நாம் எல்லோரும் முன்னேறுவதற்கு Positive thoughts இருக்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல, அதை ஒவ்வொருவருக்குள்ளும் எப்படி கொண்டு வருவது என்பது பற்றி பார்ப்போம். காலையில் எழுந்தவுடனே நல்ல Positive energy கொடுக்கககூடிய விஷயங்களை கேட்கலாம். உதாரணத்திற்கு Hello FM 106.4 Chennai -ல் திரு.ஜெயராம் அவர்கள் தினமும் காலையில் 5.30 am to 7.00 am வரை ஆன்மீக கதைகள் மற்றும் சிந்திக்க தூண்டும் கதைகள் சொல்வார். அதை கேட்கலாம், அப்படி கேட்கும் பொழுது அன்று முழுவதும் நமக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்.
நம் வீட்டில் இருக்கும் எல்லோரிடத்திலும் கலகலப்பாக மனம் விட்டு பேச வேண்டும். ஒருவரிடத்தில் இருக்கும் நல்ல பண்புகளைப் பற்றி அவரிடம் வெளிப்படையாக மனம் திறந்து பாராட்ட வேண்டும். நீங்கள் எப்படியோ அப்படியே திரும்பிவரும்.(Every action has an equal and opposite reaction) ஒரு உதாரணத்திற்கு ஒருவரை வழியில் சந்திக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால் அதற்கு அவர் "ஏதோ இருக்கிறேன்", Life ஏதோ போகிறது என்று கூறினால் நாமும் அதையே கூறுவோம். அப்படி அல்லாமல் life-super -ஆக போகிறது என்று சொல்லுங்கள். அவரை ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும். நாம் பேசும் பேச்சில் கூட உற்சாகம் காணப்பட வேண்டும். நல்ல விஷயங்கள் உள்ள புத்தகங்களை படியுங்கள். டி.வி-யில் பல நல்ல விஷயங்கள் இருக்கும் நிகழ்ச்சிகளைப் பாருங்கள். இவ்வாறு தொடர்ந்து பல நல்ல விஷயங்களை உள்ளே கொடுத்து வந்தால் மட்டும் நாம் Positive-வாக மாற முடியுமே தவிற வேறு வழியில்லை.
நேரத்தை வீணாக்காமல் நல்ல வழியில் பயன்படுத்துங்கள். பிறருடன் வீண் பேச்சு, அடுத்தவர்களை பற்றிய விமர்சனங்கள், முடிந்தவரை பேசுவதை தவிறுங்கள். வீட்டில் எல்லோரிடமும் நேரத்தை ஒதுக்கி அன்பு காட்டுங்கள். Positive thoughts உள்ளவர்களை நண்பர்களாக்கி கொள்ளுங்கள்.
இதை செய்து வந்தாலே வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் தோன்றி விடும்.
நன்றி,
அன்புடன்,
ஈஸ்வரி
No comments:
Post a Comment