ஆசை, அலட்சியப்படுத்துதல் தான் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:
இந்த இரண்டு காரணத்தின் அடிப்படையில் தான் நோய்கள் உருவாகின்றன.
ஆசை:
நாம் நம் நாக்கை கட்டுப்படுத்த முடியாமல் இதை சாப்பிட வேண்டும், இதை சாப்பிட கூடாது என்று எதையும் யோசிக்காமல் சாப்பிடுவது. நமக்கு என்ன எல்லாம் பிடிக்குமோ அதையெல்லாம் சாப்பிடுவது. நமக்கு எது எல்லாம் பிடிக்காதோ அதை எல்லாம் சாப்பிடாமல் இருப்பது. உதாரணத்திற்க்கு மது அருந்துவது, சிகரெட் புகைப்பது கெடுதி என்று தெரிந்தும் அதை எனக்கு பிடிக்கும் ஏதோ ஒரு போதை இருக்கிறது என்று ஆசைக்காக செய்வது. "கசப்பு" உடம்புக்கு தேவை ஆனால் அதை நாம் உணவில் எடுத்துக் கொள்வதே கிடையாது. ஏனென்றால் அது எனக்கு பிடிக்காது என்று கூறிவிடுவது. இது போல் நாம் அறியாமல் செய்யும் தவறுகளால் தான் நோய்கள் உருவாகுவதற்கு நாமே காரணம் ஆகிவிடுகிறோம்.
எந்த ஒரு பொருளாக இருந்தாலும் சரி அதை அதிகம் சாப்பிடக் கூடாது. "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனால் ஆசைக்காக எதையும் சாப்பிடாமல் ஆயுளுக்காக சாப்பிடுங்கள். "பசிக்காக சாப்பிடுங்கள் - ருசிக்காக சாப்பிடாதீர்கள்" உதாரணத்திற்க்கு 5 இட்லி தான் சாப்பிட முடியும் என்றால் அதனோடு நிறுத்திக் கொண்டுவிட்டால் எந்த பிரச்சனையும் கிடையாது. ருசியாக இருக்கிறது என்பதற்காக இன்னும் 4 இட்லி சேர்த்து சாப்பிடுவது தான் தவறு. தயவு செய்து யாருக்காவது மேலே குறிப்பிட்ட பழக்கவழக்கங்கள் இருந்தால் அதை விட்டு விடுங்கள். ஆசைக்காக சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொண்டு நோய் உருவாவதற்க்கு நாமே ஏற்படுத்திக் கொடுக்காமல் நல்ல உணவுகளை எடுத்துக் கொண்டு உடம்பை பேணிக் காப்போம்.
அலட்சியப்படுத்துதல்:
நம் உடம்புக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை உடம்பே நமக்கு சொல்லிவிடும். நம் உடம்பு நம்முடன் பேசும், ஆனால் நாம் அதை கவனிக்ககூட நேரம் இல்லாமல் அதை நாம் அலட்சியப்படுத்தி விடுகிறோம்.
1.நமக்கு பசிக்கும் போது சாப்பிடுவது கிடையாது, பிறகு சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று இருந்துவிடுவது.
2.நமக்கு தண்ணீர் தாகம் எடுக்கும் போது தண்ணீர் குடிக்காமல் இருப்பது, இது போன்ற சில விஷயங்கள் செய்வதால் தான் நோய்கள் உருவாகின்றன.
3.Urine - வரும் போது உடனே வெளியேற்ற வேண்டும். ஆனால் பிறகு வெளியேற்றிக் கொள்ளலாம் என்று இருந்து விடுவது. இது போன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது.
அதனால் ஆசை, அலட்சியப்படுத்தல் இரண்டையும் சரி செய்து கொண்டாலே போதும் பல நோய்கள் நம்மை விட்டு ஓடிவிடும், நோய்கள் வரவே வராது.
உணவின் அளவு எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர் அவர் உடம்பிற்க்கு ஏற்ப எடுத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு வேலை செய்கிறோமோ அவ்வளவு உணவு எடுத்துக்கொள்ளலாம். நாம் சாப்பிடும் போது நம் வயிறு நிறைந்தவுடன் ஏப்பம் வரும். ஏப்பம் வந்தவுடன் உணவை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏப்பம் தான் நம் வயிறு நிரம்பியதற்கான அறிகுறி ஆகும்.
சிகரெட் மற்றும் மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு பலவிதமான நோய்கள் ஏற்படும். ஏன் உயிரே போய்விடும். மீண்டும் மீண்டும் கூறுகிறேன் தவறான பழக்கங்கள் இருந்தால் விட்டுவிடுங்கள்.
"எவ்வளவுக்கு எவ்வளவு ருசித்து குடித்தீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவுக்கு வலித்து, துடித்து தான் உயிர் போகும்"
நன்றி,
அன்புடன்,
ஈஸ்வரி
தேவையான பதிவு.
ReplyDeleteஉங்களின் மேலான பாரட்டு மற்றும் ஊக்கத்திற்க்கு நன்றி முனைவர் திரு.இரா.குணசீலன் அவர்களே ..
ReplyDeletegood work
ReplyDeleteநன்றி. தங்கள் பாராட்டுக்கு நன்றி.
ReplyDelete