நோய் உருவாகும் விதம்:
நமக்கு நோய் பொதுவாக மூன்று வகைகளில் பிரச்சனை தரும். அது எது என்றால் தசைகள், எலும்புகள் மற்றும் நரம்புகள். இதை தவிர்த்து வேறு ஏதாவது வரப்போகிறதா என்ன? முதலில் சத்து குறைபாடு ஆகிறது என்றால் தசைகளில் தான் பிரச்சனையை காட்டும். உடல் சோர்வு, தசைகளில் வலி என்றாலே தெரிந்து கொள்ளலாம் நோய் ஆரம்பம் ஆகப்போகிறது என்று!. உடனே சத்துள்ள பொருட்களை சாப்பிட்டாலே சரி செய்துவிடலாம். இல்லை என்றால் அடுத்து அதிகமாக குறைபாடு ஆகும் போது எலும்புகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். பின்பு மன உளைச்சல் ஏற்பட்டு
தூக்கமில்லாமல் கனவுத்தொல்லை முதலியன ஏற்படும். இதனால் அதிகமாக யோசிக்கும் போது நரம்புகள் பாதிப்பு ஏற்படும். எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை ஆகும். கவிஞர் வைரமுத்து அவர்கள் காதலை அழகாக கூறுவார் "விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே" என்பார். அது போல் நான் கூறுவது என்னவென்றால், "தசையில் ஆரம்பித்து, எலும்பின் வழியாக கடைசியில் நரம்பின் வழியே முடிவது தான் நோய்". விளக்கம் மனதில் தங்கட்டும் என்பதற்காக கொஞ்சம் வைரமுத்துவை இழுத்துள்ளேன்.
எனவே உடம்புக்கு அக்கறை காட்டுங்கள். நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
நன்றி,
அன்புடன்,
ஈஸ்வரி
No comments:
Post a Comment