Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Monday 10 December 2012

நாமே நமது நோய்களைப் பற்றி அறிந்து கொள்வது எப்படி?



நாமே நமது நோய்களைப் பற்றி அறிந்து கொள்வது எப்படி என்பதை பற்றி கூற இருக்கிறேன். உடம்பில் ஏதேனும் வலி தோன்றினால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டுமா? அல்லது சிறிய நோய் தானா? என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு உதாரணத்திற்கு காய்ச்சல் ஒரு நாள் மட்டும் வந்தால் அது சிறிய நோய் தான். ஆனால் அதுவே ஒரு வாரம் வரை விடாமல் தொடர்ந்து இருந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்குபஞ்சரில் 2 sittings போட்டால் போதும் காய்ச்சல் ஓடிப்போய்விடும். வாயுத்தொந்தரவு இருந்தால் அவர்களுக்கு முதுகு வலி மற்றும் ஏதாவது ஒரு இடத்தில் பிடித்துக் கொள்ளும். அதுவும் வலி ஏற்படும். அதற்காக பயந்து கொண்டு இருக்கத் தேவையில்லை. வாயு தொந்தரவு இருந்தால் நெஞ்சு கூட வலிப்பது போல் இருக்கும். ஆனால் அது நெஞ்சுவலி கிடையாது. அது போல் நாமே நம்மை புரிந்து கொள்ள சின்ன டிப்ஸ் தரப்போகிறேன்.

1.வயிற்றில் இடது பக்கம் தொடர்ந்து பல நாட்கள் வலித்தால் வயிறு, சிறுகுடல், மண்ணீரல் அல்லது கர்ப்பபை பிரச்சனை என்று அறிந்து கொள்ளலாம். 

2.வயிற்றில் வலது பக்கம் தொடர்ந்து பல நாட்கள் வலித்தால் கல்லீரல், பித்தப்பை, பெருங்குடல் போன்ற பிரச்சனை என்று அறிந்து கொள்ளலாம். 

3.அது போல் மார்பு பகுதியில் இடது பக்கம் வலித்தால் இருதயமும், வலது பக்கம் வலித்தால் நுரையீரல் பிரச்சனை என்று அறிந்து கொள்ளலாம்.

4.அடிவயிற்றில் வலி மற்றும் பின் பக்க வலி என்றால் சிறுநீரகத்தில் பிரச்சனை என்று அறிந்து கொள்ளலாம். 

5.பின்பக்க முதுகில் நடுவில் மேலிருந்து கீழ் வரை வலித்தால் spinal card பிரச்சனை என்று அறிந்து கொள்ளலாம்.

இதை ஏன் கூறுகிறேன் என்றால் ஒரு வாரத்திற்கு மேல் வலி இருந்தால் நிச்சயமாக அது பெரிய பிரச்சனை தான். உடனே மருத்துவரிடம் அனுகவும். தாமதம் செய்ய செய்ய நமக்குததான் கஷ்டம்.

Simple -ஆக சொல்ல வேண்டும் என்றால், எந்த இடத்தில் கை வைத்தால் அதிகமாக வலிக்கிறதோ. அந்த இடத்தில் என்ன உறுப்பு இருக்கிறதோ, அந்த உறுப்பில் தான் பிரச்சனை இருக்கும் என்பதை நாமே தெரிந்து கொள்ள முடியும்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் சின்ன பிரச்சனையை கூட பெரியதாக சொல்லி விடுகிறார்கள். உடனே பயந்து விடுகிறோம். அதனால் பணம் நிறைய விரயம் ஆகிவிடும். நேரமும் வீணாகிவிடும். அதனால் எல்லோரும் சற்று நம் உடம்புடன் இணைந்து இருந்தால் நாமே அறிந்து கொள்ள முடியும் என்பதில் ஐயம் இல்லை. உடம்பில் நிறைய வலி இருந்தும் சிலர் மருத்துவரிடம் அணுகுவது இல்லை. அதுவும் தவறாகும். எப்பொழுது அணுக வேண்டும். அணுக கூடாது என்ற விழிப்புணர்வு வர வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

சாதாரண நோய்களுக்கு சில நேரங்களில் பல Test எடுத்துப் பார்ப்போம். கடைசியில் ஒன்றும் இல்லை என்பார்கள். இதனால் எவ்வளவு செலவு மற்றும் மன அழுத்தம் கூட. ஆனால் உண்மையில் நாள் பட்ட வியாதியாக இருக்கும். அதை அலட்சியமாக விட்டு விட்டு பின் வருந்துவது. இது இரண்டுமே தவறு தான். அதனால் யோசித்து செயல்படுங்கள்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

1 comment: