அன்பு:
அன்பு பற்றி சில விஷயங்களை உங்களிடம் சொல்ல விருப்பப்படுகிறேன். இன்றைய கால கட்டங்களில் அன்பு என்றால் என்ன? என்பது தெரியாமல், அறியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
அன்பு என்பது உள்ளிருந்து வெளிப்படுவதாகும். அன்புக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. அன்பு என்பது நேசிப்பதாகும். குறுகிய மனம் இருக்காது. பரந்து விரிந்து காணப்படும். சுயநலம் இருக்காது. அன்பு உள்ளவர்கள் பிறருக்காக எதையும் செய்வார்கள். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாதது தான் அன்பு ஆகும். அன்பு உள்ளவர்களுக்கு கொடுக்க மட்டும் தான் தெரியும். வாங்கத் தெரியாது.
அன்பு உள்ளவர்களிடம் காதல் மலரும். காதல் தெய்வீகமானது.
அன்புக்கு கோபப்படத் தெரியும். தவறு செய்யும் போது கண்டிக்கவும் தெரியும். அன்பு உள்ளவர்கள் மற்றவரை மனம் அறிந்து நடந்து கொள்வார்கள். பிறருடைய உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள். அன்பு உள்ளவர்கள் என்றும் திருப்தியாக இருப்பார்கள்.
ஆனால் இன்று அப்படி இல்லை. Condition போட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு விஷயம் சொன்னால் அப்படியே கேட்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு பெயர் அன்பு அல்ல அடிமையாகும். அன்பு உள்ளவர்கள் எப்பொழுதும் சுதந்திரம் அளிப்பவர்கள்.
அன்பு உள்ளவர்கள் எப்போழுதும் விட்டுக் கொடுக்கும் மனம் படைத்தவர்கள் ஆவர். ஆனால் அதை சரியாக பயன்படுத்த தெரியாதவர்கள் அவர்களை இழந்து விடுவார்கள்.
எந்த ஒரு உறவாக இருந்தாலும் சரி. உதாரணத்திற்கு அப்பா, பையன் அல்லது அக்கா, தங்கை போன்ற எந்த ஒரு உறவாக இருந்தாலும் சரி அவர்களை சுயநலத்திற்காக பயன்படுத்தாமல், அதாவது என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் பெறுவதற்காக மட்டும் பயன்படுத்தினால் நீண்ட நாள் உறவு நீடிக்காது என்பது உண்மை. அன்பு என்பது எல்லோரிடமும் காட்டப்படுவது ஆகும். குறுகிய மனம் படைத்தவர்கள் மட்டும் தான் தனக்கு பிடித்தவர்கள் மீது மட்டும் அன்பு வைத்திருப்பார்கள். நன்றாக சொல்ல வேண்டும் என்றால் அதற்கு பெயர் அன்பு அல்ல பற்று ஆகும். அன்பு ஒரு துளி கூடிவிட்டால் அது பற்றாக் மாறிவிடும். எனவே எல்லோரும் பற்றை அகற்றிவிட்டு, அன்பாக இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள் ஆகும்
அன்புக்கு இதற்கு மேல் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்.
நன்றி,
அன்புடன்,
ஈஸ்வரி
No comments:
Post a Comment