உழைப்பு தான் உயர்வு என்று கூறியிருந்தேன். ஆனால் சில பேர் எப்பொழுதுமே உழைத்துக் கொண்டே இருப்பார்கள். அதுவும் தவறாகும். அதற்கு என்று தேவையான நேரத்தை ஒதுக்கிக் கொண்டு உழைக்க வேண்டும். மீதமுள்ள நேரத்தில் சிறிது ஓய்வு எடுக்கவும் மற்றும் வீட்டில் எல்லோருக்காகவும் ஒதுக்க வேண்டும். ஏனென்றால் பணம் சம்பாதிப்பதே வீட்டின் எல்லோருடைய சந்தோஷத்திற்காக தான்.
பணம் மட்டும் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. உழைத்து சம்பாதித்த பணத்தை கொண்டு வீட்டில் எல்லோரிடமும் சேர்ந்து அனுபவித்து மகிழ நேரத்தை ஒதுக்க வேண்டும். அப்பொழுது தான் வீட்டில் சந்தோஷம் இருக்கும். அது மட்டும் அல்லாமல் உடம்புக்கு கட்டாயமாக ஓய்வு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் பின்னால் சம்பாதித்த பணத்தை கொண்டு மருத்துவமனையில் கொடுக்க வேண்டியிருக்கும். அதனால் உடம்பு மற்றும் மனதை சரியாக இயக்க வேண்டும். பணத்தை சரியான முறையில் உபயோகித்து பயன்படுத்த வேண்டும்.
அப்படி சரியாக இயக்க கற்றுக் கொண்டால் வாழ்க்கையில் துன்பத்துக்கே இடம் இல்லை. அது மட்டும் அல்லாமல் வீட்டில் அஷ்ட லஷ்மி குடியிருப்பாள் என்பதில் ஐயமில்லை.
நன்றி,
அன்புடன்,
ஈஸ்வரி
No comments:
Post a Comment