முகத்தை அழகாக வைக்க வேண்டுமா?
நாம் எல்லோருக்கும் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டு. அதற்காக நாம் நிறைய விஷயங்களை செய்கின்றோம். முகத்தில் பருக்கள் நிறைய இருந்தால், எவ்வளவு அழகாக இருந்தாலும் அழகு கெட்டுவிடும். எவ்வளவு மேக்கப் போட்டாலும், நன்றாக இருக்காது. முகத்தில் எதனால் பருக்கள் வருகிறது.
தேவையில்லாத கழிவுகள் உள்ளே தங்கிவிடும் போது அது தோல்வழியாக காட்டிவிடும். தேவையில்லாத கழிவுகள் என்றால் என்ன என்று பார்ப்போம்.
மலச்சிக்கல் மற்றும் மாதவிடாய் முறையாக நடைபெறாமல் இருப்பது மற்றும் சிறுநீரகம் கழிவுகளை வெளியேற்றாமல் இருப்பது. இதனால் தான் நமது தோலில் பருக்கல் வருகிறது. அதைவிட்டுவிட்டு Lotion மற்றும் Cream போடுவது. Natural Soap மற்றும் Beauty Parlour செல்வது. இது போன்ற எந்த விஷயங்கள் செய்தாலும் பருக்கள் போகாது என்பது தான் உண்மை.
நாம் குழந்தைகளாக பிறக்கும் போது எவ்வளவு நன்றாகத்தான் இருந்தோம். ஆனால் நமது உணவு முறை பழக்கவழக்கங்கள் இதனால், நம் முகத்தை கெடுத்து விடுகிறோம். உள்ளே கழிவு இருக்கும் வரை வெளியே அழகு எப்படி வரும்.
சிறுநீரகம் அதன் வேலையை சரியாக செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும். நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். மீதத்தை அது பார்த்துக் கொள்ளும்.
மாதவிடாய் சரியாக போவதற்கு சில விஷயங்கள் சொல்லியிருந்தேன். அதை கடைபிடியுங்கள் சரியாகிவிடும். மலச்சிக்கல் என்ன செய்யும் என்று தனியாக பின்பு கூற இருக்கிறேன். (தனி Blog). அதனால் தண்ணீர் குடித்து மற்றும் அக்குபஞ்சர் சிகிச்சை எடுத்துக் கொண்டால் முகத்தில் கரும்புள்ளி மற்றும் பருக்கள் போய்விடும். அது மட்டும் அழகு படுத்தி விடாது. முகத்தை சிரித்த படி வைத்துக் கொண்டாலே முகம் பிரகாசமாக இருக்கும். குழந்தை சிரிப்பதனால் தான் அழகாக இருக்கிறது. அதை விட்டுவிட்டு முகத்துக்கு வெளியே என்ன Treatment பன்னினாலும் குணமாகாது. எனவே அனைவரும் இதை படித்துவிட்டு ஒரு முறை சிரியுங்கள் அது போதும் எனக்கு.
நன்றி,
அன்புடன்,
ஈஸ்வரி
No comments:
Post a Comment