Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Wednesday 19 December 2012


அக்குபஞ்சரில் அவசர கால சிகிச்சை:


அக்குபஞ்சர் வருமுன் காக்கும் வைத்தியம் என்று பார்த்தோம். அது மட்டும் அல்லாமல் மற்றும் ஒரு சிறப்பு அம்சம் உள்ளது. என்னவென்றால் அவசரகால சிகிக்சையும் அளிக்க முடியும். திடீரென்று Heart-ல் ஒரு பிரச்சனை என்று வைத்துக் கொள்வோம். அதாவது ஒரு படபடப்பு, நெஞ்சு வலி ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். Hospital போகும் வரை அவர்களுக்கு  ஒரு Relief கொடுக்க முடியும். அக்கு புள்ளிகள் இருதய சக்தி ஓட்டப்பாதையில் Toutch Healing கொடுக்கும் போது அவர்கள் Hospital போகும் வரை பாதுகாக்க முடியும் என்பது மிகப்பெரிய உண்மையாகும். என்னுடைய Experience ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு நாள் சென்னையில் Local A/C Bus-ல் சென்று கொண்டு இருந்தேன். அப்பொழுது எனக்கு எதிரே ஒரு family நின்று கொண்டு வந்தது. அதில் அப்பா, அம்மா, ஒரு பையன். அந்த பையனுக்கு 9 வயது இருக்கும். திடீரென்று அந்த பையனை அவனுடைய அப்பா திட்டிக்கொண்டே வந்தார். முகத்தில் ஒரு பயம் தெரிந்தது மற்றும் பதட்டம் தெரிந்தது. அவன் அப்பா அந்த பையனிடம் எப்படியாவது பொறுத்துக்கொள் என்று கூறிக்கொண்டே வந்தார். உடனே நான் சென்று என்ன பிரச்சனை? என்று கேட்டேன். உடனே அவர் சொன்னார், பையனுக்கு வாந்தி வருகிறதாம் என்றார். மேலும் என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் கூறினார். ஏனென்றால் A/c Bus-ல் ஜன்னல்கள், கதவுகள் எல்லாம் complete close-ஆக இருந்தது. அவருக்கு என்ன செய்ய என்று தெரியாமல் பையனை பொறுத்துக் கொள் என்று கூறிக் கொண்டே வந்தார்.

வாந்தியை Control பன்ன முடியுமா என்ன? உடனே நான் ஒரு அக்கு புள்ளியை சொல்லி Touch Healing செய்ய சொன்னேன். ஒரே ஒரு புள்ளி தான். ஒரே புள்ளியில் தூக்கம் மற்றும் வாந்தியின்மை சரி செய்ய முடியும். நான் அந்த புள்ளியை சொன்னவுடன் அவர் நான் யார் என்பதை தெரிந்து கொள்ள கூட யோசிக்காமல் நேரடியாக உடனே புள்ளியை தொட ஆரம்பித்துவிட்டார். எவ்வளவு டென்சனாக இருந்திருப்பார். அந்த புள்ளியை அவர் அமுக்கி கொண்டே வந்தார்.

அப்பொழுது தான் அந்த அதிசயம் நடந்தது. என்ன நடந்தது தெரியுமா? அந்த பையன் நின்றவாரே அவங்க அப்பாவை அணைத்தவாரே அவர்கள் இடம் வரும்வரை தூங்கிவிட்டான். இடம் வந்தவுடன் இறங்கும் போது பையனின் தந்தை நன்றி சொல்லி இறங்கினார். இவ்வளவு பெரிய டென்சனிலில் இருந்து அவருக்கு விடுதலை தந்ததை நினைத்து சந்தோஷம் அடைந்தேன்.

இது ஒரு சின்ன உதாரணம் தான். ஆனால் எவ்வளவு பெரிய விஷயத்தையும் அக்கு புள்ளிகளால் அவசர சிகிச்சை செய்ய முடியும் என்பது தான் உண்மை.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

No comments:

Post a Comment