Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Wednesday 26 December 2012


எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ?


நமது உறுப்புகள் ஒவ்வொன்றும் நமக்கு கிடைத்த பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு  தயவு செய்து அக்கறை காட்டுங்கள். சிறியதாக இருக்கும் போதே சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். பெரிதாக வலி கூடிய பின்பு உறுப்பை வெட்டி எடுத்துவிடுவது இன்று சாதாரணமாக மாறிவிட்டது. அதை நினைக்கும் போது எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. எந்த எந்த உறுப்பு எங்கே இருக்க வேண்டுமோ அந்த அந்த உறுப்பு அங்கே கட்டாயமாக இருக்க வேண்டும். ஒரு உறுப்பை எடுத்த பின்பு பல பிரச்சனைகள் சந்திக்க வேண்டியிருக்கும். நமது உறுப்புகளில் கத்தி படவே கூடாது. அதை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் வீடு மற்றும் நகை இது போன்ற விஷயங்களுக்கு முக்கியதுவம் கொடுக்கிறோம்.

அதற்காக ஓடி ஓடி உழைக்கிறோம். உடம்பை கூட பேணி காப்பதில்லை. அப்படி ஓடி வீடு, நகை சேர்த்து விடுவோம். ஆனால்
அதை அனுபவிக்க நாம் இருக்க வேண்டும் அல்லவா? அதனால் சற்று சிந்தியுங்கள். எதற்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும் என்று யோசியுங்கள். நாம் நன்றாக இருந்தால் கடைசி வரை நிம்மதியாக இருக்கலாம். அதனால் நமது ஒவ்வொரு உறுப்புகளும் தான் "தங்கம்" போன்றவை அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

ஒரு பைக்கிள் பிரேக் இல்லை என்றால், அதாவது பிரேக்கை மட்டும் எடுத்து விட்டால் நாம் எப்படி சிக்கலில் மாட்டிக் கொண்டு முழிபோமோ, அது போல தான் நமது உறுப்புகள் எதுவானாலும், அதை எடுத்து விட்டார்கள் என்றால், நாம் மிகப்பெரிய சிரமத்தை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே உறுப்புகளுக்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

No comments:

Post a Comment