Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Wednesday 10 April 2013

உழைப்பே உயர்வு !


நாம் வாழ்க்கையில் முன்னேற மற்றொரு வழி என்னவென்றால் உழைப்பு தான். உழைப்பே உயர்வு. நமது கடமையை சரியாக செய்ய வேண்டும். கடனுக்கு செய்யக் கூடாது. நம் தொழில் எதுவானாலும் அதை நேசித்து செய்ய வேண்டும். இன்றைய காலகட்டத்தில் "பணத்தை" வைத்து மனிதனை எடை போடுகிறார்கள். ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு மதிப்பு வைத்துள்ளார்கள். எந்த தொழிலும் குறைந்தது அல்ல. செருப்பு தைப்பதும் ஒரு புனிதமான தொழிலே. அதுவும் ஒரு தொழில் தான். சில பேர் Business நல்லது என்று நினைப்பார்கள். சில பேர் Government Job தான் சிறந்தது என்று நினைப்பார்கள். ஆனால் எல்லா வேலைகளிலும் கஷ்டம் இருக்கும் என்பதை புரிந்து கொண்டால் போதும். நாம் செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து உழைத்தால் வெற்றி நிச்சயம். 

"இக்கரைக்கு அக்கரை பச்சை" என்பார்கள். ஆம், இந்த கரையிலிருந்து பார்பவருக்கு அந்த கரை அழகாக சூப்பராக தெரியும். இந்த தொழிலுக்கு அந்த தொழில் நல்ல தொழிலாக தெரியும். அந்த தொழிலில் இருப்பவருக்கு இந்த தொழில் சூப்பரான தொழிலாக தோன்றும். ஆனால் எல்லா தொழிலிலும் கஷ்டங்கள் உண்டு.

யாரும் ஒருவர் செய்யும் தொழிலை வைத்து மதிப்பிட வேண்டாம். அனைவரையும் சமமாக எண்ணுங்கள்.  அதனால் எந்த தொழில் என்று மதிப்பு கொடுக்காமல் உழைக்கும் ஒவ்வொருவருக்கும் மதிப்பு அளியுங்கள். உழைக்காமல் உயர  வேண்டும் என்று நினைத்தால் நிச்சயமாக முன்னேற முடியாது. பொய் பேசுவது, ஏமாற்றுவது மற்றும் திருடுவது, இது போன்ற பழக்கவழக்கங்கள் தான் தவறாகும். ஆனால் எந்த தொழிலும் குறைந்தவை அல்ல. எல்லோர் உழைப்பும் உயர்ந்தவை ஆகும்.


நன்றி,


என்றென்றும் அன்புடன்,
ஈஸ்வரி

No comments:

Post a Comment