Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Monday 18 March 2013

கஷ்டங்கள் குறைய வேண்டுமா?




நிறைய நண்பர்கள் என்னிடம் கேட்பது கஷ்டம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

நமது பிரச்சனைகளுக்கு மிக முக்கியமான காரணம் நல்லவர்களை நம்முடன் வைத்துக் கொள்ளாதது தான். நல்லவர்களை எப்படி அறிந்து கொள்வது?.அது எந்த உறவாக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, நல்லவர்களை நம்முடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

1.பொதுவாக நமக்கு ஒரு கஷ்டம் வரும் பொழுது யாரிடமாவது சொல்லி மன ஆறுதல் அடைய முயற்சி செய்வோம். அப்படி நம் கஷ்டத்தை ஒருவரிடம் சொல்லும் போது அவர் நமக்கு நல்லதையே சொல்லி நம் மன பாரத்தை குறைத்து விடுகிறார் என்றால் அவர் மிகவும் நல்லவர் என்று தெரிந்து கொள்ளலாம்.

2.வெறுமனே கஷ்டத்தை கேட்டுவிட்டு சென்றாலோ அல்லது இன்னும் கொஞ்சம் கஷ்டப்படுத்தினாலோ, அவரிடம் நட்பு வைத்துக் கொள்வதை தவிர்த்து விடுவது நல்லது. 

3.அது போல் நீங்கள் உங்கள் சந்தோஷத்தை கூறும் போது அவரும் சந்தோஷம் அடைய வேண்டும். மாறாக சந்தோஷம் அடையவில்லை என்றால் அவர்களுடைய எண்ணம் சரியில்லை என்று தெரிந்து கொள்ளலாம்.

எனவே முதலில் நல்லவர்கள் யார் என்பதை அறிந்து கொண்டு பின்பு பழகினால் உங்கள் கஷ்டங்கள் குறைய வாய்ப்புகள் அதிகம் உண்டு.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

2 comments: