அக்குபஞ்சர் என்பது வரும்முன் காக்கும் வைத்தியம் ஆகும். நமது உடலில் நோய் முற்றி பெரிய வியாதியாக மாறும் வரை நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம். அந்த விழிப்புணர்வை கொண்டு வரவேண்டும். இறைவன் நமக்கு ஒரு நோய் ஆரம்பம் ஏற்படும் போது சில அறிகுறிகள் தெரியும் படி படைத்துள்ளார். நாம் அதை உதாசீனப்படுத்திவிடுகிறோம். பின்பு முற்றாமல் என்ன செய்யும்?
"நேற்று வரைக்கும் நன்றாக இருந்தார் திடீரென்று Heart Attack வந்திருச்சு" என்பார்கள். திடீரென்று சர்க்கரை நோய் வந்துவிட்டது என்று பலர் கூறுவார்கள். அது எல்லாம் உண்மையல்ல, அறியாமையால் கூறுவது ஆகும். இறைவன் Heart-யை மிக பத்திரமாக இருப்பதற்கு மூன்று உறை தாண்டிய பின்பு படைத்துள்ளார். அதை தாண்டி சென்று Heart Attack ஆகிறது என்றால் நாம் எவ்வளவு கவனக்குறைவாக இருந்திருக்க வேண்டும். அதனால் நம்மிடம் இருக்கும் தவறை மாற்றி கொண்டாலே போதும். பல நோய்களில் இருந்து வெளியே வந்துவிடலாம்.
நன்றாக தெரிந்து கொள்ளுங்கள், உடம்பின் உள்ளே பிரச்சனை என்றால் வெளியே தெரியப்படும் வலியாகவோ, அரிப்பாகவோ, தடிப்பாகவோ அல்லது வாந்தி போன்ற எந்த ஒரு அறிகுறியாவது தோன்றும். அதை வைத்து தெரிந்து கொண்டு நாம் உடனே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். தயவு செய்து உடம்புக்கு அக்கரை காட்டுங்கள். ஏன் என்றால் நம்முடைய " ஆத்மாவை" தாங்கி பிடித்துக் கொண்டு இருப்பது இந்த உடம்பு தான். நாமே நம் உடம்பை மதிக்கவில்லை என்றால் பிறர் எப்படி நம்மை மதிப்பார்கள். ஏன் சொல்கிறேன் என்றால் உடம்பு நன்றாக இருந்தால் தான் Public நம்மை மதிக்கும் ஏதாவது பெரிய நோய் வந்துவிட்டால் யாரும் அருகில் கூட வரமாட்டார்கள். எந்த உதவியும் செய்ய மாட்டார்கள்.
எடுத்துக்காட்டாக ஒருவர் சாதாரண சளியால் அதிகமாக இருமுகிறார் என்றால், அனைவரும் அவர் அருகில் செல்ல யோசிப்பர். ஏதாவது நோய் கிருமிகள் நம்மை தாக்கிவிடும் என பயப்படுவர். ஆனால் வெளியில் சொல்ல மாட்டார்கள். ஒரு சாதாரண சளி மற்றும் இருமலுக்கே இப்படி என்றால், பெரிய பெரிய நோய்களுக்கு எப்படி மக்களிடம் Response இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.
அதனால் நம் உடம்பை கெடுத்துக் கொண்டு பிறருக்கு எந்த சிரம்மத்தையும் கொடுக்காதீர்கள். அதனால் "வரும் முன் காக்க" கற்றுக் கொள்ளுங்கள்.
நன்றி,
அன்புடன்,
ஈஸ்வரி
No comments:
Post a Comment