நாம் உண்ணும் பலவகையான உணவுகளை அரைத்து Gulcose ஆக மாற்றுவதற்கும், சத்துக்களை எடுப்பதற்கு நம் உடல் உறுப்புகள் எவ்வளவு சிரமப்படுகிறது. ஆனால் நாம் செய்ய வேண்டியது என்ன? நல்ல உணவுகளை பார்த்து உள்ளே கொடுப்பது மட்டும் தான். அதைக் கூட நாம் செய்ய கஷ்டப்படுகிறோம். இது வரை நாம் பார்த்ததில் இருந்து என்ன தெரிந்து கொண்டோம் என்றால் நல்ல சத்துக்கள் கொடுத்தால் நோய் வராமல் தடுக்கலாம் என்பதைப்பற்றி தான். எனவே கொடுக்கும் பொழுது நல்ல உணவுகளை மட்டும் கொடுங்கள். மீதத்தை அது பார்த்துக் கொள்ளும்.
எவ்வளவு அழகாக பிரித்து எடுக்கிறது என்று பாருங்கள். காலையில் காபியில் ஆரம்பித்து இரவு படுக்கும் வரை எவ்வளவு கொடுத்தாலும், அதில் நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்து கழிவுகளை வெளியேற்றிவிட்டு மீதத்தை மட்டும் சத்துப் பொருளாக மாற்றி நமக்குக் கொடுக்கிறது. இதை ஒரு நிமிடம் நினைத்தாலே பிரம்மிப்பாக இருக்கிறது. அதை சரியான முறையில் பயன்படுத்துங்கள்.
இனி வரும் படைப்புகளில், மனதை பற்றி கூற இருக்கிறேன். உடம்பை பற்றி வேறு எதாவது சந்தேகங்கள் இருந்தால் E-Mail அல்லது Phone -ல் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும்.
நன்றி,
அன்புடன்,
ஈஸ்வரி
No comments:
Post a Comment