இறைவனின் பிரமாண்டம் : (பகுதி -2)
கடவுள் என்ன தேவையோ அதையெல்லாம் முன்பே அறிந்து அனைத்தையும் அளித்துள்ளார். ஆனால் அதையெல்லாம் குழப்பம் செய்து தவறாக வாழ்ந்துவிட்டு பின்பு எல்லம் வல்ல இறைவனை திட்டுகிறோம். ஆனால் நமக்கு என்னவெல்லாம் தந்தார் என்பதை இறைவனின் பிரம்மாண்டம் என்ற தலைப்பில் ஏற்கனவே தந்துள்ளேன். படிக்காதவர்கள் படித்துவிட்டு வரவும்.
வேறு என்ன அற்புதம் செய்துள்ளார்? உடம்புக்கு மட்டும் அல்லாமல் மனதுக்கும் நிறைய தந்துள்ளார். ஆம், நாம் பல பிறவிகளில் நிறைய பாவங்களை சேர்த்து வைத்திருப்போம். அதை இந்த பிறவியில் கஷ்டங்களாக அனுபவித்துக்கொண்டே இருந்தால் என்ன செய்வது? இதற்கு வழிதான் என்ன?
அவ்வளவுதான் நீங்கள் எல்லா கஷ்டங்களையும் அனுபவித்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை என்று உங்களை கை விட்டு விட வில்லை. அதற்காக ஒரு வழியும் வகுத்து தந்துள்ளார். அந்த வழிதான் "தியானம்" என்ற மிக அற்புதமான ஒன்று. உங்கள் பாவங்கள் அனைத்தும் அழித்துவிடும். "தியானம்" என்பது மன அமைதியாகும்.
அதனால் உடம்புக்கு தேவையானதையும், மனதுக்கு தேவையானதையும் இறைவன் அளித்துள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த இரண்டையும் நன்றாக உபயோகிப்பது யார் கையில் இருக்கிறது? நம் கையில் தான்! எல்லா பிரச்சனைக்கும் வழி தந்துள்ளார். எல்லா சக்தியும் நமக்குள்ளே இருக்கிறது என்பதுதான் உண்மை. எனவே இறைவன் தந்த பரிசை உபயோகிக்க கற்றுக்கொண்டாலே போதும் வாழ்க்கையில் ஜெயித்துவிடலாம்.
இறைவனிடம் போய் கேட்கும் அளவிற்கு அவர் எந்த குறையும் நமக்கு வைக்கவில்லை.
நன்றி,
அன்புடன்,
ஈஸ்வரி
No comments:
Post a Comment