புதிய திருப்பம் ஏற்படட்டும் !
தியானம் செய்யுங்கள் என்று சொல்லி விட்டீர்கள். அதை செய்ய நேரம் இல்லை என்று கூறாதீர்கள். ஏன் என்றால் அது மிகப் பெரிய பொய். ஏனென்றால் ஏற்கனவே நாம் எல்லோரும் நமக்கே தெரியாமல் தியானம் செய்து கொண்டு தான் இருக்கிறோம். அதுவே நமக்கு தெரியவில்லை.
தியானம் என்றால் என்ன? ஒரு இடத்தில் அமைதியாக அமர்வது அல்ல. அப்பொழுது தான் நிறைய குழப்பங்கள் வரும். "மனம் ஒருமனப்படும்" எல்லாமே தியானம் ஆகும். நமக்கு பிடித்த விஷயங்கள் ஏதாவது ஒன்றை நாம் மனம் லயித்து செய்து கொண்டு இருப்போம். அது எது என்று மட்டும் கண்டுபிடியுங்கள். அதை தினமும் செய்தாலே போதும் "கர்ம வினை" அழியும்.
ஒரு உதாரணத்திற்கு "பாட்டு படிப்பது" நமக்கு பிடித்த விஷயமாக இருக்கும். அதை படிக்கும் போது சுற்றி இருப்பவர்களை மறந்து விடுவோம். மனம் லயித்து விடும். இதுவே தியானம் ஆகும். இது போல் ஒவ்வொருவருக்கும் ஒன்று பிடிக்கும். அது எது என்று கண்டு பிடியுங்கள். உங்களை நீங்களே திரும்பி பாருங்கள். மற்றவர்களை பார்ப்பதை தவிருங்கள். "மன அமைதி" கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும்.
நான் சொன்ன எல்லா விஷயங்களை படித்து விட்டு, "பரவாயில்லை இவுங்க நன்றாக சொல்லுறாங்க" என்று பேசுவதை விட்டுவிட்டு கடைபிடியுங்கள்! புதிய திருப்பம் ஏற்படும் உங்கள் வாழ்வில்!
நன்றி,
அன்புடன்,
ஈஸ்வரி
ஒவ்வொருவருக்கும் ஒன்று பிடிக்கும். அது எது என்று கண்டு பிடியுங்கள். உங்களை நீங்களே திரும்பி பாருங்கள். மற்றவர்களை பார்ப்பதை தவிருங்கள். "மன அமைதி" கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும்.
ReplyDeleteஅருமையான பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
நீங்கள் மனதிற்கும், உடம்பிற்கும் முக்கியத்துவம் கொடுப்பவராக இருக்க வேண்டும் என்பதை அறிந்து நான் மிகவும் சந்தோஷம் அடைகிறேன்.
Delete