Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Thursday 29 November 2012


ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் !  ஆனால் ...


நாம் சாப்பிடும் உணவு வகைகளில் கூட பல சந்தேகங்கள் எழுகின்றன. என்ன சந்தேகம் எழுகின்றன ? இதை சாப்பிடலாமா? இதை சாப்பிட கூடாதா ? என்று பல சந்தேகங்கள் எழும். இதை சாப்பிட்டால் அலர்ஜி. வாழைக்காய் சாப்பிட்டால் வாயு தொந்தரவு. உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாயு தொந்தரவு. கத்தரிக்காய் சாப்பிட்டால் அரிப்பு ஏற்படுகிறது என்று எல்லாம் சிலர் அறியாமையால் சாப்பிடாமல் விட்டுவிடுகின்றனர். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. கடவுள் படைப்பில் எல்லா வகையான உணவு வகைகளும் மிக சத்துள்ள பொருட்கள் ஆகும்.

நாம் நம் உடம்பில் ஏறகனவே சில பிரச்சனைகளுடன் இருப்பதால் அதை சாப்பிடும் போது அதை ஏற்க மறுக்கும். ஓர் உதாரணத்திற்கு என்னவென்றால், வாழைக்காய் எடுத்துக்கொள்வோம், வாயு தொந்தரவு என்று நினைத்து சாப்பிடாமல் இருப்பார்கள். ஆனால் ஏற்கனவே வயிறு ஜீரண சக்தி இல்லாமல் இருப்பதால் இந்த வாழைக்காய் மேலும் சேர்க்கும் போது அது வாயு தொந்தரவு போல் தெரியும். அதனால் வயிற்றில் ஜீரண சக்தி சரியாக நடைபெற்றால் எல்லாவிதமான உணவு வகைகளையும் எடுத்துக்கொள்ளலாம். பொறுமையாக மென்று சாப்பிட்டாலே போதும் எதற்கும் பயப்படத்தேவையில்லை.

சிலர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இனிப்பே சாப்பிடாமல் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள். அறியாமையால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் கசப்பை அதிகமாக சேர்த்துக் கொள்வார்கள்.  சர்க்கரை நோய் உள்ளவர்கள் கசப்பை மட்டும் அதிகமாக சேர்க்கத் தேவையில்லை. அறுசுவை உணவுகளையும் சமமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கேட்பார்கள் நாங்கள் இனிப்பை சாப்பிடலாமா என்று தாராளமாக சாப்பிடலாம். அதாவது உங்கள் நாக்கு உங்களுடன் பேசும். இது மிகப்பெரிய உண்மை. நமக்கு என்ன தேவையோ அது நாக்கு சொல்லும். அப்பொழுது அந்த சுவையை மட்டும் கொடுத்தால் போதும், ஒன்றுமே செய்யாது. உங்கள் நாக்கு தான் உங்களுடன் இருக்கும் டாக்டர்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பை கொஞ்சம் கூட சேர்க்காமல் விட்டுவிட்டால் சர்க்கரை குறைந்தாலும் மயக்கம் வந்துவிடும். அதனால் இனிப்பை நாக்கு கேட்கும் போது சிறிது எடுத்துக்கொள்ளலாம். அதற்காக ஒரேடியாக உட்காந்து உட்காந்து ஒரு கிலோ அல்வாயை சாப்பிடீர்கள் என்றால் தூக்கிவிடும். தூக்கிவிடும் என்றால் என்னவென்று சர்க்கரை நோயாளிகளுக்கு தெரியும். இப்ப தலைப்பை ஒரு தடவை படியுங்கள். அதனால் தான் தலைபிலேயே ஒரு "ஆனால்" போட்டுள்ளேன்.

பொதுவாக எல்லோரும் எல்லா உணவுகளையும் சாப்பிடலாம் ஆனால் எல்லாம் ஒரு லிமிட்டில் சாப்பிடுங்கள். என்ன சொல்ல வருகிறேன் என்றால், "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்ற பழமொழிக்கு ஏற்ப எல்லாம் சுவையும் கலந்து எடுத்துக்கொள்ளுங்கள். சமமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

அதனால் கடவுள் படைப்பில் உள்ள அனைத்து உணவு வகைகளும் மிகவும் அற்புதமானவை ஆகும். எல்லோரும் எதையும் ஒதுக்காமல் சாப்பிட்டு இன்புறுக !


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

No comments:

Post a Comment