இறைவனிடம் பிராத்தனை செய்வது எப்படி?
இறைவனிடம் பிராத்தனை செய்வது எப்படி? என்று சொல்ல போகிறேன். என்னங்க இது கூட எங்களுக்கு தெரியாதா? பணத்தை கொடு, அதை கொடு, இதை கொடு என்று கேட்போம். இதில் வரைமுறை உண்டா? என்று நீங்கள் கேட்பது என் காதுகளுக்கு கேட்கிறது. ஆம் அதற்கு சில வரையறைகள் உண்டு. என்ன வரங்களை கேட்க வேண்டும் என்பது பற்றி இதில் பார்ப்போம்.
பூஜை அறையில் அமர்ந்தவுடன் வேறு எந்த சிந்தனையும் வரக் கூடாது. மன ஒருமைப்படவேண்டும். பின்பு கடவுளிடம் வரத்தை கேட்க வேண்டும்.
1.இறைவா எப்போழுதும் நீ என்னுடன் துணையாக இருக்க வேண்டும்.
2.எனக்கு நல்ல எண்ணங்களை தர வேண்டும்
3.எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை தாங்கும் சக்தியை தர வேண்டும்.
4.பிரச்சனைகளை எதிர் கொள்ளும் மனப்பக்குவத்தை தர வேண்டும்.
5.உலகத்தில் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்
மேற்கண்டபடி இறைவனிடம் நாம் வரத்தை கேட்க வேண்டுமே தவிர இதை கொடு அதை கொடு என்று கேட்க கூடாது. இவ்வாறு இறைவனிடம் பிராத்தனை செய்து பாருங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் முத்துக்களாக ஜொலிப்பீர்கள் என்பதில் ஐயமில்லை.
நன்றி,
அன்புடன்,
ஈஸ்வரி
No comments:
Post a Comment