Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Thursday 7 February 2013

உன்னுடைய வளர்ச்சி உன் எண்ணத்தில் .. .. ..



நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டும் போதாது, அதற்கு எது மிக முக்கியமாக தேவைப்படுகிறது என்றால் "Positive Thinking" இருக்க வேண்டும். எந்த வேலையில் இருந்தாலும் சரி அதை விரும்பி செய்ய வேண்டும். ஒவ்வொரு விஷயத்தையும் Positive -ஆக பார்க்க துவங்கிவிட்டால் கஷ்டமே இருக்காது. நாம் எண்ணும் எண்ணத்தில் கலந்து இருக்க வேண்டும். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிவிடும் அளவிற்கு சக்தி நம்முள் இருக்கிறது என்பது தான் உண்மை. நமக்குள் இருக்கும் Negative-ஐ தூக்கி எறிந்துவிட்டால், Positive Energy தானாகவே வந்துவிடும். ஒரு உதாரணத்திற்கு சில ஆசைகள் நிறைவேறவில்லை என்று வைத்துக்கொள்வோம், உடனே மனம் என்ன சொல்லும் "நான் நினைத்து எது நடந்து இருக்கிறது" என்று Negative-ஆக சொன்னால் அது தான் நடக்கும்.

ரஜினி சார் பார்த்தீர்கள் என்றால் பல actress -யுடன் நடித்தாலும் "ஐஸ்வர்யா ராய்" கூடத் தான் நடிக்க ஆசைப்பட்டார். உடனே நடந்து விட்டதா என்ன? அந்த ஆசை பல படங்களுக்கு பிறகு "எந்திரன்" படத்தில் தான் நிறைவேறியது. இன்னொரு உதாரணமாக பவர் ஸ்டாரை சொல்லலாம். அவரே அவர் பெயருக்கு முன் "பவர் ஸ்டார்" என்று பட்டம் போட்டு கொண்டார். அப்பொழுது அனைவரும் சிரித்தார்கள். இப்பொழுது உண்மையிலேயே "பவர் ஸ்டார்" ஆகி விட்டார். எண்ணங்கள் தான் வாழ்க்கை. அது போல நாமும் நம் எண்ணங்களை Positive -ஆக நினைத்து வாழ கற்றுக் கொண்டால் பல ஆசைகள் நிறைவேறும் என்பதில் ஐயம் இல்லை. சினிமா வைத்து சொன்னால் நம்மவர்களுக்கு நன்றாக புரியும் என்பதால் கூறியுள்ளேன். பிறர் வந்து நம்மை Positive-ஆக சொன்னால் சந்தோஷம் அடைகிறோம். ஆனால் நாமே நம்மைப்பற்றி உள்ளே Negative-ஆக நினைத்தால் எப்படி இருக்கும்? எனவே எல்லோரும் எண்ணங்களை மாற்றி நம்மை நாமே உயர்வாக நினைக்க கற்றுக் கொள்ள வேண்டும்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

2 comments:

  1. arumaiyaana pathivu vaazthukkal
    "'நம்மை நாமே உயர்வாக நினைக்க "'
    intha positive thinking irukkuravangala pirarin poraamai parvai marrum kanneru ponravai baathikkaathu

    but ithuve overa poitta superiority complex nu solluvaanga athu oruvagaiyaana mana viyaathiya aayidum

    ReplyDelete
  2. நன்றி.

    நம்மை பார்த்து ஒருவர் பொறாமை படுகிறார் என்றால் அவரே அழிந்துவிடுவார். அது Negative அல்லது Positive -ஆக இருந்தாலும் சரி. கண் திருஷ்டி என்பது ஒன்றும் கிடையாது. நமக்கு என்ன நடக்கனும் என்று இருக்கிறதோ அது தான் நடக்கும்.

    Positve thoughts அதிகம் ஆகும் போது Superiority complex வருவது உண்மை தான்.

    தொடர்ந்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.

    ReplyDelete