உடம்பு தன்னை தானே சரி செய்து கொள்ளும் ஆற்றல் உடையது என்பது நாம் அறிந்து கொள்ளவேண்டிய ரகசியம் ஆகும்.
நம் உடம்பில் உள்ள உறுப்புகளைப் படைத்த இறைவன் மிகவும் பிரமாண்டமானவர். நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவ்வளவு அதிசயம் மற்றும் கொடை வள்ளல் என்றே கூற வேண்டும். அது என்ன என்பதைப் பற்றி பார்ப்போம். ஐந்து புலன்கள் என்ன என்று பார்ப்போம்.
1.கண்
2.மூக்கு
3.காது
4.வாய்
5.உணர்வு
என்ன அற்புதம் இந்த ஐந்தும் நமக்கு கிடைத்தது நினைத்து மகிழ வேண்டும்.
கண்களால் எத்தனை விதமான சுகங்களை அனுபவிக்கிறோம் மற்றும் மீதமுள்ள நான்கும் அப்படித்தான். பகலில் கண்களால் பார்ப்பது மட்டும் அல்லாமல் இரவும் நம்மால் பார்க்க முடிகிறது. அதற்கும் ஒருவகையான் "Melotonin" என்ற ஹார்மோன் சுரப்பால் தான் பார்க்க முடிகிறது. அது மட்டும் அல்லாமல் "அகத்தின் அழகு முகத்தில் தெரிந்துவிடும்" என்பார்கள். அத்தனை சக்தி கண்களுக்கு உண்டு. கவலை படும் போது கண்களில் நீர் வருகிறது. அதில் கெட்ட நீர் வெளியேறுகிறது. அதிலும் ஒரு வகை அற்புதம் உண்டு. நாம் அழுவதால் கூட ஒரு நல்ல விஷயம் நடக்கிறது.
"காது" எடுத்துக் கொண்டால் உடலின் பல நோய்களுக்கு அதற்கான நிவாரண புள்ளிகளான உடல் பிரதிபலிப்பு புள்ளிகள் காதில் உள்ளன. காதில் எல்லா நரம்பு மண்டல தொடர்பு உள்ளது. மூளையில் உள்ள கபால நரம்பு, உதர நரம்பு ஆகியவை உள்ளன. அதனால் காது கேட்பதற்க்கு மட்டும் இல்லாமல் பல நன்மைகள் உள்ளன. அதனால் தான் விநாயகப் பெருமானுக்கு "தோப்புக்கரணம்" போடும் போது உடம்பு பல வேலைகள் செய்யும். மிகவும் நல்ல பலனைத் தரும்.
"நாக்கு" எடுத்துக் கொண்டால், மிகவும் அற்புதமானது. எல்லா சுவைகளையும் அறிய முடிகிறது. சுவை என்று ஒன்று இல்லை என்றால் நாம் சாப்பிட முடியாது. எல்லா சுவையும் அறியும் சக்தி நாக்குக்கு உண்டு. அதை நமக்கு கொடுத்துள்ளார். வயதானவுடன் எல்லா உறுப்புகளும் வலு இலக்க ஆரம்பிக்கும் போது நாக்கு சுவை குறைந்து விடுவதால் தான் சாப்பிட முடியாது. உணவு குறைந்துவிடும். எதை சாப்பிட்டாலும் ஒன்றும் Taste தெரியவில்லை என்பார்கள். எனவே நாக்கின் அற்புதம் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
"மூக்கு" என்று எடுத்துக் கொண்டால் சுவாசம் செய்வதற்க்கு மற்றும் நுகர்தல் என்பதற்கு பயன்படுகிறது. இரண்டுமே மிக முக்கியமான ஒன்று. மணத்தை(smell) அறிந்து கொள்வதற்க்கு எவ்வளவு எளிதாக உள்ளது. காற்றை சுவாசம் செய்வதால் தான் நாம் உயிரோடு இருக்கிறோம். எவ்வளவு பெரிய பிரமாண்டம்.
"உணர்வு" என்பது மிகவும் அற்புதமான ஒன்று. எல்லா விஷயங்களுக்கும் உணர்வு மிகவும் தேவை. கவலை, இன்பம் போன்ற நிகழ்வுகள் எல்லாமே உணர்வுகள் தான் காரணம். "எந்திரன்" படத்தில் போல உணர்வு இல்லை என்றால் எப்படி இருக்கும் என்பதை "சூப்பர் ஸ்டார் ரஜினி" சார் நமக்கு அழகாக நடித்து காட்டி இருப்பார். எனவே சொல்லத் தேவையில்லை. எல்லா விதமான feelings உணர்வு மூலம் வெளிப்படுமாறு கடவுள் நமக்கு அளித்துள்ளார்.
