தொடர்ந்து பேராதரவு கொடுத்துக்கொண்டிருக்கும்
இந்தியா மற்றும் அயல் நாடுகளில் வசித்துக் கொண்டிருக்கும் தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் என் கோடானு கோடி
நன்றிகள்.
பல பேர் என்னிடம் கேட்கும் சில சந்தேகங்களில்
இதுவும் ஒன்று. ஞாபக சக்தி மிகவும் குறைந்து காணப்படுகிறது, அதற்கு என்ன செய்வது என்று
கேட்கிறார்கள். ஞாபக சக்தி என்பது ஒரு மிகப் பெரிய விஷயம் கிடையாது. கடவுள் படைப்பில்
மூளை மிக அற்புதமாக வேலை செய்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதை நாம் தவறாக உபயோகப்படுத்துவதால்
மந்தத் தன்மை ஏற்படுகிறது.
முதலில் உடல் ரீதியாக பார்ப்போம்:
---------------------------------
1.நிறைய போதை தரும் பொருட்களை
(Drinks, பான்) சாப்பிடுவது
2.சிகரெட் குடிப்பது மற்றும் பாக்கு போடுவது.
3.இரத்த ஓட்டம் மூளைக்கு சரியாக செல்லவில்லை
என்றால் ஞாபக மறதி ஏற்பட வாய்ப்பு உள்ளது (This is rare case)
4.சத்து குறைவாக இருப்பது.
மன ரீதியாக பார்ப்போம்:
-----------------------
1.ஒரு விஷயத்தில் Involvement இல்லாமல்
இருப்பது. (எந்த விஷயம் செய்கிறோமோ அதில் ஆர்வம் இல்லாமல் இருப்பது)
2.Presence of Mind இல்லாமல் இருப்பது.
(சுயநினைவோடு இல்லாமல் கற்பனையிலேயே இருப்பது மற்றும் எந்த ஒரு விஷயத்திலும் ஆர்வம்
இல்லாமல் இருப்பது)
இந்த இரண்டும் இல்லாமல் இருந்தால் மட்டுமே
ஞாபக சக்தி இருப்பதில்லை. மற்ற படி மூளை அருமையாக வேலை செய்து கொண்டு தான் இருக்கிறது.
ஞாபக சக்தி இல்லாமல் இல்லை அது உங்களிடம் தான் இருக்கிறது.
உடல் ரீதியாக குறை இருக்கிறதா? அல்லது
மன ரீதியாக குறை இருக்கிறதா? என்று யோசித்து சரி செய்யுங்கள்.
ஞாபக சக்தி பெருக்கெடுத்து ஓடும்.
நன்றி,
என்றென்றும் அன்புடன்,
ஈஸ்வரி
No comments:
Post a Comment