Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Sunday 20 January 2013


அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது:

மனிதப்பிறவி என்பது கிடைத்தல் அரிது. அதை அடைவதற்கே நாம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். ஔவை கூறுவார்கள் இந்த உலகத்தில் அரிது எது என்று!

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனிலும் அரிது கூன், குருடு, செவிடு இல்லாமல் பிறத்தல் அரிது, அதனிலும் அரிது ஞானம் கிடைத்தல் அரிது. அதனிலும் அரிது தானம், தவம் போன்றவை கிடைத்தல் அரிது என்றும். தவம் கிடைத்துவிட்டால் அதற்கான வழி தானே கிடைத்துவிடும் என்று கூறி இருக்கிறார்கள்.

பல பிறவிகள் எடுத்த பிறகே இந்த மானிடப்பிறவியை அடைகிறோம். சிவபுராணத்தில் "புல்லாய், பூடாய், புலுவாய், மரமாகி, பல் மிருகமாய், மனிதராய், பேயாய் கணங்களாய் வல் அசுரராய், தேவராய் சொல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் !" என்ற பாடல் வரிக்கேற்ப நாம் பல கஷ்டங்களை கடந்து 7 அறிவுடைய மனிதப் பிறவியை அடைந்துள்ளோம். அந்த 7 வது அறிவு என்பது தான் "ஞான அறிவு" ஆகும்

அந்த 7ஆம் அறிவை கொண்டு யோசித்து செயல்படவேண்டும். 7ஆம் அறிவு செயல்பட தொடங்கிவிட்டால் ஆசை, பணம், புகழ் போன்றவற்றிக்கு நாம் நம்மை அற்பனித்துக் கொள்ள மாட்டோம். 7 ஆம் அறிவு செயல்பட தொடங்கிவிட்டால் இதையெல்லாம் கடந்து நம்முள் இருக்கும். சக்தியை உணர தொடங்கிவிடுவோம். அதாவது சுறுக்கமாக சொன்னால் "உடம்புக்கும், மனதுக்கும் முக்கியதுவம் கொடுக்க தொடங்கிவிடுவோம்". எனவே கிடைத்த இந்த பிறவியை ஒவ்வொருவரும் வீணாக்காமல் சரியாக பயன்படுத்தி பலன் அடைய வேண்டும் என்பது என்னுடைய கருத்து ஆகும்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

No comments:

Post a Comment