இதையெல்லாம் ஒரு நாள் நாம் அமைதியாக உட்கார்ந்து நினைத்துப் பார்த்தால் நமது கவலை பாதி குறைந்து விடும். மூளை என்பது மிக முக்கியமான வேலைகளை செய்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் எத்தனை கவசம் அளித்துள்ளார். குறைந்தது மூன்று கவசம் அளித்த பிறகு தான் உறுப்பு உள்ளே இருக்குமாறு அமைத்துள்ளார். உதாரணத்திற்க்கு இருதயம் எடுத்துக் கொண்டால் Myocardium, Pericardium மற்றும் Endocardium என்று மூன்று உறைக்கு பிறகே இருதயம் இயங்குமாறு அளித்துள்ளார்.
ஒரு மனிதன் காலையில் இருந்து இரவு வரை உழைத்துக் கொண்டு மட்டும் இருந்தால் அவனுக்கு ஓய்வு தேவை என்று "தூக்கம்" என்ற மிகப்பெரிய விஷயத்தை நமக்கு அளித்துள்ளார். கற்பனை செய்து பாருங்கள், தூக்கம் என்று ஒன்று இல்லாமல் வேலை செய்து கொண்டு இருந்தால் எப்படி இருக்கும்? நினைக்கவே மிகவும் பயமாக இருக்கிறது. எவ்வளவு பெரிய அற்புதம். நிறைய விஷயங்கள் ஒன்று கெட்டுவிட்டால் இன்னொன்று வைத்து கொள்ளட்டும் என்று நிறைய கொடுத்துள்ளார். கண்கள் இரண்டு, காது இரண்டு, கைகள் மற்றும் கால்கள், சிறுநீரகம் இரண்டு, மூக்கின் துவாரம் இரண்டு, Fallopian Tube இரண்டு. இப்படி எத்தனை அதிசய படைப்புகள் நமக்கு கொடுத்துள்ளார்.
எல்லாவற்றிக்கும் மேல் ஆண், பெண் கலப்பினால் ஒரு படைப்பே உருவாக்குமாறு படைத்து உள்ளார். குழந்தை செல்வம் கிடைக்குமாறு செய்து இருக்கிறார். நினைத்து பார்க்கவே மிகவும் அதிசயம். இருக்கும் போது மனிதனை மதிக்கிறார்கள், இறந்த பிறகும் ம்னிதனுக்கு மட்டும் தான் சில சடங்கு சம்பிரதாயங்கள் செய்கிறார்கள். அதுவும் மிகப்பெரிய கொடை என்று தான் கூற வேண்டும். மிருங்கள் மற்றும் வேறு பிராணிகள் எதுவும் இறந்துவிட்டால் யாரும் அழுவதுவும் இல்லை அதற்கு எந்த சடங்கும் செய்வதில்லை. மனிதனுக்கு மட்டும் தான் இந்த சிறப்பு.
அது போல் எந்த ஒரு நோய் வருவதற்க்கு முன்பும், நமக்கு எதோ வகையில் symptons தெரியும்படி கடவுள் படைத்துள்ளார். எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் திடீர் என்று நோய் வந்து விட்டால் எவ்வளவு ஒரு சிரமம். கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
"கடவுள் நமக்கு கொடுத்ததை வைத்து, நாம் எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுத்து விடுகிறோம்" என்று முன்பே தெரிந்த அவர் நோய்க்கான மருந்தையும் சேர்த்து படைத்துள்ளார். எத்தனை விதமான மூலிகைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் நமக்கு படைக்கப்பட்டு இருக்கிறது. அதை கொண்டு சரி செய்து வாழட்டும் என்று அருள் செய்கிறார். அதனால் நாம் நோய் பார்த்து பயப்படத்தேவையில்லை. எல்லா அற்புதங்களும் நமக்கு அளித்துள்ளார். மிகவும் பிரம்மாண்டமானவர். மிகவும் அறிவுமயமானவர் அவர் ஒருவரே.
எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம் "எனவே இறைவனுக்கு முடிந்தால் தினமும் ஒருமுறை நன்றி சொல்லுங்கள்" யாரும் அவரை திட்டாதீர்கள்.
இத்தனை பிரமாண்டமான படைப்புகள் படைத்துவிட்டு அமைதியாக இருக்கிறார். ஆனால் நாம் எல்லாம் "என்னால் தான் நடக்கிறது" என்று வாழ்கிறோம்.
எனவே அனைவரும் எளிமையாக வாழ்வோம், நிம்மதியாக இருப்போம் என்பது மட்டுமே என்னுடைய விருப்பம்.
நன்றி,
அன்புடன்,
ஈஸ்வரி
unmai nalla pathivu thanks
ReplyDeleteஇது போன்ற நல்ல விஷயங்களை மேலும் எழுத எனக்கு புதிய தெம்பு கொடுத்த வாசகராகிய உங்களுக்கு எனது நன்றி..
ReplyDelete