இவ்வளவு நாளாக உடம்பைப் பற்றி பார்த்தோம். ஆனால் இனி மேல் மனதைப்பற்றி பார்க்கப்போகிறோம். உடம்பைப் பற்றிய சில நல்ல தகவல்களை தந்து தெளிவுபடுத்திய நான் மனதைப்பற்றி தெளிவு படுத்தப்போகிறேன். இன்றைய நாளில் மனகுழப்பத்தில் நிறைய பேர் சிக்கிக் கொண்டு Stress-க்கு தள்ளப்படுகிறார்கள். ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் "ஆசை" தான் அடிப்படைக் காரணம். அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம். எல்லோருக்கும் இருக்கும் ஆசை என்னவென்றால் life-ல் நல்லபடியாக Settle-ஆக வேண்டும். பேர் புகழ் கிடைக்க வேண்டும். இந்த இரண்டும் மிக முக்கியமான காரணம் ஆகும். இந்த இரண்டு விஷயத்திற்காக நாம் பல கஷ்டங்களை பட்டுக் கொண்டு இருக்கிறோம். இதில் என்ன ஒரு பெரிய விஷயம் நமக்கு மட்டும் தான் கஷ்டம் இருப்பதாக பலர் நினைப்பது தான். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கஷ்டம் இருக்கும் என்பதை புரிந்து கொண்டாலே போதும், நாம் கஷ்டத்தை விட்டு வெளியே வந்து விடலாம்.
ஆசைப்பட தெரிந்த நமக்கு கஷ்டத்தை எதிர்கொள்ளும் சக்தியும் வேண்டும். நம்முடைய கஷ்டத்திற்க்கு யாரும் காரணம் அல்ல Including God. ஆசை எவ்வளவு குறைகிறதோ அவ்வளவு தூரம் கஷ்டங்கள் இருக்காது. இப்பொழுது இது உண்மையா இல்லையா? என்று ஒரு நிமிடம் எல்லோரும் உங்களை திரும்பி பாருங்கள். அது எந்த கஷ்டமாக இருந்தாலும் சரி. அதற்கு நீங்கள் தான் காரணம் என்பது புரியும். அப்படி இல்லை என்று ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது என்றால், ஈகோ இருக்கிறது என்று அர்த்தம். அதை முதலில் தகர்த்தெரியுங்கள், ஒப்புக்கொள்ளுங்கள். மனம் லேசாக மாறிவிடும்.
எந்த பிரச்சனைகளில் இருந்தும் நாம் வெளியே வரமுடியும், நாம் நினைத்தால் மட்டும் !
நன்றி,
அன்புடன்,
ஈஸ்வரி
No comments:
Post a Comment