Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Wednesday 24 April 2013

வெறுக்கத் தேவையில்லை ! ஒதுங்கி இருங்கள் !!



இன்றைய தினத்தில் நிறைய பேர் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் கொண்டிருக்கும் ஒரு விஷயம் பற்றி கூற இருக்கிறேன்.

சில பேருக்கு நாம் எவ்வளவு தான் அன்பு செலுத்தினாலும் திருப்தி அடையாமல் மேலும் மேலும் குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பல பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் சொல்வது என்னவென்றால், அந்த உறவைவிட்டு சற்று விலகி இருப்பதே நல்லது ஆகும். அவர்களை பார்த்து பயப்படத்தேவையில்லை மற்றும் வெறுக்கவும் தேவையில்லை. சற்று விலகியிருங்கள். அது உங்களுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் அவர்களுக்கு அன்பு தேவைப்படாமல் இருக்கும். வேறு ஏதாவது எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும். அவர்களை சந்தோஷப்படுத்த முடியாது. அது அவர்களுடைய பிராப்தம் ஆகும். எனவே எதிலும் சிக்கிக் கொள்ளாமல் மன அமைதியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அதனால் யாரையும் வெறுக்கத் தேவையில்லை,  நம் மன அமைதியை கெடுக்க நினைப்பவர்களிடம் மட்டும் ஒதுங்கி இருங்கள்.

ஒரு உதாரணத்திற்கு "சூரியனை பார்த்து நாய் குரைத்தல் போல". அதாவது நல்லவர்களை பற்றி ஒருவர் எவ்வளவு தான் குறை கூறிக்கொண்டே இருந்தாலும், சூரியனை போல் நல்லவர்கள் பிரகாசித்துக் கொண்டு தான் இருப்பார்கள். வேறு ஒன்றும் செய்ய முடியாது.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

No comments:

Post a Comment