Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Thursday 14 February 2013

அனைவரும் காதல் செய்து கொண்டு தான் இருக்கிறோம் !






காதல் என்பது மிகவும் புனிதமானது மற்றும் தெய்வீகமானது ஆகும். மனதராய் பிறந்த ஒவ்வொருவருகுள்ளும் காதல் மலரும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இதை யாரும் இல்லை என்று மறுக்க முடியாது. காதல் என்பது மூன்று வருடம் காதலித்தால் தான் காதலா என்ன?. ஒரு நொடி போதும் உள்ளே வருவதற்கு என்பதால் தான் வீட்டில் பார்த்து செய்து வைத்தாலும் கூட பெண் பார்க்க வந்த அந்த நிமிடத்தில் இருவருக்கும் பிடித்து விடுகிறது. காதல் திருமணம் அல்லது வீட்டில் பார்த்து வைத்த திருமணம் ஏதுவாக இருந்தாலும் சரி காதல் ஏற்படுவது ஒன்று தான். அதனால் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் காதல் எல்லோருக்கும் உள்ளே மலரும் விஷயம் ஆகும்.

அதனால் என்ன சொல்ல வருகிறேன் என்றால் காதல் செய்யும் நேரத்தில் அன்பு மனம் திறந்து இருக்கும். அது சில காலகட்டங்களில் மட்டும்  இருக்கும் பின்பு ego வந்தவுடன் எல்லோரும் சண்டை போட்டுக்கொள்வார்கள், அது காதல் திருமணம் செய்தவராக இருந்தாலும் சரி, வீட்டில் முடிவு செய்த திருமணம் ஆகி இருந்தாலும் சரி.

உண்மையான காதலர்கள் என்றும் பிரிய மாட்டார்கள். யாராலும் பிரிக்கவும் முடியாது. ஏன்னென்றால் அதற்கு அவ்வளவு சக்தி உண்டு. காதல் என்றால் தவறு என்று நினைத்து யாரையும் பிரிக்க வேண்டாம். ஏனென்றால் நீங்களும் ஒருவரை ஒருவர் நேசித்து தான் திருமணம் செய்துள்ளீர்கள் என்பதை மறந்து விடவேண்டாம். காதல் செய்பவர்கள் முழுமையாக மனதை மட்டும் நேசித்தால் நல்லது மற்றும் உண்மையானதும் கூட. ஆனால் அதில், ஜாதி, மதம், பணம், காமம், சுயநலம், இதெல்லாம் இருந்தால் யாரும் பிரிக்க தேவையில்லை அதுவே பிரிந்து போய் விடும் என்பது உண்மையாகும்.

அதனால் ego -வை மட்டும் எடுத்து விட்டு அனைவரும் ஒருவரை ஒருவர் நேசித்து இன்பமாக வாழ என் நல்வாழ்த்துக்கள்.

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

No comments:

Post a Comment