Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Monday 26 November 2012


ஒரே கல்லில் இரண்டு மாங்காய்:


நாம் நம் உடம்பை சரியாக பார்த்துக் கொள்ளாதலால் சில நோய்கள் உருவாகின்றன. சில நோய்கள் வெளிப்புறத்தில் இருந்தும் உருவாகின்றன. தொற்றுகளால் சில நோய்கள் உருவாகின்றன. அதில் வெளிப்புற காரணங்களில் உருவாகும் நோய்களில் காய்ச்சல் தான் அதிகம். எப்படி? எதனால் உருவாகின்றன?. கொசு தொல்லையால் தான் உருவாகின்றன. பொதுவாக நாம் கொசுவை ஒழிப்பதற்க்கு பலவகைகளில் முயற்சி செய்கிறோம். ஆனால் நான் ஒரு சின்ன டிப்ஸ் உங்களுக்கு தரப்போகிறேன். அதை கடைபிடித்தால் கொசுக்களை விரட்டிவிடலாம் மற்றும் எந்த ஒரு side effect- ம் கிடையாது.

அது என்னவென்றால் நாம் எரிந்த கரியின் அனலை எடுத்தும் கொண்டு அதில் கொஞ்சம் மூலிகை இழையான வேப்ப இலையை அதில் போட்டால் போதும், சில நிமிடங்களில் அதில் இருந்து கசப்பு கலந்த புகை வெளியேறும். அந்த புகையின் தாக்கத்திற்க்கு பயந்து கொசுக்கள் வெளியேறிவிடும். இதை செய்யும் போது சன்னல்கள் திறந்து வைத்து விட்டு செய்யுங்கள். அப்பொழுது தான் அது வெளியேறும். நமக்கும் அந்த புகையின் சுவாசம் உடம்புக்கு நல்லது. கொசு வெளியேறிய பின்பும் சன்னல்கள் மூட தேவையில்லை.  "ஒரே கல்லில் இரண்டு மாங்காய்". கொசு இல்லை என்றால் பாதி நோய் வராமல் தடுத்துவிடலாம். இதை உடனே முயற்சி செய்யுங்கள். நல்ல பலனை அடையுங்கள்

எரிந்த கரியின் அனலை தயார் செய்ய எளிமையான வழி:

கம்யூட்டர் சாம்பிராணி இரண்டு அல்லது மூன்றை எடுத்துக்கொண்டு,  அதை எரிய வைத்த பின்பு வரும் அனலில் வேப்ப இலைகளை போடவும்.

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

No comments:

Post a Comment