துதல் ஆகும். ஆனால் அதை இன்று யாரும் செய்வதில்லை. யாரு எந்த ஒரு நல்ல விஷயம் செய்தாலும் அதை ஊக்கம் அளித்து பாருங்கள். அவர்கள் முகத்தில் பிரகாசம் தெரியும். சின்ன விஷயமாக இருந்தாலும் சரி, வாய்விட்டு வெளியே மனதில் இருந்து பாரட்டுங்கள். முக்கியமாக யார் நல்ல விஷயம் செய்கிறார்களே அவர்களிடம் நேராக பாரட்ட வேண்டும். சில பேர் நேரடியாக சொல்லாமல் மற்றவர்களிடம் சொல்வார்கள். மற்றவர்களிடம் சொல்வதால், அவருக்கு எப்படி விஷயம் போய் சேரும். அப்படி நாம் மற்றவர்களிடம் ஊக்கம் கொடுக்கும் போது, நாமும் மகிழ்ச்சி அடைவோம் என்பது தான் உண்மை. மற்றவர்களை மகிழ வைக்க நினைக்கும் போது நாமும் மகிழ்ச்சி அடைவோம். சில பேர் மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள். வெளியே வாய்விட்டு பேசும் போது தான் பல விஷயங்கள் புரியும்.

ஒரு உதாரணத்திற்கு மனைவி செய்யும் சமையல் நன்றாக இருக்கும். ஆனால் ருசித்து மட்டும் விட்டு விட்டு போய்விடுவோம். அதற்கு பதிலாக அவரிடம் நேரிடையாக நீ செய்த சமையல் சூப்பர் என்று சொல்லுங்கள். அவர் முகத்தில் திருப்தி ஏற்படும். மறுநாள் இன்னும் நன்றாக சமைக்க வேண்டும் என்று தோன்றும். குறைகளை மட்டும் கண்டுபிடித்து வாழ்ந்து வருவதால் தான் கஷ்டங்கள் அதிகமாக தெரிகிறது. நிறைகளையும் கண்டு பிடிக்க கற்றுக் கொண்டால் போதும் எல்லோரையும் நம்வசம் இழுத்து விடலாம். வேலை செய்யும் இடங்களிலும் சரி, வீடுகளிலும் சரி, உறவுகளிடமும் சரி இன்று முதல் ஊக்கம் கொடுத்து பாருங்கள், எல்லாக் கஷ்டங்களும் மறைந்து போகும் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.

நன்றி,


அன்புடன்,
ஈஸ்வரி

No comments:

Post a Comment