நாம் அழகாக இருக்க மிக முக்கியமான ஒன்று, தலை முடி ஆகும். ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி முடி உதிர்தல் ஏற்பட்டால் மிகவும் அழகு கெட்டுவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை. முடி எதனால் உதிர்கின்றது? என்ன காரணங்கள் என்று பார்க்கலாம்.
1.Thyroid Problem
2.வளர்சிதை மாற்றம்
3.வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு
4.சத்து குறைபாடு
இதனால் தான் முடி உதிர்தல் ஏற்படும். அதை விட்டு விட்டு விதவிதமான Shompoo use பன்னுவதால் முடி உதிர்வது குறையாது என்பது தான் உண்மை. வளர்சிதை மாற்றம் சரியாக நடைபெறாமல் இருக்கும் போது தான் பொடுகு ஏற்படும். அதனால் முடி கழியும். வளர்சிதை மாற்றம் சரியாக நடைபெற எது தேவை என்றால் சத்துக்கள். உணவு பொருட்களில் அந்த சத்தை நாம் கொடுத்து விட்டால் அது வேலையை சரியாக செய்யும். முடி உதிர்வதும் இருக்காது பொடுகு தொல்லையும் இருக்காது. அதைவிட்டு விட்டு Shampoo வெளியே போட்டால் உள்ளே எப்படி சரியாகும். சற்று சிந்தியுங்கள்.
சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது மற்றும் தேங்காய் எண்ணெய் தேய்ப்பது இந்த இரண்டையும் செய்து வந்தாலே போதும், முடி உதிர்வது இருக்காது. தலைக்கு Shampoo-க்கு பதிலாக செம்பருத்தி இலை சீயக்காய் போன்றவற்றை Use செய்தால் இன்னும் முடி கருப்பாகவும், நீளமாகவும் வளரும் என்பதில் எந்த தடையும் இல்லை. அதாவது உள்ளேயும் கொடுக்க வேண்டும் வெளியேயும் கொடுக்க வேண்டும். இன்று உள்ளவர்கள் தலைக்கு எண்ணை தேய்ப்பதே கிடையாது. நாம் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் நாக்கு வறண்டு விடுவது பொல எண்ணை தேய்க்கவில்லை என்றால் முடி வறண்டு விடும். அதனால் சரியான முறையை கடைபிடித்து பயன் அடைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆகும்
நன்றி,
அன்புடன்,
ஈஸ்வரி
thank u mam
ReplyDelete