அக்குபஞ்சர் சிகிச்சையின் மகிமை பற்றி கூற இருக்கிறேன். அக்குபஞ்சர் நீடில் போட்டால் எப்படி நோய்கள் சரியாகின்றன ? என்ற சந்தேகங்கள் நிறைய பேருக்கு உண்டு. அதை பற்றிய சந்தேகங்களை சரி செய்ய கடமை பட்டுள்ளேன்.
ஒரு உதாரணத்திற்க்கு இருமல் என்று வைத்துக்கொள்வோம். அதற்கான சக்தி ஒட்டப்பாதையில் நாம் நீடில் போடுவோம். அது சரியாகிவிடுகிறது எப்படி? அந்த சக்தி ஓட்டப்பாதையில் தடை ஏற்பட்டு இருக்கும். அந்த தடையை மட்டும் தான் நாம் எடுத்து விடுகிறோம். மீதமுள்ள வேலையை உடம்பு தானே பார்த்துக் கொள்ளும். மீண்டும் சொல்கிறேன், உடம்பிற்க்கு தன்னைதானே சரி செய்து கொள்ளும் சக்தி உள்ளதால் நாம் வெறும் தூண்டுகோளாக இருந்து நீடில் மட்டும் போட்டால் போதும், மீதியை அதுவே பார்த்துக் கொள்ளும்.
நம் உடம்பை எவ்வளவு சக்தி உள்ளதாக கடவுள் படைத்துள்ளார். நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. நம் தெளிவு என்னவென்றால், நம் உடம்பு தானே வேலையை செய்து கொள்ளும் என்ற உண்மையை புரிந்து கொண்டால் போதும். Allopathy Treatment கூட மாத்திரையை கொடுப்பது மட்டும் தான் Doctor வேலை. மீதி வேலையை செய்வது யார்? நம் உடலில் உள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் தான். நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நமக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் என்று தான் கூறுவேன். அதை தயவு செய்து கெடுத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் வெளியில் கிடைக்கும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆனால் உடம்பின் உள் உறுப்புக்கு முக்கியத்துவம் தருவதில்லை.
வேலை செய்யும் போது கையில் கத்திபட்டு இரத்தம் வந்துவிடுகிறது. கையை கிழித்துக் கொள்வோம். இது ஒரு சாதாரண விஷயம். ஆனால் நன்றாக கவனியுங்கள். முக்கியமான ஒன்றை கூறப்போகிறேன். கையில் கிழித்த இடத்தில் சிலர் கொஞ்சம் மருந்து போடுவர் மற்றும் சிலர் ஒன்றுமே போட மாட்டார்கள். ஆனால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து பாத்தால் அந்த புண் ஆறியிருக்கும். அந்த வெட்டுப்பட்ட இடம் மூடியிருக்கும். அதை நாம் கவனித்து இருக்க மாட்டோம். இனி மேல் கவனியுங்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் உடம்பிற்க்கு தன்னை தானே சரி செய்து கொள்ளும் ஆற்றல் உண்டு என்பது மிகப்பெரிய உண்மையாகும்.
"என்னைப் பொறுத்த வரையில் உடல் உறுப்புகள் தான் டாக்டர் என்று சொல்வேன்" வெளியில் இருக்கக்கூடிய நாம் வெறும் தூண்டுகோள்கள் அவ்வளவு தான்.
எல்லோருக்கும் வரும் சந்தேகம். அக்குபஞ்சர் நீடில் உள்ளே ஏதோ மருந்து அடைத்து வைத்துள்ளார்கள், அதனால் தான் நோய் சரியாகிறது என்பது. ஆனால் அக்குபஞ்சர் நீடிலில் எந்த ஒரு மருந்தும் கிடையாது. ஆனால் மிக அற்புதமாக வேலை செய்யும். அதனால் இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. எந்த ஒரு side effect இல்லாமல் மற்றும் வலியும் இல்லாமல் நோய் குணமாகும் நல்ல ஒரு இறை மருத்துவம் ஆகும்
நன்றி,
அன்புடன்,
ஈஸ்வரி
படம் : நன்றி கூகுள்
really interesting news...
ReplyDeleteThanks for your comments ..
ReplyDeleteஅன்புடன் திருமதி ஈஸ்வரி சரவணா அவர்களுக்கு வணக்கம் அக்குபஞ்சரில் மருத்துவம் பார்க்க சென்னையில் சிறந்த மருத்துவர் முகவரி தெரிவிக்கவும். நன்றி.. நக்கீரன். email: nakkeeran1964@gmail.com தயவு செய்து தெரிவிக்க வேண்டுகிரேன், நன்றி.
ReplyDeleteToday only I saw your message. Sorry for the inconvenience in this case. I am living in Chennai, Choolaimedu. Please call me over phone for further details.
ReplyDelete