மலச்சிக்கல் என்பது பெருங்குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஆகும். பெருங்குடலில் நீர் சத்து குறைவதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. அது மட்டும் அல்லாமல் Mucin என்ற வலுவலுப்பு தன்மையுடைய திரவம் சுரக்காமல் போவதாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. ஆதலால் நாம் நமது உணவில் நார்ச்சத்து உள்ள காய்கறிகள் எடுத்துக் கொண்டால் போதும், Mucin என்ற திரவம் சுரந்துவிடும். அதனால் மலச்சிக்கல் எல்லாம் சரியாகிவிடும். திராட்சை பழம், பேரிச்சம் பழம், வாழை பழம் மற்றும் கொய்யாப்பழம் முதலியன எடுத்துக் கொண்டாலும் மலச்சிக்கல் ஏற்படாது. அதை விட்டு விட்டு மாத்திரை போட்டால் அந்த நிமிடம் கேட்குமே தவிர Regular-ராக சரியாக போகாது. எனவே முறையான உணவு முறையை கடைபிடித்து மலச்சிக்கலை தவிர்க்க வேண்டும்.
நன்றி,
அன்புடன்,
ஈஸ்வரி
No comments:
Post a Comment