நமது எண்ணங்கள் Positive-ஆக இருக்க என்ன செய்யலாம் என்று பார்த்தோம். நமது ஆசைகள் நிறைவேறவில்லையே என்று புலம்பி வெம்பி கொண்டு இருக்கிறோம். ஆனால் அது முற்றிலும் தவறாகும். எல்லோருடைய ஆசையும் நிறைவேறிக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதை நாம் உணரவில்லை. ஏன் என்றால் ஒரு ஆசை நடந்தவுடன் அதை அனுபவிக்கும் முன் இன்னொரு ஆசை வந்துவிடுவது தான். இதை கவனித்தீர்கள் என்றால் போதும் பாதி கவலை சரியாகிவிடும். ஒரு உதாரணத்திற்கு, ஒரு தாய்க்கு குழந்தை இல்லை என்பது பெரிய கவலை. பல நாட்கள் காத்திருந்தபின் ஆசை நிறைவேறும். ஆனால் குழந்தை பிறந்தவுடன், அதை அனுபவிக்கும் முன் குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டும், படிக்க வைக்க வேண்டும், இப்படி அடுத்து அடுத்து தொடர்ந்து வரும் ஆசைகள் தான் நம் கவலைக்கு காரணம். என்ன சொல்ல வருகிறேன் என்றால் குழந்தை கிடைத்ததை முழுமையாக் அனுபவியுங்கள் அப்படி அனுபவிக்காதலால் திருப்தி ஏற்படுவதில்லை. நமக்கு என்ன கிடைத்துக் கொண்டு இருக்கிறதோ அதை முழுமையாக அனுபவிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
எதுவும் நமக்கு கிடைக்காமல் இல்லை. இதை படிக்கும் போது சற்று உங்களை திரும்பி பாருங்கள். என்னவெல்லாம் உங்களுக்கு கிடைத்ததோ அதை முழுமையாக அனுபவிக்கவில்லை என்று யோசியுங்கள் !. என்ன கிடைத்தது என்பது புரியவரும். ஆசைக்கு அளவே இல்லாமல் போகும் போது கவலைகள் அதிகம் ஆகிக்கொண்டே போகும் என்பது தான் உண்மை. இன்றில் இருந்து வாழ்க்கையை முழுமையாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். எதை செய்தாலும் அதை ரசித்து ருசித்து செய்யுங்கள் மற்றும் அனுபவியுங்கள் உங்கள் வாழ்வு திருப்தி அடைய எனது நல்வாழ்த்துக்கள்.
நன்றி,
அன்புடன்,
ஈஸ்வரி
unmai!
ReplyDeletearumai..!
நன்றி நண்பரே ! தொடர்ந்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
ReplyDelete