Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Monday 17 December 2012

எந்த நோயும் உங்களை நெருங்க பயப்படும்:


நோய் வந்த பின் என்ன செய்யலாம்? என்பதற்கு நிறைய மருத்துவ ஆலோசனைகள் கிடைக்கும். ஆனால் என்னுடைய நோக்கம் அது அல்ல. எப்படி நோய்கள் வராமல் தடுப்பது என்பது மட்டுமே. இது  இதுவரை யாருமே சொல்லாதது.

நமது உறுப்புகளை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்துக் கொண்டாலே எந்த ஒரு நோயும் வரவே வராது. அதுவும் கல்லீரல் மிகவும் குளிர்ச்சியாக வைத்துக்கொண்டால் சர்க்கரை நோய் மற்றும் மஞ்சள் காமாலை இது போன்ற பல நோய்கள் உருவாகாமல் தடுக்க முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும்.?

நாம் பல அருவிகளில் குளித்து இருப்போம். குளித்துவிட்டு வந்தவுடன் பார்த்தால் நமது கண்கள் மிகவும் சிவந்து காணப்படும். எவ்வளவுக்கு எவ்வளவு கண்கள் சிவக்கின்றதோ அவ்வளவு உஷ்ணம் நமது உடம்பில் இருக்கின்றது என்று அர்த்தம். ஆனால் அப்படி அருவிகளில் குளிப்பதால் அந்த உஷ்ணம் வெளியேறிவிடும். உறுப்புகளும் நன்றாக இயங்க துவங்கிவிடும். அதனால் தான் குளித்துவிட்டு வந்தவுடன் நன்றாக பசி எடுக்கும். அருவிகளில் குளிக்கும் போது என்ன நடக்கிறது என்றால், நமது கண்கள் வழியாக குளிர்ச்சி உள்ளே செல்லும் மற்றும் வாயை திறக்கும் போது நாக்கிலும் தண்ணீர் படும்.  இந்த இரண்டும் நனையும் போது நேரடியாக நீரின் குளிர்ச்சி கல்லீரல் சென்றடையும். 

இதனால் கண் நோய் மற்றும் கண் பார்வை போன்ற கோளாறுகள் குணமாகும். Beauty Parlor ல் வெள்ளரிக்காயை வட்டத்துண்டுகளாக்கி கண்கள் மேல் வைப்பார்கள். இதனால் கண் குளிர்ச்சியடையும்.

இதில் இருந்து என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கண் மற்றும் நாக்கு தண்ணீரில் நனைய வேண்டும் என்பது தான். இதை என்றோ ஒரு நாள் மட்டும் செய்யாமல் தினமும் நமது கடமைகளில் ஒன்றாக சேர்த்துக் கொண்டால் போதும் உடல் உறுப்புகள் குளிச்சியாகிவிடும்.

இதை எப்படி வீட்டில் செய்யலாம். Shower Bath -ல் தினமும் குளிக்கலாம். வேறு எப்படி செய்யலாம் என்று நீங்களும் சிறிது யோசியுங்கள். ஆனால் கண்கள் தண்ணீரில் நனைய வேண்டும் என்பது முக்கியம். ஒரு நாளைக்கு அரை மணி நேரம் கண்கள் மற்றும் நாக்கு நனையப்பட வேண்டும்.

நீச்சல் தெரிந்தவர்கள் நீச்சல் அடிக்கலாம். நீங்கள் இதை தினமும் செய்து வந்தால் நிச்சயமாக பல மாற்றம் ஏற்படும்  என்பது உண்மை. எனவே எல்லோரும் உறுப்புகள் குளிச்சியடைய இன்றே கடமையை செய்ய ஆரம்பியுங்கள். எல்லோருடைய உறுப்புகளும் குளிச்சியடைய வேண்டும், எந்த நோயும் இல்லாமல் வாழ வேண்டும் என்பது என் விருப்பம் ஆகும்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

No comments:

Post a Comment