Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Thursday 6 December 2012


விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை:


நோய் உருவாகுவதைப் பற்றி பார்த்தோம். அதில் சில காரணங்கள் கூறி இருந்தேன். அதில் இன்னொரு முக்கியமான காரணம் என்னவென்றால் "மன அழுத்தம்" ஆகும். நாம் எல்லோரும் சந்தோசமாக வாழ வேண்டும் என்று தான் நினைக்கிறோம். அதையும் தாண்டி "Stress"  மற்றும்  "Depression" வந்து விடுகிறது. எதனால் உருவாகிறது? அடிப்படை காரணம் என்னவென்றால் "ஆசை" .

1."ஆசையே அழிவுக்கு காரணம்" என்று ஒருவரியில் படித்திருப்போம். ஆனால் அந்த மிகப்பெரிய விஷயத்தை ஒருவரியில் படித்து தெரிந்து வைத்திருக்கிறோம்.

2."பிறரை சார்ந்து வாழ்வது" இந்த இரண்டும் தான் நம்மை கவலை பட செய்கிறது. பிறர்  நம்மை பற்றி என்ன கூறுகிறார் என்பது நம்முடைய மிகுந்த ஆர்வம் ஆகும். இது இயற்கை எல்லோருக்கும் இருக்கக்கூடியதே.

ஆசை என்று எடுத்துக் கொண்டால் அவர் அவருடைய ஆசை நியாமான ஆசை என்று தான் கூறுவர். ஆசைக்காகத்தான் நாம் பிறவியை எடுத்து இருக்கிறோம். நியாயம் எது அநியாயம் எது என்று எப்படி உணர்ந்து கொள்வது? மிக எளிமையாக கூறி விடுகிறேன்,

 *  ஆசை என்பது முடிந்தவரை பிறருக்கு துன்பம் தராத ஆசையாக இருந்தால் மட்டும் போதும். நான் நன்றாக படிக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இது போன்ற ஆசைகள் பிறருக்கு நன்மை, நமக்கும் நன்மையே ஏற்படுத்தும். நமக்கு பிடித்த ஆசை மற்றவருக்கு பிடிக்காமல் இருக்கும். அது துன்பத்தை ஏற்படுத்தும்.  அப்படி ஏற்படும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாது.  உதாரணத்திற்க்கு பெற்றோர்கள் தம் மகன் டாக்டர் ஆக வேண்டும் என்று நினைப்பதும் மகனின் கனவு பெரிய ஓவியராக வரவேண்டும் என்று நினைப்பதும். பின் பையன் ஓவியரான பின் பெற்றோருக்கு பிடிகாமல் போவது நடை முறையில் நாம் பார்க்கும் விஷயங்கள். தம் ஆசைகாக பிடிக்காத விஷயத்தை தினிப்பது இருவருக்கும் துன்பமே. பெற்றோருக்கும் துன்பம், மகனுக்கும் துன்பம். இதுவே கவலையாக மாறி depression ஆக மாறிவிடும். இது போல் தான் எல்லா ஆசைகளும் துன்பத்திற்க்கு காரணமாகிறது.

* இந்த நேரங்களில் தான் முக்கியமான ஒன்று தேவை. அது என்னவென்றால் "விட்டுக்கொடுப்பது" "யார் பக்கம் உண்மை அதிகம் இருக்கிறதோ" அவர்களுக்கு அந்த ஆசையை விட்டு கொடுத்துவிட்டால் பிரச்சனை வராது.

பிறர் சொல்லும் வார்த்தைகளை வைத்து தான் நாம் வாழ்கிறோம். ஒரு முடிவு எடுப்பதற்க்குள் பல குழப்பங்கள் ஏற்படும். பிறர் நம்மை பற்றி சொல்லும் கருத்துக்கு முக்கியதுவம் கொடுக்க தேவையில்லை. நம்மைபற்றி நமக்கு தெரியும் போது பிறர் சொல்லும் கருத்தை உள்வாங்க தேவையில்லை.

ஆசை மற்றும் பிறர் கருத்துக்கு முக்கியதுவம் கொடுப்பதை நிறுத்திவிட்டால் எந்த ஒரு "Stress"  மற்றும்  "Depression" ஏற்படாது. நாம் மனதை அமைதியாக வைத்துக் கொண்டால் தான் உடம்பு நன்றாக இருக்கும். எனவே எல்லோரும் விட்டுக் கொடுத்து வாழ கற்றுக் கொண்டால் போதும் இனி வாழ்க்கை சூப்பராக இருக்கும்.

                "விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை. 
                  கெட்டுப்போபவர் விட்டுக்கொடுப்பதில்லை"


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

No comments:

Post a Comment